முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிராமிகள் ஏன் தோன்றுகிறார்கள்?

மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகி உள்ள என் கட்டுரையில் இருந்து:
 “தன் இரு குழந்தைகளைக் கொடூரமாய் கொன்றுவிட்டுத் தன் காதலனுடன் ஓடிப்போன அபிராமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு தோழியிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் “ஏன் குழந்தைகளைக் கொன்றாள்? அவற்றைக் கொல்லாமல் விட்டிருந்தால் வேறு யாராவது வளர்த்திருப்பார்கள் அல்லவா? ஏன் கொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன லாபம்?” என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
எப்படி யோசித்தும் விடை தெரியாத கேள்விகள். சிக்குண்ட நூல்கண்டைப் பிரிப்பது போல நாங்கள் நீண்ட நேரம் இதையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தோம்.

அடுத்து, நான் இணையத்தில் இது சம்பந்தமான சேதிகளை நிறைய படித்தேன். அவற்றைக் கொண்டு கீழ்வருமாறு ஒரு சித்திரத்தைத் தொகுத்துக்கொண்டேன்:
என்ன நடந்தது?
அபிராமி சுமார் 17 வயதில் விஜய்யைத் திருமணம் செய்துகொள்கிறார். காதல் திருமணம். இரு குழந்தைகள் பிறக்கின்றன. திருமண உறவுகள் பலவற்றில் நிகழ்வதுபோல அலுப்பும் மனஸ்தாபங்களும் ஏமாற்றமும் மிகுந்திட, வாழ்க்கை கசக்கிறது.
மண உறவுக்கு வெளியே பொழுதுபோக்காக ஒரு “காதல்” தோன்றுகிறது. காதலன் சுந்தரம் பிரியாணிக் கடையில் பில் போடுகிறவர்.
இதுவரையில் பெரிய விநோதம் இல்லை. பல இடங்களிலும் நடப்பதுதான். மண உறவுக்கு வெளியே முகிழ்க்கும் காதல்களே பல தாம்பத்ய உறவுகள் நிலைக்க உதவுகின்றன என ஓர் ஆய்வில் படித்திருக்கிறேன். வெளியே கசியாதவரை. அதாவது, கணவன் / மனைவி கோபித்துப் பிரச்சினை பண்ணாதவரையில், இத்தகைய காதல் திருமண வாழ்வின் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறது அந்த ஆய்வு (இதற்காக, எல்லாரும் பிறழ வேண்டுமென்றில்லை. பிறழ்ச்சி மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுகிறது என்பதும் இல்லை).
அபிராமியின் திருமணத்துக்கு வெளியிலான இந்தக் காதல் ஊருக்குத் தெரியவர, கணவன் இதனால் கோபமுற்று அது அடிதடியில் போய் முடிகிறது. இதுதான் இந்த வழக்கமான பிரச்சினையைக் கொலையை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான முதல் திருப்பம்.
கணவனிடம் கோபித்து அபிராமி சுந்தரத்தின் வீட்டில் சென்று சில மாதங்கள் வாழ்கிறார். சுந்தரமும் திருமணமானவரே. அவர் மனைவியின் எதிர்வினை என்னவெனத் தெரியவில்லை.

மேலும் படிக்க
https://www.minnambalam.com/k/2018/09/04/35

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...