முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கத்தியுடன் திரிபவர்கள்

என் அப்பா ஒரு பேனா கத்தி வைத்திருந்தார். அடர்சிவப்பு பிடி கொண்டது. அதை கையில் வைத்து உருட்டும் போது அதன் இதமான குளிர்மை, கனம், அதன் உறுத்தலான கூர்முனை, மூடும் போது சட்டென வெட்கத்தில் சேலை தலைப்பில் பதுங்கும் முகம் போல் அது மறைவது என அந்த கத்தி மீது குழந்தைப் பருவத்தில் எனக்கு ஒரு தனிக்காதல். என் அப்பா அதை பெரும்பாலும் காய்கறி நறுக்கத் தான் பயன்படுத்திய ஞாபகம். எனக்கு அது போல் ஒரு பேனா கத்தி வாங்க வேண்டும் என ஆசை.

வளர்ந்த பின் hiking போது பயன்படுத்தும் ஒரு அலங்காரமான கத்தி வாங்கினேன். ஆனால் அது வெற்று உபகரணம், கடினமான பொருளை வெட்டினால் அதன் விளிம்பு உடைந்து விடும். சில வருடங்களுக்கு முன்பு ஷிலோங் போன போது அங்குள்ள சந்தையில் ஒரு பாட்டியிடம் நிறைய பேனா கத்திகள் பார்த்தேன். அதன் முனைப் பகுதி மேல் நோக்கி வளைவாய் இருந்தது. நல்ல கூர்மை. ஆனால் கனம் குறைவு. அவர் ஐம்பது ரூபாய் சொன்னார். நான் பத்து ரூபாய்க்கு கேட்டேன். அவர் என்னை குத்தி விடுவது போல் முறைத்தார். கொஞ்ச நேரத்தில் திட்ட ஆரம்பித்தவர் அவர் மொழியில் போ போ என சைகை காட்டினார். நான் அவரிடம் முப்பது ரூபாய் என்றேன். அவர் ஒத்துக் கொண்டார். ஆரஞ்சு வண்ண பிடி கொண்ட கத்தியை தேர்ந்தெடுத்தேன்.
 அது ஒரிஜினல் கத்தி. அதன் முனை இன்னும் உடையவில்லை. கூர்மையும் குறையவில்லை. எப்போதும் என் பையிலே வைத்திருப்பேன். பயன்பாடு கருதியல்ல. ஒரு விளையாட்டுக்கு. காதலியின் பெயரை பச்சை குத்துவது போல ஒரு த்ரில்லுக்காக. இன்று பீனிக்ஸ் மால் சென்றிருந்த போது பையை சோதனை போட்டார்கள். “உங்க பையில் கத்தி இருக்கு. அதை வெளியே எடுத்திருங்க” என செக்யூரிட்டி பெண் கீச்சென சொல்ல என கூச்சமாகி விட்டது. அது போதாதென்று எனக்கு பின்னால் பை வாங்க காத்திருந்தவரிடம் “அவரு பையில கத்தி இருக்கு. எடுக்கட்டும். அது வரை வெயிட் பண்ணுங்க” என்றார். என்னை ஏதாவது தீவிரவாதி என அசிங்கமாய் நினைப்பார்கள் என மனதுக்குள் குமைந்தபடி பையில் இருந்து நானே மறந்து போன அந்த பேனா கத்தியை தேடி கண்டெடுத்தேன். இதனிடையே சோதனைக்கான ஆட்களின் வரிசை நீளமாகிக் கொண்டே போக அப்பெண் என்னை காத்திருக்க சொன்னார்.
நான் ஒவ்வொரு பையாய் ஸ்கேன் ஆகி சதுரப் பெட்டியில் இருந்து வெளியே உருண்டு வருவதை, அவற்றின் உள் பிம்பங்கள் சிவப்பு நிற எலும்புக் கூடுகளாய் கணினித்திரையில் தெரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே காத்திருந்தேன். அப்போது அப்பெண் மீண்டும் “சார் உங்க பையில கத்தி இருக்கு” என மற்றொருவரை பார்த்து கத்தினார். “அதை வெளியே எடுங்க”. நான் காத்திருந்த ஒரு நிமிடத்தில் ஐந்து பேருக்கு மேல் பையில் கத்தியுடன் ”பிடிபட்டார்கள்”. அவர்கள் என்னைப் போல் அல்லாது கத்தியை கொண்டு வந்ததற்காய் நியாயங்கள் சொன்னார்கள். ஒருவர் “பழம் நறுக்கிறதுக்கு” என்றார். மாலுக்குள் அவர் ஏன் பழம் நறுக்கப் போகிறார்? அவர் எடுத்த கத்தி பழக்கத்தியும் அல்ல. இப்படி பிடிபடும் கத்திகளை போட்டு வைக்க அப்பெண் ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருந்தார். என் கத்தியை இறுதியாய் வாங்கி வைத்தவர் “போகும் போது வாங்கிக்கிங்க.” என்றார்.
என்னை ஒரு கேள்வி தொந்தரவு செய்தது. ஏன் இவ்வளவு பேர் கத்தியுடன் திரிகிறார்கள்? என்னைப் போல் சும்மா விளையாட்டுக்காய் என நான் நம்பவில்லை. இது போன்ற பொதுவிடங்களில் என் பாக்கெட்டில் மட்டும் தான் கத்தி இருக்கிறது என த்ரில்லாய் நினைத்துக் கொள்வேன். ம்ஹும். ஒவ்வொருவரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...