முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” பற்றி தம்பிச்சோழன்

Image result for கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் + ஆர்.அபிலாஷ்

நேற்று நண்பர் தம்பிச்சோழனுடன் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” பற்றி விவாதித்தது ஒரு உற்சாகமான அனுபவம். ”ஒவ்வொரு காட்சியும் ஒரு சினிமாவை போல் கண்முன் ஓடுகிறது, இதை சுலபத்தில் படமாக்க முடியும்” என்றார்.

 நாவல் அவருக்கு பல மலையாள படங்களை நினைவுபடுத்தியதாய் சொன்னார். குறிப்பாய் பத்மராஜனின் ”கரியில காற்று போலே”. எனக்கும் அது மிகவும் பிடித்த படம். குறிப்பாய் அந்த முடிவு. புலனாய்வு அதிகாரியான மோகன் லால் ஏன் தன் தம்பியின் குற்றமன்னிப்பு கோரும் தற்கொலை கடிதத்தை எரிக்கிறார் எனும் கேள்வி.

Image result for தம்பிச்சோழன்

நாவல் கச்சிதமாய் வந்திருக்கிறது என்றார். நான் அவரிடம் எப்படி இதை எழுதினேன் என விவரித்தேன். நான் வழக்கமாய் ஒரு கதைக்கருவை மனதில் இட்டு உருட்டிக் கொண்டே இருப்பேன். அதன் பிறகு தகவல்கள் திரட்டி, களத்தை முடிவு செய்து, கதை அமைப்பை திட்டமிட்டு பொறுமையாய் ஆரம்பிப்பேன். நாவல் தன் போக்கில் வளர்வதையும் விரும்புவேன். ஆனால் இம்முறை ஒரே வாரத்தில் ஒரு நாவலை எழுத முடிவு செய்தேன். தினமும் ஐந்து மணிநேரம். ஏழு நாட்களுக்குள் எவ்வளவு வருமோ அதுவே நாவலாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். எந்த நெருக்கடியும் இல்லை. சும்மா ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். இன்னொரு காரணம் இந்த நாவலின் அமைப்பையும் முடிவையும் முன்பே திட்டமிட்ட போது நூறு பக்கம் தாண்டினால் சுவையிழந்து விடும் என பட்டது. ஆனால் என்னால் அத்தியாயத்துக்கு இவ்வளவு பக்கங்கள் என திட்டமிட்டு எழுத இயலாது. அதனால் மறைமுகமாய் ஒரு கால கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன். கூடுதலாய் மூன்று நாட்கள் ஆனது. பத்து நாட்களில் முடித்து விட்டேன்.

தம்பிச்சோழன் “உங்கள் வசனங்கள் கூர்மையாய் உள்ளன. அந்த விசயத்தில் முதிர்ந்து விட்டீர்கள்” என்றார். நான் அது இமையத்தின் தாக்கம் என்றேன். தொடர்ந்து நாங்கள் இமையத்தின் படைப்புகள் குறித்து சிலாகித்துக் கொண்டோம். தம்பிச்சோழனின் வாசிப்பு விரிவு வியப்பூட்டுகிறது. பத்து நிமிடத்தில் இருபது புத்தகங்களை குறிப்பிடுகிறார். சோழன் மற்றும் லஷ்மி சரவணகுமார் கையில் தமிழ் சினிமா பத்திரமாகவே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...