மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகி உள்ள என் கட்டுரையில் இருந்து:
“தன் இரு குழந்தைகளைக் கொடூரமாய் கொன்றுவிட்டுத் தன் காதலனுடன் ஓடிப்போன அபிராமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தோழியிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் “ஏன் குழந்தைகளைக் கொன்றாள்? அவற்றைக் கொல்லாமல் விட்டிருந்தால் வேறு யாராவது வளர்த்திருப்பார்கள் அல்லவா? ஏன் கொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன லாபம்?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
மேலும் படிக்க
https://www.minnambalam.com/k/2018/09/04/35
“தன் இரு குழந்தைகளைக் கொடூரமாய் கொன்றுவிட்டுத் தன் காதலனுடன் ஓடிப்போன அபிராமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தோழியிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் “ஏன் குழந்தைகளைக் கொன்றாள்? அவற்றைக் கொல்லாமல் விட்டிருந்தால் வேறு யாராவது வளர்த்திருப்பார்கள் அல்லவா? ஏன் கொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன லாபம்?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
எப்படி யோசித்தும் விடை தெரியாத கேள்விகள். சிக்குண்ட நூல்கண்டைப் பிரிப்பது போல நாங்கள் நீண்ட நேரம் இதையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம்.
அடுத்து, நான் இணையத்தில் இது சம்பந்தமான சேதிகளை நிறைய படித்தேன். அவற்றைக் கொண்டு கீழ்வருமாறு ஒரு சித்திரத்தைத் தொகுத்துக்கொண்டேன்:
என்ன நடந்தது?
அபிராமி சுமார் 17 வயதில் விஜய்யைத் திருமணம் செய்துகொள்கிறார். காதல் திருமணம். இரு குழந்தைகள் பிறக்கின்றன. திருமண உறவுகள் பலவற்றில் நிகழ்வதுபோல அலுப்பும் மனஸ்தாபங்களும் ஏமாற்றமும் மிகுந்திட, வாழ்க்கை கசக்கிறது.
மண உறவுக்கு வெளியே பொழுதுபோக்காக ஒரு “காதல்” தோன்றுகிறது. காதலன் சுந்தரம் பிரியாணிக் கடையில் பில் போடுகிறவர்.
இதுவரையில் பெரிய விநோதம் இல்லை. பல இடங்களிலும் நடப்பதுதான். மண உறவுக்கு வெளியே முகிழ்க்கும் காதல்களே பல தாம்பத்ய உறவுகள் நிலைக்க உதவுகின்றன என ஓர் ஆய்வில் படித்திருக்கிறேன். வெளியே கசியாதவரை. அதாவது, கணவன் / மனைவி கோபித்துப் பிரச்சினை பண்ணாதவரையில், இத்தகைய காதல் திருமண வாழ்வின் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறது அந்த ஆய்வு (இதற்காக, எல்லாரும் பிறழ வேண்டுமென்றில்லை. பிறழ்ச்சி மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுகிறது என்பதும் இல்லை).
அபிராமியின் திருமணத்துக்கு வெளியிலான இந்தக் காதல் ஊருக்குத் தெரியவர, கணவன் இதனால் கோபமுற்று அது அடிதடியில் போய் முடிகிறது. இதுதான் இந்த வழக்கமான பிரச்சினையைக் கொலையை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான முதல் திருப்பம்.
கணவனிடம் கோபித்து அபிராமி சுந்தரத்தின் வீட்டில் சென்று சில மாதங்கள் வாழ்கிறார். சுந்தரமும் திருமணமானவரே. அவர் மனைவியின் எதிர்வினை என்னவெனத் தெரியவில்லை.”மேலும் படிக்க
https://www.minnambalam.com/k/2018/09/04/35
கருத்துகள்