என்.டி ராஜ்குமாரின் இந்த கவிதையில் வரலாறும் (மண்டைக்காட்டு கலவரம்) மென் உணர்வுகளும்
(காதல்) எப்படி நுணுக்கமாய் பின்னப்பட்டிருக்கிறது பாருங்கள். பலமுறை ரசித்து படிக்க
வேண்டிய கவிதை:
சிலர் பழசையெல்லாம் மறந்து விட்டார்கள்
ஆனாலும் எல்லாம் கண்முன் மிதந்து
கொண்டிருக்கிறது
கடலில் பிடித்து முதலில் விற்ற
மீன் குட்டையின்
செள்ளுகள் ஒட்டிய உண்டியல் காசுகள்
கருவாடு விற்ற காசில்
வாங்கி வைத்த சூடத்தின்
வெளிச்சம் கண்டு சிரித்தது மூக்குத்தி
கோவிலுக்குள் வைத்து ஆக்கிய
மீன்குழம்பின் வாசத்தில்
ருசி கண்ட பூனையாய்
தொங்க போட்டுக் கொண்டிருந்த அம்மனின்
நாக்கு
எல்லாம் நேற்று நடந்தவை போல் இருக்கிறது
கடைசியாக கலவரத்துக்கு முந்தைய
திருவிழாவில்
மண்டைக்காட்டு அம்மன் கோவிலில்
வைத்து சந்தித்தது
கருத்துகள்
மூன்று முறை வாசித்தேன்....:)