முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” பற்றி தம்பிச்சோழன்

Image result for கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் + ஆர்.அபிலாஷ்

நேற்று நண்பர் தம்பிச்சோழனுடன் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” பற்றி விவாதித்தது ஒரு உற்சாகமான அனுபவம். ”ஒவ்வொரு காட்சியும் ஒரு சினிமாவை போல் கண்முன் ஓடுகிறது, இதை சுலபத்தில் படமாக்க முடியும்” என்றார்.

 நாவல் அவருக்கு பல மலையாள படங்களை நினைவுபடுத்தியதாய் சொன்னார். குறிப்பாய் பத்மராஜனின் ”கரியில காற்று போலே”. எனக்கும் அது மிகவும் பிடித்த படம். குறிப்பாய் அந்த முடிவு. புலனாய்வு அதிகாரியான மோகன் லால் ஏன் தன் தம்பியின் குற்றமன்னிப்பு கோரும் தற்கொலை கடிதத்தை எரிக்கிறார் எனும் கேள்வி.

Image result for தம்பிச்சோழன்

நாவல் கச்சிதமாய் வந்திருக்கிறது என்றார். நான் அவரிடம் எப்படி இதை எழுதினேன் என விவரித்தேன். நான் வழக்கமாய் ஒரு கதைக்கருவை மனதில் இட்டு உருட்டிக் கொண்டே இருப்பேன். அதன் பிறகு தகவல்கள் திரட்டி, களத்தை முடிவு செய்து, கதை அமைப்பை திட்டமிட்டு பொறுமையாய் ஆரம்பிப்பேன். நாவல் தன் போக்கில் வளர்வதையும் விரும்புவேன். ஆனால் இம்முறை ஒரே வாரத்தில் ஒரு நாவலை எழுத முடிவு செய்தேன். தினமும் ஐந்து மணிநேரம். ஏழு நாட்களுக்குள் எவ்வளவு வருமோ அதுவே நாவலாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். எந்த நெருக்கடியும் இல்லை. சும்மா ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். இன்னொரு காரணம் இந்த நாவலின் அமைப்பையும் முடிவையும் முன்பே திட்டமிட்ட போது நூறு பக்கம் தாண்டினால் சுவையிழந்து விடும் என பட்டது. ஆனால் என்னால் அத்தியாயத்துக்கு இவ்வளவு பக்கங்கள் என திட்டமிட்டு எழுத இயலாது. அதனால் மறைமுகமாய் ஒரு கால கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன். கூடுதலாய் மூன்று நாட்கள் ஆனது. பத்து நாட்களில் முடித்து விட்டேன்.

தம்பிச்சோழன் “உங்கள் வசனங்கள் கூர்மையாய் உள்ளன. அந்த விசயத்தில் முதிர்ந்து விட்டீர்கள்” என்றார். நான் அது இமையத்தின் தாக்கம் என்றேன். தொடர்ந்து நாங்கள் இமையத்தின் படைப்புகள் குறித்து சிலாகித்துக் கொண்டோம். தம்பிச்சோழனின் வாசிப்பு விரிவு வியப்பூட்டுகிறது. பத்து நிமிடத்தில் இருபது புத்தகங்களை குறிப்பிடுகிறார். சோழன் மற்றும் லஷ்மி சரவணகுமார் கையில் தமிழ் சினிமா பத்திரமாகவே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...