முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிச்சைக்காரன்: மகாபாரத டெம்பிளேட்


 Image result for pichaikaran movieImage result for badshah rajinikanth
வெளியான சந்தர்பத்தில் வெகுவாக பாராட்டப்பட்ட படம் “பிச்சைக்காரன்”. நான் இப்படத்தை அப்போது பார்த்த போது ஒரு தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்பு (சண்டைக்காட்சிகளைத் தவிர) கொண்ட படம், அம்மா செண்டிமெண்டை மெலோடிராமா இன்றி பயன்படுத்திக் கொண்ட படம் என்கிற அளவிலே ரசித்தேன்.

இன்று இணையத்தில் மீண்டும் பார்த்தேன். அப்போது எனக்கு மகாபாரதத்தின் பாண்டவர்களின் மறைந்து வாழும் படலத்தை நினைவு வந்தது. விராத தேசத்தில் அரண்மனையில் பிரஹண்ணளையாக திருநங்கையாக மாறுவேடத்தில் இருக்கும் அர்ஜுனன் தன் அந்தஸ்து, திறன், கௌரவம் ஆகியவற்றை கைவிட்டு பணிவாக தயக்கமின்றி செயல்படுகிறான். கௌரவர்கள் அத்தேசத்தை படையெடுக்கும் போது, அப்படி அவர்கள் வென்றால் அது தம் வேடத்தை கலைக்கும் எனும் நிலை ஏற்படும் போது மட்டும் அர்ஜுனன் தன் வேடத்தை கலைக்காமலே தன் திறன்களை வெளிப்படுத்துகிறான்; அச்சம் மிக்க இளவரன் உத்தரன் பின்னிருந்து அவனுக்கு தேரோட்டியாய் செயல்பட்டு தன்னந்தனியாய் துரியோதனன், கர்ணன் உள்ளிட்டோரை முறியடிக்கிறான். இறுதியில் தம் தலைமறைவு காலம் முடிந்த பின் பாண்டவர் தம் வேடத்தைக் கலைத்து உரிய கௌரவம் பெற்று, மன்னருக்கு உறவும் ஆகிறார்கள்.
“பிச்சைக்காரனிலும்” இதே தான் நடக்கிறது. அருள் எனும் பெரும் கோடீஸ்வரன் தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு சாமியார் அறிவுரையின்படி, 48 நாள் பிச்சைக்காரனாய் வாழ்ந்து தீர்க்க முடிவெடுக்கிறான். அப்போது தன் காதலியிடத்து உண்மை சொல்ல முடியாமல், இறுதியில் அவள் உயிரைக் காப்பாற்றவே தன் அடையாளத்தை பயன்படுத்த இயலாமல் அவன் பரிதவிக்கிறான். இப்படி தானற்றுப் போகும் இந்த காலத்தில் அவன் முதிர்ச்சியடைகிறான். சமூகத் தீமைகளை அழிக்கிறான். மகாபாரதத்திலும் பாண்டவர்களுக்கு இதுவே நிகழ்கிறது. இந்த தியாகம் வீணாகி விடுமோ எனும் அச்சம் இருந்து கொண்டே இருந்தாலும் இறுதியில் அவன் தாய் மீள்கிறாள்; மகாபாரத்தில், பல அவநம்பிக்கை தருணங்களுக்கு முடிவில், தர்மம் ஜெயிக்கிறது.
நமது புராணங்களின் பல நெருக்கடி தருணங்கள் இந்திய கூட்டுமனதை அசைப்பவை. லோகித தாஸ் ஒருமுறை சொன்னாராம், அவரது எல்லா படங்களின் கதையும் ஏதாவதொரு மகாபாரத சம்பவத்தை ஒட்டியது என. எனக்கென்னவோ தமிழின் பெரும்பாலான வணிக பட கதைகள் பாரதக் கதைகளின் நீட்சி எனத் தோன்றும். உ.தா. “பாட்ஷா” மேற்சொன்ன மகாபாரத தலைமறைவு பருவக் கதையே. “அண்ணாமலை”? துரோணருக்கும் அவரது ஆதி நண்பரான தௌரபதருக்கும் இடையிலான அன்பும் பிரிவும் மோதலும் பழிவாங்கலும் பற்றின கதையின் ஸ்டைலான ரஜினி டெம்பிளேட் தானே. ஒட்டுமொத்த மகாபாரதக் கதையின் சுருக்க வடிவம் தானே “தேவர் மகன்”. இப்படி நீங்கள் எந்த வெற்றி பெற்ற தமிழ் சினிமாவை எடுத்தாலும் அதில் மகாபாரதச் சாயல் இருக்கும்.
ஆக, “பிச்சைக்காரன்” விசயத்தில் எனக்கு ஆச்சரியம் இல்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...