Skip to main content

Posts

Showing posts from April, 2018

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உன்னைப் பார்ப்பது புதிதாக இல்லை

  உன்னைப் பார்ப்பது புதிதாக இல்லை நீ நீண்ட காலமாய் இருக்கிறாய் என்னுடன் ஆனால் உன்னை   இதோ இப்போது தான் சந்தித்தேன் விரல்களை கோர்த்துக் கொண்டு அடர்ந்த நிழல்களின் மீதாய் நடந்தோம் உதிர்ந்த மஞ்சள் பூக்கள் நம் காலடியில் கசங்கி விழித்து பார்த்து உயிரிழப்பதைக் கண்டோம் எனக்கு என் குரலையே கேட்பது போலிருக்கிறது என்றேன்

கல்வியில் மதத்தின் இடம் என்ன? (2)

அடுத்து மதசார்பற்ற கல்விச் சூழல் பற்றி பூவண்ணன் கணபதியின் கருத்துக்களும் என் எதிர்வினையும். பூவண்ணன் கணபதி: மதங்கள் , கடவுள்கள் மீதான வெறுப்பு வேறு அதன் மீதான சந்தேகங்கள் , நம்பிக்கையினமை , தர்க்கம் சார்ந்த மறுத்தல்கள் வேறு   மத நம்பிக்கை தான் மாட்டுக்கறியை , ஒரே கோத்திர காதலை , பன்றிக்கறியை , திருமணம் சார்ந்த , கைம்பெண் சார்ந்த சடங்குகளை தூக்கி பிடிக்கவோ மூர்க்கமாக மறுக்கவோ வைக்கிறது   கலையே நம்பிக்கையின்மையின் காரணமாக எழும் ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது .

கல்வியில் மதத்தின் இடம் என்ன? (1)

முகநூலில் ஷோபா சக்தி கல்வி நிலையங்களில் மதசார்பு இருக்கக் கூடாது என ஒரு பதிவு இட்டிருந்தார். அவரது பதிவின் பின்னணியுடன் தொடர்பின்றி எனக்கு வேறொரு கருத்து தோன்றியது. இந்திய சூழலில் மதத்தின் மெய்யியலுடன் சற்றும் தொடர்பற்ற ஒரு வறட்டுத்தனமான பகுத்தறிவு கல்வி இங்கே நம் பள்ளி கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது. அது இங்கே ஒருவித பண்பாட்டு வறுமையை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பற்றி நான் என் முகநூல் பக்கத்தில் எழுதினேன். // மத சார்பின்மை மாணவர்களை மழுங்கடித்து விடுகிறது என்பது என் எண்ணம். அறிவுடன் உணர்ச்சிகரமான கவித்துவமான பிடிப்பு ஏற்பட ஒரு மீபொருண்மை ஆர்வம் வேண்டும். அதை மதம் தரலாம். மத ஈடுபாடின்மை ஒரு வறட்டுத்தனமான தட்டையான தர்க்க கல்விக்கு மட்டுமே வழிவகுக்கும். // இதைத் தொடர்ந்து என் முகநூல் பக்கத்தில் எனக்கும் தேவா சத்யாவுக்கும் மற்றும் பூவண்ணன் கணபதிக்கும் நடந்த சிறு விவாதம் இது. இரு பகுதிகளாய் அதை உங்களுடன் பகிர்கிறேன்.

தண்டனைக்கு எதிரான ஆறு வாதங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மரண தண்டனை என்பது நம் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்ட பின் பலரும் இந்த தண்டனைக் கடுமையை பாராட்டி வருவதை பார்க்கிறேன். இது ஒரு சுயஏமாற்றலே அன்றி இதில் எந்த பயனும் இல்லை என்பது என் தரப்பு. தண்டனைக்கு எதிரான எனது ஆறு வாதங்களை கீழே தருகிறேன்.

நம் காலத்தின் பாசிசம் எது?

எஸ்.வி சேகர் பிரச்சனையை ஒட்டி ராஜன் குறை எழுதிய ஒரு பதிவின் மீதான என் எதிர்வினை இது. அணி சேர்ந்து அரசியல் போராட்டம் செய்யும் போது எப்படி முரண்களை கையாள்வது என்பதே ராஜன் குறையின் குறிப்பின் மையம். தெளிவும் சித்தாந்த ஒழுங்கும் கொண்டு விவாதித்து முரண்களை கையாள வேண்டும் என அவர் சொல்வதாய் நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு அவரது தரப்பில் உள்ள மாறுபட்ட கருத்து இது: அணி அமைத்து செய்யப்படும் அரசியலின் அடிப்படையில் சில சிக்கல்கள் இல்லையா ? ஒரு மக்களாட்சி அமைப்பில் பிரதிநுத்துவ அரசியலுக்கு குழு செயல்பாடு தேவையே. ஆனாலும் இக்குழு செயல்பாடுகள் மானுட அறத்தை மறுக்கும் எல்லைக்கும் போகலாமே ? அப்போது என்ன செய்வது ? குழு அரசியலில் சுயசிந்தனை , ஒருவரது அற உணர்வுக்கு அங்கு இடம் என்ன ? என் குழு ஒரு பொதுநல நோக்குக்காக ஒரு தப்பான காரியத்தை ஆதரித்தால் நான் என்ன செய்ய வேண்டும் ?

எப்படி வாசிப்பது? (2)

5)    வாசிப்பு ஒரு பழக்கம். உடற்பயிற்சி போல. தினமும் குறிப்பிட்ட மணிநேரங்கள் படித்தால் சிரமம் தெரியாமல் படிக்க முடியும். ஆனால் அப்பழக்கம் விட்டுப் போனால் திரும்ப உட்கார்ந்து படிக்க முடியாது. கவனம் சிதறும். ஒரு நாளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிப்புக்கென ஒதுக்குங்கள். அப்போது மட்டும் படியுங்கள். அப்போது படிப்பதை மட்டும் செய்யுங்கள்.

எப்படி வாசிப்பது (1)

இன்று புத்தக தினம். நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். இதை ஒட்டி வாசிப்பு குறித்த எனது சில நம்பிக்கைகள், கருத்துக்கள், பார்வைகளை எட்டாக சுருக்கி கீழே தருகிறேன். 1)    பரிந்துரை பட்டியல்களை பின்பற்றாதீர்கள். புத்தகத் தேர்வு ஒரு நண்பனை, காதலியை தேர்வதைப் போன்றது. அது ஒரு உறவு. உங்கள் சிந்தனையை, மொழியை, தோரணையை மாற்றப் போகிற உறவாடல். உங்கள் உள்ளுணர்வு, நம்பிக்கைகள், தனிப்பட்ட தேடல் ஆகியவை ஒட்டி ஒரு நூலை தேர்ந்தெடுங்கள். யாருமே பொருட்படுத்தாத ஒரு நூல் கூட உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். உ.தா., தமிழ் இலக்கிய உலகில் யாரும் ருத்ரனை பொருட்படுத்தி படிக்க பரிந்துரைக்க மாட்டார்கள். ஆனால் பதின் வயதில் நான் வாசிக்க நேர்ந்த அவரது கட்டுரை நூல்கள் இன்று வரை என்னை என்னையறியாது வழிநடத்துகின்றன. ஒரு நட்பு எப்படி இருக்க வேண்டும் என அவர் விளக்கியதையே இன்றும் பின்பற்றுகிறேன். அவரது டெஸிடெரட்டா கவிதை மொழியாக்கம் மற்றும் விளக்கத்தை நான் என்றும் மறக்க முடியாது. ருத்ரனை விட சு.ரா பல மடங்கு மேலான எழுத்தாளர்; சிந்தனையாளர்; கட்டுரையாளர். ஆனால் சு.ராவின் கட்டுரைகளை சுலபத்தில் மறந்து விட்டேன். ருத...

The Dream at Daybreak (2) - Manushya Puthiran

Unending downpour An unknown city An ancient house As I bend To kiss your vagina Each time The scream of a mad woman From the neighbouring room Assails us

It Poured 45 cm in a One Night - Manushya Puthiran

It could have been The total rainfall for a year It might have been The complete pouring of A season It may have been The greatest downpour Of the decade It poured 45 cm in one night

A Mild Sunshine - Manushya Puthiran

Between a massive rainfall And another immense downpour Arrives a mild sunshine It strolls Up and down the courtyard, As if Nothing could afflict people Anymore

That Day - Manushya Puthiran

  “What were you up to this same day last year?” She queried, As she secretly read through my last year’s personal diary That I had left a particular day alone blank confused her

Winter Clothing - Manushya Puthiran

Every time I buy Winter clothing the thought crosses my mind “Why is this not as serviceable as a warm skin?” Translated by R. Abilash

என் வாழ்வின் சிறந்த ஐந்து நூல்கள் சவால்

போரும் அமைதியும் – தல்ஸ்தாய் தெய்வம் உண்மையில் இருந்து அவரை தரிசிப்பது போன்றதே இந்நாவல். இதைப் படித்த பின் நாம் படிக்கிற நாவல்கள் இதன் சுருக்க வடிவம் / துண்டு துக்கடா போல தோன்றுவதை தவிர்க்க முடியாது. நார்வேஜியன் வுட் – முராகாமி இதை முராகாமியின் சிறந்த நாவல் என சொல்ல மாட்டேன். எனிலும் ஆத்மார்த்தமான, நிர்மலமான காதல் கதை என்கிற வகையில், கைவிடப்பட்ட வாழ்க்கையின், கையாலாகாத உறவுநிலைகளின் தத்தளிப்புகளை அவ்வளவு கவித்துவமாய், நகைச்சுவையாய் அவர் சித்தரித்ததை கருதுகையில் இந்நாவலை மறக்க முடியாது.

The Other - Manushya Puthiran

  The co-passenger wears the same shirt as mine and sits next to me I get down at a stop before my intended destination

At the End of Diwali - Manushya Puthiran

This Diwali Winds up with A burn wound With A meek sob A small consolation A few assurances A little hurt Like the love About to wilt away Translated by R. Abilash

A Human-like Raindrop - Manushya Puthiran

So many raindrops baby and adult A raindrop tall as a human strolls along the street With thousands and thousands Of sprinkles for company The raindrop holds its dragging dress up, anxious to keep it dry, and rushes under a teeny umbrella

The Girl Who is a Stranger - Manushya Puthiran

I saw her photo In the wallet I picked up on the street The purse-snatcher possibly took into possession everything except the picture before tossing away the wallet

ஆஸ்திரேலிய அணியில் இருந்து பெரியாரியவாதிகள் வரை: பாசாங்கா இயல்பா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரும் உப - தலைவரும் ( ஸ்மித் மற்றும் வார்னர் ) விதிமுறைக்கு மாறாக பந்தை உருமாற்ற முயன்ற குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு தத்தம் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள் . ஸ்மித் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிக்கு வேண்டி இருக்கிறார் . ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான கிளார்க் , கில்கிறிஸ்ட் ஆகியோர் ஸ்மித் பதவி விலக வேண்டும் என கோரி உள்ளனர் . இத்தருணத்தில் பல கிரிக்கெட் ஆர்வலர்கள் முன்னுள்ள கேள்வி கிரிக்கெட்டின் விழுமியங்களை உன்னதமாய் கருதி கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தமது பண்பாட்டு மேன்மையை பறைசாற்றும் ஆஸ்திரேலியர்கள் ஏன் இப்படி வரலாற்றில் இது போல மிக அதிகமாய் விதி மீறல்களை , ஒழுக்கப் பிறழ்வுகளை , பண்பாட்டு சீரழிவுகளை நிகழ்த்தியவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்பது . இந்த முரணை எப்படி புரிந்து கொள்வது ? இது ஒரு வெளிப்படையான பாசாங்கா அல்லது விழுமியங்களை ஆவேசமாய் பறைசாற்றுபவர்கள் எதிர்கொள்ளும் தவிர்க்க இயலாத ஒன்றா ? சாதி ஒழிப்பு , சமூக சீர்திருத்தம் என வாழ்வின் வேறு களங்களில் , லட்சியவாதிகளின் சரிவுகளைப் பற்றி இது நமக்கு சொல்லும் சேதி...

Alone is Coffee - Manushya Puthiran

A kiss is like any kiss If not for those poems on kisses a kiss is just another blossom in a flower basket

State of being - Manushya Puthiran

To stay with you To be with you that was my constant prayer The day you arrived and claimed ‘Here I come, just only to be with you ’, I realized that               being is always a state of waiting

When You Come In - Manushya Puthiran

“See, when you knock and enter my room, I am penning a poem about you. I am then stranded midway through the poem. Could you please wait outside?” I said uneasily.

Unmelting Moments - Manushya Puthiran

I pretended not to have noticed you staring into my cold eyes Why are those eyes stripped of love, devoid of affection? Why are they unwelcoming Why are they distant?

Enduring - Manushya Puthiran

If you don’t come now You may arrive Any time I have no choice but to think along these lines Since I have   no time to walk away from you no door to slam at you Translated by R. Abilash

துயரத்தின் ஊற்றுகள்

இருப்பை அறிதல் ஜானகிராமன் நேற்று எழுப்பிய மற்றொரு கேள்வி இது: “ ° மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும் , துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா ?” இக்கேள்வி மிக மிக சிக்கலானது. ரமணரும் ஜித்து கிருஷ்ணமூர்த்தியும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆகையால் இதற்கு ஒரு திருப்தியான பதிலை என்னால் அளிக்க இயலாது. என் அனுபவம், நம்பிக்கை, மற்றும் வாசிப்பின் அடிப்படையில் எளிமையாக இதற்கு பதிலளிக்க முயல்கிறேன். ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்தால் துயரம் அவரை சூழ்ந்து விடுமா? மகிழ்ச்சியை ஒருவர் கடுமையாய் உழைத்து போராடி அடைய வேண்டுமா?

இலக்கியமும் வாழ்வும் (1)

அன்புள்ள அபிலாஷ் சாருக்கு ,            விஷ்ணுபுரம் விழாவில் தங்களுடனான சந்திப்பிற்கு பிறகு எழுதும் கடிதம். உங்கள் வலைப்பூவில் வெளியான கட்டுரைகள் மகிழ்ச்சியாக இருப்பது , போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்ற இரண்டையும் வாசித்தேன். சமீபத்தில்" Zor b a the Greek" வாசித்தேன். அதில் மைய பாத்திரங்களான ஜோர்பாவும் , பேசிலும் இணைந்து மலையிலிருந்து மரங்களை கப்பிகள் வழியே இறக்கி் பெரும் பொருளீட்ட நீண்ட நாட்களாக   திட்டமிட்டு ஒரு இறங்குதளத்தை உருவாக்குவார்கள் மரஙகளை அதன் வழியே இறக்கும் போது சரிந்து விழுந்து எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும் . அப்போது Zorba அந்த துயரத்திலும் தன்னை கரைத்து மகிழ்ச்சியாய் இருப்பான். அதுபோன்று துயரத்தின் ஆழங்களுக்கு நம்மை ஒப்பு கொடுத்து மகிழ்வது   சாத்தியமா ?

கன்னட மொழி பயங்கரவாதம்

இது சமஸ் தி ஹிந்துவில் சித்தராமையா பற்றி எழுதின “மாநிலங்களில் இருந்து ஒரு தேசியத் தலைவன்” கட்டுரைக்கான எனது எதிர்வினை. சித்தராமையா தற்போது முன்னெடுக்கும் கன்னடிய தேசியவதம் அவரது ஓட்டரசியலுக்கு பயன்படலாம். கன்னடத்தை பள்ளியில் கட்டாயப் பாடமாக்குவது, கன்னடம் கற்றாலும் யாரும் கன்னடியரே எனும் இரு விசயங்கள் மேம்போக்காக முற்போக்காக தெரியலாம். ஆனால் இரண்டும் ஆபத்தான போக்குகள் என்பது என் நம்பிக்கை. ஏன் என விளக்குகிறேன். நான் ஒரு பன்மைத்துவ பண்பாட்டுச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். குமரி மாவட்டம் கடந்து நெல்லை சென்றால் நீங்கள் ஒரு ஒற்றை மொழி அடையாளப் பற்றை காணலாம். ஆனால் குமரியில் அது இல்லை. அங்கே தமிழருக்கு மலையாளமும் மலையாளிக்கு தமிழும் சரளமாய் வரும். இரண்டும் கலந்த மொழியை இரு சாராரும் பேசுவார்கள். நெல்லையை விட ஆங்கில மோகம் குமரியில் அதிகம். இங்குள்ள பண்பாடும் பன்மைத்துவம் கொண்டதே.

மகிழ்ச்சியாக இருப்பது

உலகில் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியாத சேதி. அதாவது மகிழ்ச்சி அசாத்தியம் என்றல்ல நான் சொல்ல வருவது. குறிப்பாக எதையாவது செய்து உடனே மகிழ்ச்சியை அடைகிறவர்கள் இருக்கிறார்களா? மகிழ்ச்சியான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் என தனியாய் உண்டா? உ.தா, மாலையில் நடை பழகுவது, குடும்பத்துடன் இருந்து சிரித்து பேசி டிவி பார்த்து உணவருந்தி சுற்றுலா சென்று, நண்பர்களோடு பப்புக்கு சென்று, காதலியோடு தன்னை மறந்து பேசியும் தொட்டு சீண்டியும் .. இவையெல்லாம் மகிழ்ச்சி தருகிறவை தான். ஆனால் உறுதியாக இல்லை. இவை அலுப்பையும் கசப்பையும் கூட தரலாம்.