Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (2)

Image result for vairamuthu
நம் சமூகம் திறந்தநிலை / தாராளவாத செக்ஸை அனுமதிக்காததால் ஆண் அந்த இச்சையை மட்டுப்படுத்திஅமுக்கி வைத்து கலைஅரசியல்சிந்தனைஎழுத்துசமூக மேம்பாடு என வெளிப்படுத்துகிறான் என்றார் பிராயிட்.
ஆனால் பிராயிடின் பார்வையில் ஒரு கிறுத்துவ கத்தோலிக்க குற்றவுணர்வு செயல்படுவதாய் பிற சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்செக்ஸ் ஒரு பாவம் எனும் கிறித்துவ நம்பிக்கையே அவரை இப்படி அதை வகைப்படுத்த செய்திருப்பதாய் சொல்கிறார்கள்.
பிராயிடுடன் எனக்கு ஏன் உடன்பாடில்லை எனச் சொல்கிறேன்:
ஒரு ஆணை நீங்கள் நூறு பெண்களுடன் ஒரு வீட்டில் அடைத்தால் அவன் சதா எப்படி அந்த நூறு பேருடனும் உறவு கொள்ளலாம் என நினைக்க மாட்டான்பிக்பாஸ் வீட்டில் கூட எல்லா காமிராக்களும் பழுதானால் கூட அப்படி நடக்காதுஒரு சிலருடன் அவனுக்கு நிச்சயம் உறவு ஏற்படும்ஆனால் அவன் செக்ஸைக் கடந்து வாழவும் சிந்திக்கவும் நிச்சயம் முயல்வான்.
இசையில் துவங்கி சிற்பம்கட்டிடவியல்கோட்பாடுகள்எழுத்து என ஒவ்வொன்றால் அடிப்பனையான உடல் இச்சையின் வெளிப்பாடு மட்டுமல்ல – தனது ரசனையைகனவைஇச்சையை பலமடங்கு பெருக்கு மட்டற்று அனுபவிக்க அவன் கண்டறிந்த மார்க்கமே மேற்சொன்னவை.தா., இன்றைய உலகில் செக்ஸில் அரைமணி நேர சுகம் உண்டெனில் எழுதுவதிலோபாடுவதிலோபணம் சம்பாதிப்பதிலோ பல மடங்கு அதிக சுகம் உண்டுநீங்கள் செக்ஸ் இன்றி வாழ முடியாதுஆனால் செக்ஸ் மட்டுமே கொண்டும் வாழ முடியாதுமனிதன் புத்திசாலி – அரை-ஸ்பூன் இன்பத்தை அவன் அளவற்ற இன்பமாய் மாற்ற கற்றிருக்கிறான்.
இந்த நிலையில் தான் நாம் மீண்டும் ஆணை அடிப்படையில் ஒரு செக்ஸ் மிருகம்யார் மாட்டினாலும் குதறி வைப்பவன் என அற்பமாய் நினைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.
ஏனென்று தெரியவில்லை எந்த ஒரு மனிதன் பெரும் சாதனைகள் செய்து வாழ்வை உன்னதமாய் வாழ்ந்து அனுபவிக்க முயன்றாலும் அவனைப் பற்றின செக்ஸ் சர்ச்சைகள் கிளம்பும்மக்களும் அதை ஆர்வமாய் படிப்பார்கள்காந்தியடிகள் மீதான பாலியல் அவதூறுகள் ஒரு நல்ல உதாரணம். “டாவின்ஸி கோட்” நினைவுள்ளதாகர்த்தரும் சாதாரண மனிதரேஅவரும் செக்ஸ் வைத்துக் கொண்டவரே என சொல்வதே அந்நாவலின் நோக்கம்அந்நோக்கம் பல கோடி பேருக்கும் இருந்ததாலே அந்நாவல் ஒரே சமயம் சர்ச்சைக்கும் பெரும் புகழுக்கும் உள்ளானதுஎந்த ஒரு மாமனிதனையும் நீ ஒரு மிருகமே என முத்திரை குத்துவதில் நமக்கு ஒரு தனி சந்தோஷம்.
செக்ஸ் விசயத்தில் மட்டுமே இப்படி நடக்கிறது என்பது தான் விசித்திரம்!
ஒரு பெண் குற்றம் சுமத்தியதும் ஊரே கேள்வியின்றி ஆணை பழிக்க தயாராவது மேற்சொன்ன பிழையான எண்ணத்தையே காட்டுகிறதுபெண் பலவீனமானவள்அவள் எப்போதும் ஒடுக்கப்படுபவள் என்பதால் அல்ல நாம் ஆணைப் பழிப்பதுஎல்லா சந்தர்பங்களிலும் நாம் இது போல் பாதிக்கப்பட்டோரை கண்ணை மூடி ஆதரிப்பதில்லையே!
பெண் என்பதாலாஆம்ஆனால் ஆண்-பெண் சம்மந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் செக்ஸ் கூடவே வருகிறதேஆனால் செக்ஸ் சம்மந்தப்படாத எந்த விசயத்திலாவது நாம் இப்படியான நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கிறோமா.தா., ஒரு 100 வயதுப் பாட்டிஅவர் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. “என்னை பழிவாங்க வேண்டுமென்று வேண்டுமென்றே வீட்டு உரிமையாளர் மின்சாரத்தை துண்டிக்கிறார்” எனச் சொன்னால் நாம் நம்பத் தயங்குவோம்வீட்டு உரிமையாளர் குற்றச்சாட்டை மறுத்தால் அதை பரிசீலிப்போம்ஆனால் இப்போது 100 வயதை 20 வயதாக மாற்றுங்கள்உடனே “ஆமா அந்த வீட்டு உரிமையாளருக்கும் இளம்பெண்ணுக்கும் ஏதோ விவகாரம் போலஇவளை முயன்று பார்த்து அவள் மறுத்ததால் அதான் அந்தாள் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்கொடூரமானவன்” என யோசிப்போம்செக்ஸ் என்று வந்து விட்டால் நாம் ஆதாரம்லாஜிக் எதுவும் தேடுவதில்லை.
ஒரு ஆண் தன் வாழ்வில் பல விசயங்களில் சமநிலை தவறுவது போல செக்ஸிலும் செய்கிறான்ஆனால் எப்போதும் அல்லநூறில் ஒரு ஆண் நூறில் ஒருமுறை பிறழ்கிறான்ஆனால் நீங்களோ நூற்றுக்கு நூறு ஆண்கள் நூற்றுக்கு நூறு முறை பிறழ்கிறார்கள் என்கிறீர்கள்ஆணுக்கு இதுவே வேலை என்கிறீர்கள்.
பெண்களைத் துரத்துவதே வைரமுத்துவின் அடிப்படையானதவிர்க்க முடியாதகட்டுப்பாட்டைக் கடந்த இயல்பென்றால் அவர் இவ்வளவு ஆயிரம் பாடல்களை எழுதி இருக்க மாட்டார்அப்படி செக்ஸ் அவரது கட்டுப்பாட்டை மீறியமிக மிக ஆதரமான இயல்பு அல்ல எனில் அவர் நிச்சயம் குற்றவாளியே என நாம் கூற முடியாது.
எப்படிப் பார்த்தாலும் ஆதாரமின்றி ஆண் மீது கண்ணை மூடி முத்திரை குத்துவது நியாயமல்ல.
பாதிக்கப்படும் பெண்களால் எப்போதும் ஆதாரத்தை காட்ட முடியாதே என்கிறார்கள்இதையே நீங்கள் எல்லா குற்றங்களுக்கும் சொல்லலாமே.
என்னை கூட்டமாய் சேர்ந்து சிலர் ஒரு தனியான இடத்தில் வைத்து தாக்குகிறார்கள்நான் பயந்து பின்வாங்குகிறேன்அதன் பிறகு புகார் தெரிவிக்கிறேன். “என் வசம் ஆதாரம் இல்லைஆனால் நான் பாதிக்கப்பட்டவன்நம்புங்கள்” என்றால் நம்புவார்களாபுகார் சொல்பவள் பெண் என்றாலும் கூட (அதில் பாலியல் அரசல்புரசலாய் தொனிக்கவில்லை என்றால்ஆதாரம் கேட்போம்ஆனால் பாலியல் என்றால் மட்டும் ஏன் ஆதாரம் எல்லாம் வேண்டாம் என அவ்வளவு அவசரமாய் நம்பத் தலைப்படுகிறோம்?
இது தவறல்லவாமுரண் அல்லவா?

Comments

Anonymous said…
பார்ப்பனீயம் சிறப்பாக தமிழை ஒழிக்கும் வேலையை செய்கிறது. கலைஞர் உள்ள வரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது பொதுவெளியில் தமிழ் , திராவிடம் பற்றி பேச மக்கள் அறிந்த ஒருவராக உள்ளவர் வைரமுத்து. அவர் புகழை கெடுத்து திராவிடம் பற்றி ஒரு இங்குள்ள மக்களிடமே ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்த பார்பனியம் முயல்கிறது. அதன் மூலம் பார்பனியம் மற்றும் பாஜக இங்கு நிலை கொள்ள பார்க்கிறது.

சின்மயி இந்த விசயத்தில் ஒரு கருவி.
இதே சின்மயி ஜெயேந்திரன் மற்ற பெண்களுக்கு செய்தது தவறு என்று கூறுவாரா? நிச்சயம் மாட்டார். அது தான் பார்ப்பனீயம்.
Anonymous said…
Howdy! This is my 1st comment here so I just wanted to
give a quick shout out and tell you I really enjoy reading your posts.
Can you recommend any other blogs/websites/forums that cover the
same topics? Thanks for your time!

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்