குற்றம் என்பது எப்போதும் தீமை அல்ல. அது உதவிக்கான கோரலாக, செய்வதறியாத பரிதவிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். அபிராமியை
இரண்டாம் வகையாகவே நான் காண்கிறேன்
உங்கள் கட்டுரையின் அத்தனைச் சொற்களோடும் நான் உடன்படுகிறேன். கட்டுரைக்கு நன்றி
ஆனால் எந்தச்சூழ்நிலையிலும் எந்த அழுத்தத்திலும் நம்மை நாம் முறைப்படி விடுவிக்க முடியும். அந்தப் பெண் ஒரு மனநல ஆலோசகரையோ
நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரிடமோ தனது பிரச்சனையை பகிர்ந்து
கொண்டிருக்கலாம். அது சௌபாவுக்கும் பொருந்தும். நிறைய சாமியார்கள்பாதிரியார்கள் செய்யும் குற்றச்செயல்களுக்குப் பின்னும் இத்தகைய அழுத்தம் இருக்க வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன். சமுதாயம் தரும்
மரியாதையையும் விட இயலாமல் வேடத்தைக் கலைத்து சமூகத்தை எதிர்கொள்ளவும் துணிச்சல் இல்லாமல் வெளி உலகில் பிழைக்க வேறு
வேலையும் தெரியாமல் எல்லாப் பக்கங்களும் அழுத்தப்படும் போது வடிகால்கள் குற்றங்களாகிப் போகவும் வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறேன்.
Francis,
Nagercoil.
அன்புள்ள
பிரான்ஸிஸ்
நன்றி!
ஆர்.
அபிலாஷ்
கருத்துகள்