"What is truth?" - Pilate
"Everyone who belongs to the truth listens to my voice" - Jesus
உண்மை என்றால் என்ன? - பைலட்
உண்மையை சேர்ந்தவர்கள் என் குரலை கவனிப்பார்கள் - கர்த்தர்
உண்மை ஒரு கருத்தா, புரிதலா அல்லது மனித வாழ்க்கையேவா? உணமையை நாடுபவரிடம கர்த்தர்் தானே உண்மை என்பது எவ்வளவு கவித்துவமான பதில்!
ஆனாலும் கர்த்தரின் பதில் முழுக்க சரி அல்ல. அதாவது தர்க்க ரீதியாக. மழையில் நனைந்த படி நிற்கிறீர்கள். அப்போது மழையில் நிற்கிறீர்களா? மழைக்குள் இருக்கிறீர்களா? அல்லது மழையாகவே மாறி விடுவீர்களா? கர்த்தரின் பதில் மூன்றாவது சாத்தியம் போன்றது. செக்ஸில் ஈடுபடும் போது அந்த அனுபவத்தில் கலக்கிறோமா அல்லது செக்ஸாகவே மாறுகிறோமா?
ஒரு மனிதன் தன்னை ஒரு கருத்தாக அல்லது அனுபவமாகவே நினைக்க முடியுமா? அப்படியென்றால் கர்த்தரின் அந்த பதிலில் உள்ள "நான்" யாரைக் குறிக்கிறது? அவர் நானே உண்மை என்றால் நான் வேறு உண்மை வேறல்ல என்று பொருள். அது சரி என்றால் அவர் தன்னை "நான்" என்றே அடையாளப்படுத்த முடியாதே?
நானை முன்வைத்து அடையாளப்படுத்துவது நம் மொழியில் தவிர்க்க இயலாத சிக்கல் என்று கூறலாம். மொழி நம் மனதின் பகுதி அல்லவா? பேசும் யோசிக்கும் யாரும் மொழியின் இந்த சிக்கலில் இருந்து விடுபட இயலாதே. கர்த்தரால் தன்னை தானற்று மொழியில் வெளிப்படுத்த இயலாது என்றால் அவரும் உண்மையும் தனித்தனி அல்லவா? எப்படி ஒன்றாக முடியும்?
Comments