முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிராமிகள் ஏன் தோன்றுகிறார்கள்?

மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகி உள்ள என் கட்டுரையில் இருந்து:
 “தன் இரு குழந்தைகளைக் கொடூரமாய் கொன்றுவிட்டுத் தன் காதலனுடன் ஓடிப்போன அபிராமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தோழியிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் “ஏன் குழந்தைகளைக் கொன்றாள்? அவற்றைக் கொல்லாமல் விட்டிருந்தால் வேறு யாராவது வளர்த்திருப்பார்கள் அல்லவா? ஏன் கொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன லாபம்?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
எப்படி யோசித்தும் விடை தெரியாத கேள்விகள். சிக்குண்ட நூல்கண்டைப் பிரிப்பது போல நாங்கள் நீண்ட நேரம் இதையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம்.

அடுத்து, நான் இணையத்தில் இது சம்பந்தமான சேதிகளை நிறைய படித்தேன். அவற்றைக் கொண்டு கீழ்வருமாறு ஒரு சித்திரத்தைத் தொகுத்துக்கொண்டேன்:
என்ன நடந்தது?
அபிராமி சுமார் 17 வயதில் விஜய்யைத் திருமணம் செய்துகொள்கிறார். காதல் திருமணம். இரு குழந்தைகள் பிறக்கின்றன. திருமண உறவுகள் பலவற்றில் நிகழ்வதுபோல அலுப்பும் மனஸ்தாபங்களும் ஏமாற்றமும் மிகுந்திட, வாழ்க்கை கசக்கிறது.
மண உறவுக்கு வெளியே பொழுதுபோக்காக ஒரு “காதல்” தோன்றுகிறது. காதலன் சுந்தரம் பிரியாணிக் கடையில் பில் போடுகிறவர்.
இதுவரையில் பெரிய விநோதம் இல்லை. பல இடங்களிலும் நடப்பதுதான். மண உறவுக்கு வெளியே முகிழ்க்கும் காதல்களே பல தாம்பத்ய உறவுகள் நிலைக்க உதவுகின்றன என ஓர் ஆய்வில் படித்திருக்கிறேன். வெளியே கசியாதவரை. அதாவது, கணவன் / மனைவி கோபித்துப் பிரச்சினை பண்ணாதவரையில், இத்தகைய காதல் திருமண வாழ்வின் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறது அந்த ஆய்வு (இதற்காக, எல்லாரும் பிறழ வேண்டுமென்றில்லை. பிறழ்ச்சி மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுகிறது என்பதும் இல்லை).
அபிராமியின் திருமணத்துக்கு வெளியிலான இந்தக் காதல் ஊருக்குத் தெரியவர, கணவன் இதனால் கோபமுற்று அது அடிதடியில் போய் முடிகிறது. இதுதான் இந்த வழக்கமான பிரச்சினையைக் கொலையை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான முதல் திருப்பம்.
கணவனிடம் கோபித்து அபிராமி சுந்தரத்தின் வீட்டில் சென்று சில மாதங்கள் வாழ்கிறார். சுந்தரமும் திருமணமானவரே. அவர் மனைவியின் எதிர்வினை என்னவெனத் தெரியவில்லை.

மேலும் படிக்க
https://www.minnambalam.com/k/2018/09/04/35

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...