முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் காலத்தின் பாசிசம் எது?




எஸ்.வி சேகர் பிரச்சனையை ஒட்டி ராஜன் குறை எழுதிய ஒரு பதிவின் மீதான என் எதிர்வினை இது.
அணி சேர்ந்து அரசியல் போராட்டம் செய்யும் போது எப்படி முரண்களை கையாள்வது என்பதே ராஜன் குறையின் குறிப்பின் மையம். தெளிவும் சித்தாந்த ஒழுங்கும் கொண்டு விவாதித்து முரண்களை கையாள வேண்டும் என அவர் சொல்வதாய் நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு அவரது தரப்பில் உள்ள மாறுபட்ட கருத்து இது: அணி அமைத்து செய்யப்படும் அரசியலின் அடிப்படையில் சில சிக்கல்கள் இல்லையா? ஒரு மக்களாட்சி அமைப்பில் பிரதிநுத்துவ அரசியலுக்கு குழு செயல்பாடு தேவையே. ஆனாலும் இக்குழு செயல்பாடுகள் மானுட அறத்தை மறுக்கும் எல்லைக்கும் போகலாமே? அப்போது என்ன செய்வது?
குழு அரசியலில் சுயசிந்தனை, ஒருவரது அற உணர்வுக்கு அங்கு இடம் என்ன? என் குழு ஒரு பொதுநல நோக்குக்காக ஒரு தப்பான காரியத்தை ஆதரித்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும்? அணியாகவா தனித்தா? அணியாக எனில் அது ஜனநாயக விரோதம் அல்லவா? அப்போது தனித்தென்றால் இப்போது நாம் கூட்டுமனப்பான்மையை கேள்வியின்றி ஏற்கலாமா?
நமது அரசியலமைப்பு அணி செயல்பாட்டை ஏற்கிறது. அதேவேளை நமது சுதந்திரத்தை, தேர்வுகளை, முடிவுகளை நாம் தனிமனிதர்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்கிறது.


உதாரணமாய் நீங்கள் ஒரு தனிமனிதராக ஒரு அணியின் சார்பில் வாக்கு அளிக்க முடியாது. ஒரு அணியின் தவறுகளுக்கு பொறுப்பாகி ஒரு தனிமனிதர் சிறை செல்ல முடியாது. சாதி, மதத்தின் அடிப்படையில் தொகுதி சாத்தியமில்லை. தமிழ் தேசியர்கள் எங்கள் தொகுதியில் தமிழ் தேசியர் மட்டுமே போட்டியிட வேண்டும் என கோர முடியாது. ஆக நமது மக்களாட்சி அமைப்பு தனிமனிதருக்கும் அணிகளுக்கும் இடையில் ஒரு சமரசத்தை கோருகிறது. இங்கு தான் பிரச்சனையே எழுகிறது:


ராஜன் குறை இந்துத்துவாவுக்கு எதிரான அணிகள் முழுக்க தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அனைவரையும் பாசிஸ்டுகள் என முத்திரை குத்தக் கூடாது என்கிறார். இது ஒரு முக்கியமான பார்வை இதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு மக்கள் திரள் கூட்டாக செயல்படும் போது இடதுசாரி கட்சியினரைப் போல சித்தாந்த தெளிவுடன், தர்க்க ஒழுங்குடன், நிதானத்துடன், பிசிறின்றி இயங்குவது சாத்தியமா? அப்படியே அது சாத்தியப்பட்டாலும் ஒழுங்கு, ஒற்றுமை, கட்சிக்கட்டுப்பாடு ஆகிய தேவைகளின் பொருட்டு நியாயம், அறம், உண்மை ஆகியவற்றை கைவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோமா? இது நம் வரலாற்றில் இடது அமைப்புகளில் தொடர்ந்து நிகழ வில்லையா? நக்சல்பாரி அமைப்பை இடதுகட்சிகள் மிகக்கொடூரமாய் அழித்தது குறித்த பதிவுகள் இல்லையா? அதற்கு எதிராய் கட்சிக்காரர்கள் அமைதி காத்தது நியாயமா?
பாசிசத்துக்கு எதிரான குரல்களைத் தொகுக்கும் போது நாம் ஆதரிக்கும் மக்களிடையே பாசிசம் தென்பட்டால் என்ன செய்ய? சிங்கூரில் நடந்தது போல் நிகழ்ந்தால் இடதுசாரி தோழர்கள் மௌனம் காத்தது போல் மௌனிக்க வேண்டுமா? பாசிசத்துக்கு எதிரான அணி ஒற்றுமையை பாதுகாப்பது முக்கியமெனில் மௌனிக்கத் தானே வேண்டும்? அப்படியான மௌனம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும்.
என் தீர்வு: இனி வரும் காலத்தில் அறவழியிலான அரசியல் என்பது சிதைவின் அரசியலாக இருக்கும். அணி சேர்க்க வேண்டும். ஆனால் எப்போது வேண்டுமெனிலும் அந்த அணியை சந்தேகிக்கவும் ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் உடைத்து எறியவும் தயாராக வேண்டும். அணிகள் தொடர்ந்து தோன்றி உடைகிறவையாய் இருக்கட்டும். அவற்றுக்கு என உறுதியான கட்டுக்கோப்பான சித்தாந்தங்கள் வேண்டாம். மக்களின் எழுச்சியும் மனசாட்சியும் உள்ளுணர்வும் கோரும் நியாயங்களை ஒட்டி அரசியல் உருவாகட்டும். அவற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அந்த அமைப்புகள் சிதையட்டும். சிதைவுற்ற இடத்தில் புது அமைப்புகள் பிறக்கட்டும்.
இனி பாசிசம் என்பது வலதுசாரிகள் கட்டமைப்பது மட்டுமாக இருக்காது. பெரிய கட்டுறுதியான அமைப்புகளை யாரெல்லாம் உருவாக்கி வளர்த்தாலும் அது பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும். கேள்விக்குட்படுத்த தகாத சித்தாந்தங்களை யார் முன்வைத்தாலும் அவை அழிவு சக்திகளாய் உருமாறும். இடதோ வலதோ எந்த சாரிகளையும் நான் சந்தேகத்துடனே பார்ப்பேன். வேறு வழியே இல்லை.


கருத்துகள்

Muthuvelavan இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கு எல்லாமே பண ஆதாரத்திலேயே நடக்கிறது. பணபலமில்லாமல் கட்சி கிட்சி ஒன்றும் நடக்காது என்கிற நிலைமைக்குக் வந்தாகிவிட்டது. மக்களும் தான் சார்ந்த கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எதிர்ப்பவரை வசைபாடுவது வழக்காகிவிட்டது. என்னைக்கேட்டால் எந்தக்கட்சிக்கும் உறுப்பினர் சேர்க்கையையே அனுமதிக்கக்கூடாது. உறுப்பினர் என்பதாலேயே கண்மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அனைவரும் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான அரசியல் அதனால்தான் உருவாகவேயில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...