முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2

விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2



பா.ராவின் “இறவான்

இறவான்இந்த ஊரடங்கு தினங்களில் நான் வாசித்த மற்றொரு நாவல். நிச்சயம் குறிப்பிடத்தக்கது.
சில நாவல்களை துவக்கம் முதலே ஒரு ஆச்சரியத்துடன் படிப்போம் - “இறவான்அப்படியான ஒன்று. ஏனென்றால் தமிழில் இப்படியொரு கதையை இதற்கு முன்பு படித்ததாய் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் சாமர்செட் மாமின் Moon and the Six Pence நிச்சயம் நினைவுக்கு வந்தது. ஆனால் அது கூட - ஓவியத்தின் பாலுள்ள மிதமிஞ்சிய ஆர்வத்தால் தூய இயற்கை நிலைக்கு மீண்டு பிறகு மெல்ல மெல்ல அழியும் ஒரு ஓவியனின் கதை என்னும் அளவில் - “இறவானுக்குதொலைதூர சொந்தம் மட்டுமே. இந்த தனித்துவத்துக்காகவே இந்நாவலுக்கு என்றும் தமிழில் ஒரு இடம் இருக்கும்.


அடுத்து இந்த நாவலில் உள்ள ஒருவித விளையாட்டுத்தனம், பல சமயங்களில் வாசகனையும் ஏமாற்றி விடும் ஒரு குறும்புத்தனம். அது இதற்கு மதிப்புரை எழுதியவர்கள் இது ஒரு இசை மேதையின் கதை என சொல்வதில் இருந்து நாம் அறியலாம். ஆனால் இது பிளவாளுமை மனச்சிக்கல் (split personality disorder) கொண்ட ஒருவனின் கதை என முதல் சில அத்தியாயங்களில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. ஆனால் போகப் போக நாம் இந்த சிறுவனின், இளைஞனின் பிரமைகளை நம்பும்படி, அவன் பைத்தியமே இல்லை, நிஜமாகவே மேதைதான் என நினைக்கும்படி பா.ரா சாமர்த்தியமாக எழுதிச் செல்கிறார். மேதைமை என்பதை பிளவாளுமையாகக் காணும் இந்த சட்டகத்தை நான் ரசித்தேன். நாவலை இரண்டு விதமாக வாசிக்கும் ஒரு சாத்தியத்தை அவன் உண்டு பண்ணியிருக்கிறார்.

 சிறுவனாக இருக்கும் அவன், எந்த இசைப்பயிற்சியும் இல்லாமலே, கிட்டத்தட்ட எல்லா வாத்தியங்களையும் அபாரமாக வாசிக்கிறான். இசை தன்னில் இருந்து பொங்கிப் பிரவாகிக்கிறது, அதைத் தான் கற்கத் தேவையில்லை என அவன் நினைக்கிறான். அடுத்து அவன் தன்னை அப்ரஹாம் ஹராரி எனும் பெயரிலான யூதன் என உணர்கிறான். இஸ்ரேலுக்குப் போய் வழிபட வேண்டும் எனக் கூறுகிறான். அவனது பெற்றோர்கள் பயந்து போகிறார்கள். அவர்கள் ஊரை மாற்றிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் அதுவும் அவனது மனப்பிசகை சரி பண்ணுவதில்லை. சென்னை நாட்களில் அவன் மேலும் இசை நோக்கி ஈர்க்கப்படுகிறான், பலரும் அவனது மேதைமையை ஆங்கீகரிக்கிறார்கள். பிற்பாதி நாவல் ஒருமேதையின் கிறுக்குத்தனங்களைபல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் வழி சித்தரிக்கிறது.
 ஹராரி தற்கொலை செய்வதுடன் / உயிர்பிரிவதுடன் நாவல் ஒரு முடிவுக்கு வருகிறது. அப்போது அவன் தன்னை இருவேறு நபர்களாக துல்லியமாக அறிய வருவதை மற்றொரு மொழி விளையாட்டு வழி பா.ரா காட்டுகிறார் - சில வாசகர்கள் இந்த அத்தியாயத்தில் நிறைய இலக்கணப் பிழைகள் இருப்பதாக தவறாக நினைக்குமளவுக்கு தலைவர் விளையாடியிருக்கிறார். ஆனால் அவை பிழைகள் அல்ல, சுஜாதாவை நினைவுபடுத்தும் மொழிக் குறும்பு, அதன் மூலம் சுருக்கமாய் அழகாய் அவன் தன் மரணத்தை எப்படிப் பார்க்கிறான் எனக் காட்டுகிறார்

ஒரு வாசகனாக என்னைப் பெரிதும் நெகிழ வைத்த இடங்கள் இந்நாவலில் உண்டு - பல கவித்துவமான உணர்வெழுச்சியான இடங்கள். குறிப்பாக இது: கேரளாவுக்கு அவன் தன் மனைவியுடன் செல்லும் ஒரு தேவாலையத்தை சுற்றிப் பார்க்கிறார்கள். அங்கு ஒரு சிலுவை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்த்தர் இல்லை. இப்படி கர்த்தர் இல்லாத ஒரு தேவாலயமா என அவன் மனைவி வியக்கிறாள். அப்போது அவன் சென்று அந்த சிலுவையின் முன்னால் போய் தன்னை கர்த்தராக கைகளை அகல வைத்து நின்று கொள்கிறான். அற்புதமான இடம் அது. அந்த கட்டத்தில் அவன் ஒரு பிரசித்தமான இசை இயக்குநராக ஆகப் போகிறான். அவனது இசைக்கு நிறைய பணமும் பெயரும் கிடைக்கிறது. ஆனால் அது அவன் வாழ நினைக்கும் வாழ்க்கை அல்ல. அது அவன் அல்ல. அவனுக்கு அதில் இருந்து தப்பிச் செல்ல வேண்டும். இந்த மன உணர்வுகளை பா.ரா ரொம்ப சுருக்கமாய் இந்த சித்திரம் (சிலுவையில் அறையப்பட்ட கலைஞன்) மூலம் காட்டி விடுகிறார். சினிமாவில் தான் பொதுவாக இவ்வளவு காட்சிபூர்வமாய் கதை சொல்லுவார்கள்.

பா.ராவின் ஆராய்ச்சி, இசைஞானமும் பல இடங்களில் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.
இந்த நாவலின் குறையையும் சொல்ல வேண்டும் - அப்ரஹாம் ஹராரியின் பிரச்சனை தன்னை அறிவது அல்லது இது தான் தான் என அறிந்த பின் அதை தனக்கே நிரூபிப்பது. அல்லது தன்னுடைய பிளவுண்ட மனத்தை தானாக வரித்து அதற்கு மேலும் பயணித்து ஒரு முழுமையை அடைவது. ஆனால் இந்த தேடலுடன் துவங்கும் நாவல் பிற்பாதியில் கடற்கரையில் பெற்றோரைத் தொலைத்து ஜாலியாக திரியும் குழந்தையைப் போல ஆகிறது. “அகத்துக்குள்செல்லாமல்புறத்திலேயேநாவலை தக்க வைக்கிறார் பா.ரா. ஆழமாக பயணிக்க வேண்டிய இடங்களில் பா.ரா சற்றே பனிச்சறுக்கு சறுக்கி கடந்துபோய் விடுகிறார். மையப்பாத்திரம் யூதனாக விரும்பி, அங்கிருந்து இசையில் உச்சங்களைத் தொட்டு போதையில் ஜி.நாகராஜனைப் போல அலைந்து கடைசியில் ஒரு சிம்பனியை உண்டு பண்ண நினைத்து எங்கெங்கோ பயணித்து (நடுவில் ஒரு பெண்ணை காதலித்து மற்றொருத்து மணந்து கொண்டு அவளையும் ஒருநாள் கைவிட்டுப் போய்) கடைசியில் உயிர்விடுகிறான். எப்படி கடைசி வரை ஜெஸ்ஸி கார்த்திக்கு அல்வா கொடுக்கிறாளோ (VTV) அப்படியே பா.ராவும் நமக்கு அல்வா கொடுத்து விடுகிறார். என்ன ஜெஸ்ஸியைப் போன்றே இந்த அல்வாவும் சுவையாக இருக்கிறது என்பதால் மன்னித்து விடலாம்.
சுவைத்துப் பாருங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...