முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புக் கட்டுரை: அலோபதியும் புற்றுநோயும்!


Image result for cancer patient in india
Image courtesy: Down to Earth
என்னுடைய குடும்பம் புற்றுநோய்க் குடும்பம். என் பாட்டி, அத்தைகள், அத்தை ஒருவரின் கணவர், என் அப்பா என பலரும் புற்றுநோய்க்குப் பலியானதை, அந்நோய் உடலை மெல்ல மெல்ல சிதைக்கும் அவலத்தை, அது குடும்பத்தினருக்கு அளிக்கும் கடும் துயரத்தை, நேரடியாகக் கண்டிருக்கிறேன்; புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாதாரப் பாதிப்பையும் அனுபவித்திருக்கிறேன்.

என் அப்பா தனக்குப் புற்றுநோய் உள்ளதாக அறிந்துகொண்டபோது அது ஓரளவு முற்றிப்போன நிலையில் இருந்தது. நான் அப்போது முதுகலைப் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். கடுமையான அலோபதி சிகிச்சைக்குப் பிறகு அவர் சில வருடங்கள் கூடுதலாய் வாழ்ந்தார். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை பெரிது. அவரது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இந்த சிகிச்சைக்காக இழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அம்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஒரே வீடு மட்டும் எஞ்சியிருந்தது; அதிலிருந்து வரும் வாடகையும் அதோடு அப்பாவின் மிகச் சொற்ப ஓய்வூதியமும் அவரைச் சற்றே காப்பாற்றின.
முதுகலைப் படிப்புக்குப் பின் ஆய்வுப் படிப்பையும் முடிக்க இயலாத நிலை எனக்கு ஏற்பட்டது; நான் எம்.பில் சேர்ந்த பின் அப்பாவின் நிலை அறிந்தபின் குற்றவுணர்வு என்னை வாட்டியது; குடும்பம் பணமின்றித் தவிக்கையில் நான் மட்டும் சொகுசாகப் படிப்பதா? என் பெற்றோர் படிக்க வேண்டாம் எனத் தடுக்கவில்லை; நான் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவா என யோசித்தபோது அவர்கள் “வேண்டாம் படி” எனச் சொல்லவும் இல்லை. அந்தக் குழப்பமான நிலையில் நான் கவிஞர் யுவன் சந்திரசேகரிடம் சென்று என் மனத் தடுமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டேன். அக்கட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர் உதவினார். படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
விளைவாக எந்த வேலையிலும் என்னால் உறுதியாக நீடிக்க முடியவில்லை; என் விருப்பத்துக்குரிய வேலையை நான் அடைய எட்டு வருடங்கள் ஆயின. ஒருவேளை என் இளங்கலையின்போது அப்பாவைப் புற்றுநோய் தாக்கியிருந்தால் நான் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல் போயிருக்கலாம். இதுபோன்ற உருக்குலைவுகள் பலர் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளதை அறிவேன்.

மேலும் படிக்க: http://www.minnambalam.com/k/2018/10/25/26?fbclid=IwAR1GQmhjoqmULyIJBAptB2auTKRxfC4ab3EQs0Msid72TwfHRN6GDORDzmw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...