முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் வாழ்வின் சிறந்த ஐந்து நூல்கள் சவால்






போரும் அமைதியும் – தல்ஸ்தாய்
தெய்வம் உண்மையில் இருந்து அவரை தரிசிப்பது போன்றதே இந்நாவல். இதைப் படித்த பின் நாம் படிக்கிற நாவல்கள் இதன் சுருக்க வடிவம் / துண்டு துக்கடா போல தோன்றுவதை தவிர்க்க முடியாது.


நார்வேஜியன் வுட் – முராகாமி
இதை முராகாமியின் சிறந்த நாவல் என சொல்ல மாட்டேன். எனிலும் ஆத்மார்த்தமான, நிர்மலமான காதல் கதை என்கிற வகையில், கைவிடப்பட்ட வாழ்க்கையின், கையாலாகாத உறவுநிலைகளின் தத்தளிப்புகளை அவ்வளவு கவித்துவமாய், நகைச்சுவையாய் அவர் சித்தரித்ததை கருதுகையில் இந்நாவலை மறக்க முடியாது.



விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
தமிழின் ஆகச்சிறந்த நாவல் இது என்பதில் எனக்கு ஐயமில்லை. புதுவிதமான மொழிகளை கையாள்வது, முழுக்க ஒன்றோறொண்டு முரண்கொள்ளும் உணர்வுநிலைகளுக்குள் விளையாடுவது, காட்சிபூர்வமான சித்தரிப்புகளால் நம்மை திகைக்கவும் பதறவும் வைப்பது, சுயதேடல் எனும் உன்மத்தத்தை உரைநடையிலும் கையாள முடியும் என நிரூபித்தது, கற்பனையிலும் அறிவார்ந்தும் இது மேற்கொள்ளும் விரிவு ஆகியவை மேற்சொன்ன தகுதியை இதற்கு அளிக்கிறது. இதை செவ்வியல் / வரலாற்று நாவல் என்பதை விட இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பான லட்சியத்தின் அந்த பொற்காலம், அதன் சீரழிவு, மார்க்ஸியவாதிகளும் காந்தியவாதிகளும் கொண்டாடிய நம்பிக்கைகளின் தத்தளிப்பு, அறம் பற்றின விவாதங்கள், அவற்றின் இறுதி வீழ்ச்சி ஆகியவை பற்றின ஒரு நீதிக்கதை (parable) எனச் சொல்லலாம்.


நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன்
கால ஓட்டம் மிகத் தனியானது. அது ஒரு சக்கரவியூகம். அதில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடைக்க முடியாது. அதன் போக்கை தீர்மானிக்கவும் முடியாது. இதை உணரும் மனிதர்களின் தீவிரமான தனிமையை தொட்டுக் காட்டும் தமிழ் நாவல்களில் இது முதன்மையானது. எஸ்.ராவை லத்தீன் அமெரிக்க இலக்கியம் பாதித்ததன் உன்னதமான விளைவு என இந்நாவலை சொல்லலாம். ரெண்டு நாட்கள் விடுப்பெடுத்து இந்நாவலை படித்து லயித்த நாட்களை மறக்க முடியாது. படித்ததுமே நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இதோ தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று. இதை இவராலே இனி மீற முடியுமா?”.


Fear of Freedom – எரிக் புரோம்
கட்டுரை நூல்களில் இதை தேர்ந்தெடுக்கக் காரணம் தனிப்பட்டது. நான் மன அழுத்தத்தில் இருந்த சந்தர்பத்தில் இந்நூலை எதேச்சையாய் படித்தேன். இது அளித்த தர்க்கம், அவதானிப்புகள், மனித சுபாவம் பற்றின ஆழமான பார்வை என்னை அழுத்திய துக்கத்தை துடைத்து அகற்றின. துக்கம் என்பது அச்சம், அச்சம் என்பது பிழையான பார்வையில் இருந்து வருவது, சிந்தனை சீரானால் துக்கம் போம் என்று நான் அன்று இதை வாசித்து கண்டு கொண்டேன். நான் 2007இல் எழுதின முதல் கட்டுரை முதல் எரிக் புரோமை தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறேன். ஒரு புத்தகம் உங்களுக்கு மனநலம் அளிக்கும் என யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஆனால் எனக்கு அப்படி ஒன்று நடந்தது – ஆகையால் நம்ப வேண்டி இருக்கிறது. முக்கியமான நூல்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...