முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பின்நவீன தலைமுறை

Image result for south korea army

என் சகபேராசிரியர் தன் வகுப்பில் மொபைல் பார்த்துக் கொண்டிருந்த மாணவனிடம் இருந்து மொபைலை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டார். பையன் தென்கொரியாவை சேர்ந்தவன். அவன் அவரைத் தேடி துறைக்கு வந்து மொபைலை திரும்பத் தரக் கேட்டான். அவர் கேட்டார் “ஏம்பா வகுப்பில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாதுன்னு தெரியாதா?” அவனது பதிலைக் கேட்டு அருகில் இருந்த எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
“சார் எனக்கு போரடிச்சது. அதனால் தான் மொபைலை பார்த்தேன்.”
நானெல்லாம் அவனிடத்தில் இருந்திருந்தால் வீட்டில் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது, அதனால் மொபைலை எடுக்க வேண்டியதாகி விட்டது என வழக்கம் போல் புளுகி இருப்பேன்.

பேராசிரியர் ஒரு ரசிகர். அதனாலே சிரித்தபடி அவனுடன் அரட்டையடித்தார்.
“சரி என்ன பார்த்தாய்?”
“கேம் விளையாடினேன்.”
“என்ன கேம், புளூவேலா?”
“இல்லை சார். ஸ்விட்சிங் கலர்ஸ்”
“சரி, ஏன் போரடிச்சுது?”
“வகுப்பில் வேறு பையன்கள் பிரசெண்டேஷன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் தான். ஆனால் நீங்கள் பேசினால் எனக்கு போரடிக்காது சார்.”
“ஓ அப்படியா? சரி நீ இப்படி சொல்கிறாய் என உன் வகுப்பு நண்பர்களிடம் சொல்லட்டுமா?”
“ஐயோ வேண்டாம் சார், அவர்கள் பேசியதால் போரடிக்கவில்லை. அவர்கள் ரொம்ப மெல்ல பேசினார்கள். எனக்கு சுத்தமாய் கேட்கவில்லை. அதனால் தான் போரடித்தது.”
“கேட்கவில்லை என்றாலும் அவர்களை சத்தமாய் பேச கேட்க வேண்டியது தானே?”
இதற்கு பதிலளிக்காமல் அவன் இளித்தான்.
இதை அடுத்து பேச்சு அவனது ஊரைப் பற்றி திசை மாறியது.
“சரி நீ கொரியாவுக்கு எப்போது போகப் போகிறாய்?”
“எனக்கு அங்கே போகவே வேணாம் சார்.”
“ஏன்?”
“அங்கு போனால் நான் ரெண்டு வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும்.”
“ஏன்?”
“அது எங்க ஊர் சட்டம்.”
“சரி எண்ண பண்ணலாம் என இருக்கிறாய்? நிரந்தரமாய் இங்கேயே தங்க முடியாதில்லையா?”
நான் குறுக்கிட்டு விளையாட்டாய் சொன்னேன், “ஒரு வழி இருக்கிறது. ஒரு இந்தியப் பெண்ணை மணந்து இந்திய பிரஜையாகி விடு.”
அவன் உடனே ரொம்ப சீரியஸாக “ஆமா சார். நானும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்க சரியா சொல்லிட்டீங்க. நான் இங்கே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”
நான் மனதுக்குள் “அடப்பாவி” என்றேன்.
பேராசிரியர் தொடர்ந்தார், “ஆனால் ராணுவப் பயிற்சி நல்லது. ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் உனக்கு அளிக்கும்.”
“எனக்கு அதெல்லாம் வேண்டாம் சார்.”
“வடகொரியாவுடன் திடீரென போர் ஏற்பட்டால் நீங்கள் பிரஜைகள் எல்லாம் ராணுவத்தில் உடனடியாய் சேர்ந்து நாட்டுக்காக போரிட வேண்டியிருக்கும். அப்போது இப்பயிற்சி மிகவும் பயன்படும் இல்லையா?”
அவன் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
“சார் அதெல்லாம் டைம் வேஸ்ட்.”
“எது டைம் வேஸ்ட்?”
“ராணுவம், போர் அதெல்லாம். ரெண்டு வருடத்தை அப்படியே முழுசா என்னால பயிற்சிக்கு வீணடிக்க முடியாது.”
“அப்புறம் அந்த நேரத்தில் வேறேன்ன செய்வாய்?”
“ஜாலியாய் இருப்பேன்.”
“மொபைலில் கேம் விளையாடி…கல்யாணம் பண்ணி…”
“ஹி ஹி”
“சரி இந்த மொபைலை திரும்பத் தந்தால் எனக்கு என்ன பயன்?”
“சார் நமக்குள் ஒரு உடன்படிக்கை. நீங்க மொபைலை கொடுங்க, நான் இனிமே வகுப்பில் பேசவே மாட்டேன்.”
“சரி நான் பாடமெடுப்பது போரடித்தால்…”

“மொபைலில் கேம் விளையாடுவேன் சார்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...