முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேலியோவுக்கு வந்த சவால்


சிலர் வருடாவருடம் மலைக்கு விரதமிருந்து போவது போல் நான் சளி, தும்மல், இருமல், ஜுரத்துடன் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் ஆஸ்பத்திரிக்கு படையெடுப்பேன். என் கணக்குப் படி இந்நேரம் நான் குறைந்தது நான்கு முறையாவது ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்க வேண்டும். கையில் இருந்து ஆயிரம் ரூபாவுக்கு மேல் காலியாகி இருக்க வேண்டும். ஆனால் சளி லேசாய் எட்டிப் பார்த்து விட்டு மறைந்து விட்டது. ஒரு தும்மல், லேசான இருமல் கூட இல்லை. சரி, நம் பேலியோ வேலை செய்கிறது என நினைத்தேன்.

ஆனால் நேற்று விடிகாலையில் லேசாய் தொண்டை வலித்தது. ஜலதோசம் பலமாய் வந்து தாக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. கடும் களைப்பு. ஆஹா நம் பேலியோவுக்கு முதல் சவால் வந்து விட்டது என நினைத்தேன். இது போன்ற சந்தர்பங்களில் மாலைக்குள் எனக்கு மூக்கு அடைத்து விடும். இரவு தொண்டை கடுமையாய் வலிக்கும். அடுத்த நாள் காலை பேசவே முடியாது. வீரியம் மிக்க ஆடிய்பயாட்டிகள் எடுத்துக் கொள்ளவிடில் நான் ஒரே வாரத்தில் ஜுரத்தில் படுத்து விடுவேன். ஆனால் நான் நேற்று எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. உப்புநீரை கொப்பளிக்கவில்லை. கஷாயம், வெந்நீர் குடிக்கவில்லை. ஓய்வெடுக்கவில்லை. இரவு கடும் பனியில் வண்டியோட்டி வீட்டுக்கு வந்தேன். நள்ளிரவு தாமதமாய் படுத்தேன். ஆனால் காலையில் சளியின் சுவடு கூட இல்லை.
இப்படியாக தனக்கு வந்த முதல் முக்கிய சவாலை பேலியோ வெற்றிகரமாய் கையாண்டு விட்டது.

ஒரு பாடிபில்டரை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். பதினாறு வருடங்களாய் பயிற்சி செய்து உடம்பை கற்சிலை போல் வைத்திருக்கிறார். ஆனால் பேச்சினிடையே லொக்கு லொக்கு என்று இருமினார். வெளியே என்ன இருக்கிறது என்பதல்ல உள்ளே என்ன போகிறது என்பது தான் நம் உடல்நிலையை தீர்மானிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...