Skip to main content

ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (2)

Image result for vairamuthu
நம் சமூகம் திறந்தநிலை / தாராளவாத செக்ஸை அனுமதிக்காததால் ஆண் அந்த இச்சையை மட்டுப்படுத்திஅமுக்கி வைத்து கலைஅரசியல்சிந்தனைஎழுத்துசமூக மேம்பாடு என வெளிப்படுத்துகிறான் என்றார் பிராயிட்.
ஆனால் பிராயிடின் பார்வையில் ஒரு கிறுத்துவ கத்தோலிக்க குற்றவுணர்வு செயல்படுவதாய் பிற சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்செக்ஸ் ஒரு பாவம் எனும் கிறித்துவ நம்பிக்கையே அவரை இப்படி அதை வகைப்படுத்த செய்திருப்பதாய் சொல்கிறார்கள்.
பிராயிடுடன் எனக்கு ஏன் உடன்பாடில்லை எனச் சொல்கிறேன்:
ஒரு ஆணை நீங்கள் நூறு பெண்களுடன் ஒரு வீட்டில் அடைத்தால் அவன் சதா எப்படி அந்த நூறு பேருடனும் உறவு கொள்ளலாம் என நினைக்க மாட்டான்பிக்பாஸ் வீட்டில் கூட எல்லா காமிராக்களும் பழுதானால் கூட அப்படி நடக்காதுஒரு சிலருடன் அவனுக்கு நிச்சயம் உறவு ஏற்படும்ஆனால் அவன் செக்ஸைக் கடந்து வாழவும் சிந்திக்கவும் நிச்சயம் முயல்வான்.
இசையில் துவங்கி சிற்பம்கட்டிடவியல்கோட்பாடுகள்எழுத்து என ஒவ்வொன்றால் அடிப்பனையான உடல் இச்சையின் வெளிப்பாடு மட்டுமல்ல – தனது ரசனையைகனவைஇச்சையை பலமடங்கு பெருக்கு மட்டற்று அனுபவிக்க அவன் கண்டறிந்த மார்க்கமே மேற்சொன்னவை.தா., இன்றைய உலகில் செக்ஸில் அரைமணி நேர சுகம் உண்டெனில் எழுதுவதிலோபாடுவதிலோபணம் சம்பாதிப்பதிலோ பல மடங்கு அதிக சுகம் உண்டுநீங்கள் செக்ஸ் இன்றி வாழ முடியாதுஆனால் செக்ஸ் மட்டுமே கொண்டும் வாழ முடியாதுமனிதன் புத்திசாலி – அரை-ஸ்பூன் இன்பத்தை அவன் அளவற்ற இன்பமாய் மாற்ற கற்றிருக்கிறான்.
இந்த நிலையில் தான் நாம் மீண்டும் ஆணை அடிப்படையில் ஒரு செக்ஸ் மிருகம்யார் மாட்டினாலும் குதறி வைப்பவன் என அற்பமாய் நினைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.
ஏனென்று தெரியவில்லை எந்த ஒரு மனிதன் பெரும் சாதனைகள் செய்து வாழ்வை உன்னதமாய் வாழ்ந்து அனுபவிக்க முயன்றாலும் அவனைப் பற்றின செக்ஸ் சர்ச்சைகள் கிளம்பும்மக்களும் அதை ஆர்வமாய் படிப்பார்கள்காந்தியடிகள் மீதான பாலியல் அவதூறுகள் ஒரு நல்ல உதாரணம். “டாவின்ஸி கோட்” நினைவுள்ளதாகர்த்தரும் சாதாரண மனிதரேஅவரும் செக்ஸ் வைத்துக் கொண்டவரே என சொல்வதே அந்நாவலின் நோக்கம்அந்நோக்கம் பல கோடி பேருக்கும் இருந்ததாலே அந்நாவல் ஒரே சமயம் சர்ச்சைக்கும் பெரும் புகழுக்கும் உள்ளானதுஎந்த ஒரு மாமனிதனையும் நீ ஒரு மிருகமே என முத்திரை குத்துவதில் நமக்கு ஒரு தனி சந்தோஷம்.
செக்ஸ் விசயத்தில் மட்டுமே இப்படி நடக்கிறது என்பது தான் விசித்திரம்!
ஒரு பெண் குற்றம் சுமத்தியதும் ஊரே கேள்வியின்றி ஆணை பழிக்க தயாராவது மேற்சொன்ன பிழையான எண்ணத்தையே காட்டுகிறதுபெண் பலவீனமானவள்அவள் எப்போதும் ஒடுக்கப்படுபவள் என்பதால் அல்ல நாம் ஆணைப் பழிப்பதுஎல்லா சந்தர்பங்களிலும் நாம் இது போல் பாதிக்கப்பட்டோரை கண்ணை மூடி ஆதரிப்பதில்லையே!
பெண் என்பதாலாஆம்ஆனால் ஆண்-பெண் சம்மந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் செக்ஸ் கூடவே வருகிறதேஆனால் செக்ஸ் சம்மந்தப்படாத எந்த விசயத்திலாவது நாம் இப்படியான நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கிறோமா.தா., ஒரு 100 வயதுப் பாட்டிஅவர் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. “என்னை பழிவாங்க வேண்டுமென்று வேண்டுமென்றே வீட்டு உரிமையாளர் மின்சாரத்தை துண்டிக்கிறார்” எனச் சொன்னால் நாம் நம்பத் தயங்குவோம்வீட்டு உரிமையாளர் குற்றச்சாட்டை மறுத்தால் அதை பரிசீலிப்போம்ஆனால் இப்போது 100 வயதை 20 வயதாக மாற்றுங்கள்உடனே “ஆமா அந்த வீட்டு உரிமையாளருக்கும் இளம்பெண்ணுக்கும் ஏதோ விவகாரம் போலஇவளை முயன்று பார்த்து அவள் மறுத்ததால் அதான் அந்தாள் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்கொடூரமானவன்” என யோசிப்போம்செக்ஸ் என்று வந்து விட்டால் நாம் ஆதாரம்லாஜிக் எதுவும் தேடுவதில்லை.
ஒரு ஆண் தன் வாழ்வில் பல விசயங்களில் சமநிலை தவறுவது போல செக்ஸிலும் செய்கிறான்ஆனால் எப்போதும் அல்லநூறில் ஒரு ஆண் நூறில் ஒருமுறை பிறழ்கிறான்ஆனால் நீங்களோ நூற்றுக்கு நூறு ஆண்கள் நூற்றுக்கு நூறு முறை பிறழ்கிறார்கள் என்கிறீர்கள்ஆணுக்கு இதுவே வேலை என்கிறீர்கள்.
பெண்களைத் துரத்துவதே வைரமுத்துவின் அடிப்படையானதவிர்க்க முடியாதகட்டுப்பாட்டைக் கடந்த இயல்பென்றால் அவர் இவ்வளவு ஆயிரம் பாடல்களை எழுதி இருக்க மாட்டார்அப்படி செக்ஸ் அவரது கட்டுப்பாட்டை மீறியமிக மிக ஆதரமான இயல்பு அல்ல எனில் அவர் நிச்சயம் குற்றவாளியே என நாம் கூற முடியாது.
எப்படிப் பார்த்தாலும் ஆதாரமின்றி ஆண் மீது கண்ணை மூடி முத்திரை குத்துவது நியாயமல்ல.
பாதிக்கப்படும் பெண்களால் எப்போதும் ஆதாரத்தை காட்ட முடியாதே என்கிறார்கள்இதையே நீங்கள் எல்லா குற்றங்களுக்கும் சொல்லலாமே.
என்னை கூட்டமாய் சேர்ந்து சிலர் ஒரு தனியான இடத்தில் வைத்து தாக்குகிறார்கள்நான் பயந்து பின்வாங்குகிறேன்அதன் பிறகு புகார் தெரிவிக்கிறேன். “என் வசம் ஆதாரம் இல்லைஆனால் நான் பாதிக்கப்பட்டவன்நம்புங்கள்” என்றால் நம்புவார்களாபுகார் சொல்பவள் பெண் என்றாலும் கூட (அதில் பாலியல் அரசல்புரசலாய் தொனிக்கவில்லை என்றால்ஆதாரம் கேட்போம்ஆனால் பாலியல் என்றால் மட்டும் ஏன் ஆதாரம் எல்லாம் வேண்டாம் என அவ்வளவு அவசரமாய் நம்பத் தலைப்படுகிறோம்?
இது தவறல்லவாமுரண் அல்லவா?

Comments

Anonymous said…
பார்ப்பனீயம் சிறப்பாக தமிழை ஒழிக்கும் வேலையை செய்கிறது. கலைஞர் உள்ள வரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது பொதுவெளியில் தமிழ் , திராவிடம் பற்றி பேச மக்கள் அறிந்த ஒருவராக உள்ளவர் வைரமுத்து. அவர் புகழை கெடுத்து திராவிடம் பற்றி ஒரு இங்குள்ள மக்களிடமே ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்த பார்பனியம் முயல்கிறது. அதன் மூலம் பார்பனியம் மற்றும் பாஜக இங்கு நிலை கொள்ள பார்க்கிறது.

சின்மயி இந்த விசயத்தில் ஒரு கருவி.
இதே சின்மயி ஜெயேந்திரன் மற்ற பெண்களுக்கு செய்தது தவறு என்று கூறுவாரா? நிச்சயம் மாட்டார். அது தான் பார்ப்பனீயம்.
Anonymous said…
Howdy! This is my 1st comment here so I just wanted to
give a quick shout out and tell you I really enjoy reading your posts.
Can you recommend any other blogs/websites/forums that cover the
same topics? Thanks for your time!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...