Skip to main content

இலக்கியமும் வாழ்வும் (1)


அன்புள்ள அபிலாஷ் சாருக்கு,
           விஷ்ணுபுரம் விழாவில் தங்களுடனான சந்திப்பிற்கு பிறகு எழுதும் கடிதம். உங்கள் வலைப்பூவில் வெளியான கட்டுரைகள் மகிழ்ச்சியாக இருப்பது, போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்ற இரண்டையும் வாசித்தேன். சமீபத்தில்"Zorba the Greek" வாசித்தேன். அதில் மைய பாத்திரங்களான ஜோர்பாவும்,பேசிலும் இணைந்து மலையிலிருந்து மரங்களை கப்பிகள் வழியே இறக்கி் பெரும் பொருளீட்ட நீண்ட நாட்களாக  திட்டமிட்டு ஒரு இறங்குதளத்தை உருவாக்குவார்கள் மரஙகளை அதன் வழியே இறக்கும் போது சரிந்து விழுந்து எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும். அப்போது Zorba அந்த துயரத்திலும் தன்னை கரைத்து மகிழ்ச்சியாய் இருப்பான்.
அதுபோன்று துயரத்தின் ஆழங்களுக்கு நம்மை ஒப்பு கொடுத்து மகிழ்வது
  சாத்தியமா?






இதை ஒட்டி மற்றொரு கேள்வி:
°மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும்,துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா?
-          அன்புடன் ஜானகிராமன்
அன்புள்ள ஜானகிராமன்
நலம் என நம்புகிறேன்.
நீங்கள் எழுப்பிய இரு கேள்விகளும் முக்கியமானவை. செறிவானவை.
Zorba the Greek நாவலில் நீங்கள் குறிப்பிட்ட இடம் எனக்கு விசித்திரமாய் ஆல்பர்ட் காமுவின் “அந்நியனை” நினைவுபடுத்தியது. தன் மரணத்தை ஏற்கும் தருணத்தில் மெர்ஸால்ட் உணரும் புளகாங்கிதத்தை எப்படி புரிந்து கொள்வது? ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்” நாவலில் இறுதியில் முழுக்க தோற்றுப் போன பின்னரும் கிழவர் தோற்றுப் போகாத ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சொல்லப் போனால், அவர் அந்த மீனை பத்திரமாய் கரை சேர்த்திருந்தால் அந்நாவல் அப்படி ஒரு காவிய உணர்வை நமக்கு அளித்திருக்காது.
இந்த மாதிரி பெரிய வீழ்ச்சியில், இழப்பில், சிதைவில், தோல்வில் குதூலகமாய், புளகாங்கிதமாய், தடையற்று உணர்வது ஒரு குறிப்பிட்ட மனவெளிப்பாடு என நான் ஏற்கிறேன். அது சாத்தியமே. ஆனால் அது வாழ்க்கை அனுபவம் அல்ல. இரண்டும் வேறுவேறு. எப்படி என விளக்குகிறேன்.
 பஷீரின் “பூவன் பழம்” எனும் பிரசித்தமான கதை உங்களுக்கு நினைவிருக்கும். அதில் கணவன் தன் காதல் மனைவியை ஒரு குச்சியால் அடித்து துன்புறுத்துகிறான்; கத்தியை காட்டி மிரட்டுகிறான். ஆனால் அது உண்மையான வன்முறை அல்ல. ஒருவித விளையாட்டு. அந்த விளையாட்டில் இருவரும் ஒருவித காமக் கிளர்ச்சியை, காதல் மலர்ச்சியை உணர்கிறார்கள். இது எந்த ஆண்-பெண் உறவிலும் சாத்தியமாகும் ஒரு மனத்திளைப்பை சுட்டுகிறது தான்; எதிர்மறை அனுபவத்தில் நேர்மறையான கிளர்ச்சியான எதிர்வினையை பெறும் சாத்தியம் காம உறவில் உள்ளது தான். ஆனால் அது ஒரு மிக மிக நுணுக்கமான உணர்வு மட்டுமே. அது வெளிப்படையாக இராது. இதைக் கொண்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் ஒரு கணவன் தன் அன்பையும் காமத்தையும் அதில் வெளிப்படுத்துகிறான் என நாம் கூறி விட இயலாது. பஷீரின் கதையில் கணவன் அடிப்பது ஒரு உருவகம் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட எல்லா படைப்பாளிகளும் மனித மனதின் சில விசித்திர உணர்வு நிலைகளை நாடகீயமாய் சித்தரிக்கிறார்கள். அக்காட்சிகள் குறியீடுகள் அல்லது உருவகங்களாய் வருகின்றன.
 நிஜவாழ்வில் அத்தகைய செயல்பாடுகளோ எதிர்வினைகளோ நிச்சயம் சாத்தியம் இல்லை. ஏனெனில் உணர்வும் அனுபவமும் இரு வேறு விசயங்கள். நாவல் உணர்வை பேசுகிறது. அனுபவத்தை அல்ல.
நாவல்கள் அனுபவத்தை முழுமையாக அல்ல, அதன் சாரமான ஒரு உணர்வை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாய், நாடகீயமாய் சித்தரிக்கின்றன. அதனாலே இலக்கியத்தில் எப்போதும் ஒரு மிகை உள்ளது. அது எப்போதும் இயல்பு வாழ்வில் இருந்து விலகி நிற்கிறது. அப்படி நிற்பதே இலக்கியத்தின் சிறப்பும்.
உங்களது இரண்டாவது கேள்விக்கு ஒரு தனிப்பதிவில் அடுத்து பதிலளிக்கிறேன். நன்றி!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...