முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சக்லைன் முஷ்டாக்: உள்ளே வெளியே…



சக்லைன் முஷ்டாக் தொண்ணூறுகளில் off ஸ்பின் பந்து வீச்சை புதுப்பித்தவர். அவர் இல்லாவிட்டால் ஒருவேளை off ஸ்பின் இன்று கிட்டதட்ட காணாமல் போயிருக்கலாம். அவர் இல்லையென்றால் ஹர்பஜன், அஜ்மல், அஷ்வின் ஆகியோர் இத்துறையில் ஜொலித்திருக்க முடியாது. சக்லைன் தூஸ்ரா எனும் ஒரு புதுவகை பந்தை கண்டுபிடித்து off ஸ்பின்னுக்கு புது உயிர் அளித்தார்.

தூஸ்ரா என்றால் என்ன? வழக்கமான Off ஸ்பின் பந்து வெளியே இருந்து உள்ளே ஸ்டம்பு நோக்கி வரும். ஆனால் தூஸ்ரா உள்ளே இருந்து வெளியே போகும். ஆனால் பந்து வீசும் பாணி இரண்டு பந்துகளுக்கும் ஒரே போல இருக்கும். சக்லைன் தூஸ்ராவை கண்டுபிடித்த பின் off ஸ்பின் என்றால் பேட்ஸ்மேன்கள் அஞ்ச ஆரம்பித்தார்கள். குறிப்பாக 1997இல் இருந்து 2000 வரை சக்லைன் முஷ்டாக் ஒரு ஒருநாள் ஆட்டத்தின் இறுதி பத்து ஓவர்களில் பந்து வீசி ஏகப்பட்ட விக்கெட்டுகளை குவித்தார். 40வது ஓவரில் சக்லைன் பந்து வீச வந்தால் மளமளவென விக்கெட்டுகள் சரியும். எந்த நிலையில் உள்ள ஆட்டத்தையும் சக்லைனால் இந்த கட்டத்தில் வென்று தர முடிந்தது. இறுதி பத்து ஓவர்களுக்கு death overs என்று பெயர். சக்லைன் முஷ்டாக் இந்த ஓவர்களை பேட்ஸ்மேன்களின் death உறுதி செய்யும் கட்டமாய் மாற்றினார்.
தூஸ்ரா: பெயர் தோன்றின கதை
சக்லைன் கண்டுபிடித்த இந்த பந்துக்கு அவர் பெயர் வைக்கவில்லை. சக்லைன் 1995இல் ஆடத் துவங்கிய காலத்தில் அவருக்கு எப்போது தூஸ்ராவை போட வேண்டும் எனத் தெரியாது. அனுபவமின்மையால் அவர் திணறினார். அப்போது அணியின் சீனியரான விக்கெட் கீப்பர் மோயின்கானின் அறிவுரைக்கு ஏற்றபடியே சக்லைன் வீசுவார். பேட்ஸ்மேன் கவனம் இழக்கிறார், அதிகம் கால்பக்கம் ஆடவே முனைகிறார் எனத் தோன்றினால் மோயின்கான் உருதுவில் சக்லைனிடம்உன்னுடையரெண்டாவது பந்தைவீசுஎன கூறுவார். ரெண்டாவது பந்துக்கு உருதுவில்தூஸ்ராஎன்று பெயர். ஒரு நாள் ஒரு நேரலை ஆட்டத்தில் மோயின்கான் இந்த தூஸ்ராவை போடும்படி சக்லைனிடம் கூறும் போது ஸ்டம்ப் மைக் மூலம் அது டிவி வர்ணணையாளர்களுக்கு கேட்கிறது. அவர்கள் உடனே சக்லைனின் அந்த ரெண்டாவது பந்தை கவனித்தார்கள். அதன் பெயர் தூஸ்ரா என அறிவித்தார்கள். அப்படித் தான் தூஸ்ரா அதிகாரபூர்வ கிரிக்கெட் சொல் ஆனது.
சுய அறிதலின் கதை
சக்லைன் முஷ்டாக் 1976இல் பாகிஸ்தானில் லாகூரில் பிறந்தார். அவருடைய அப்பா ஒரு குமாஸ்தா. சக்லைனுக்கு இரு மூத்த சகோதரர்கள். சிப்தைன் முஷ்டாக் மற்றும் ஸுல்குர்னைன் முஷ்டாக். இருவரும் சக்லைனின் உருவாக்கத்தில் முக்கியமானவர்கள். இருவரும் ஸ்பின்னர்கள். அவர்கள் தம் குட்டித் தம்பிக்கு ஸ்பின் வீச சொல்லிக் கொடுத்தார்கள். சக்லைன் சின்ன வயதில் ஒடிசலான குள்ளமாய் இருப்பார். இம்ரான்கான், வாசிம் அக்ரன், வகார் யூனிஸ் ஆகியோரை கிட்டத்தட்ட வழிபட்ட அந்த சின்ன பையனுக்கு அவர்களைப் போல் வேகமாய் பந்து வீச ஆசை. ஆனால் அந்த சோனி உடலைக் கொண்டு அவரால் முடியாது. அதனால் ஸ்பின்னில் கவனம் செலுத்தினார். தெருவில் விளையாட இடம் இல்லாததால் மாலையில் மொட்டை மாடியில் சகோதரர்கள் மூவரும் டேபிள் டென்னிஸ் பந்து கொண்டு கிரிக்கெட் ஆடுவார்கள். மாலையில் ஆட்டம் எப்போதுமே இரண்டு அண்ணன்களும் டியூசன் முடித்து வந்த பிறகு தான் ஆரம்பிக்கும். அதுவரை சின்ன தம்பி சக்லைன் தனியாய் மாடியில் டேபிள் டென்னிஸ் பந்தைக் கொண்டு விதவிதமாய் வீசி பழகி நேரத்தை கழிப்பான். அப்படித் தான் ஒருநாள் off ஸ்பின் வீசும் போது அது வழக்கம் போல் உள்ளே வராமல் வெளியே போனது. பின்னர் அதை தன் அண்ணன்களிடம் வீசிக் காட்டிய போது அவர்கள் வியந்தனர். இது என்ன ஒரு விநோதப் பந்து என குழம்பினார்கள். ஆனால் தம் தம்பியை பாராட்டி ஊக்குவித்தார்கள்.
சக்லைன் பின்னர் இப்படி வெளியே போகும் பந்தை டென்னிஸ் பந்தால் வீச பழகினார். அதன் பின்னர் மெல்ல மெல்ல கிரிக்கெட் பந்தில் பழகினார். கிரிக்கெட் பந்தில் கட்டுப்பாட்டுடன் தூஸ்ரா வீச தனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் பயிற்சி தேவைப்பட்டது என்கிறார் சக்லைன்.
சக்லைன் அப்போது ஒரு பேட்ஸ்மேனாக கிளப் ஆட்டங்களில் இடம் பெற முயன்றார். ஆனால் கிளப் அணியில் ஏற்கனவே சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருந்ததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. “உன்னுடைய ஸ்பின் பந்து வீச்சில் கவனம் செலுத்து. பவுலராக உனக்கு இடம் கிடைக்கும்என அண்ணன்கள் சக்லைனுக்கு அறிவுரை கூறினர். அப்போது உலகமே போற்றும் சிறந்த ஸ்பின்னராய் தம் தம்பி உருவாகப் போகிறான் என அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
தன்னுடைய தூஸ்ரா மூலம் சக்லைன் விரைவில் கிளப் போட்டிகளில் மட்டுமல்ல மாநில அணியிலும் சோபித்தார். 1995இல் சக்லைன் PIA (பாகிஸ்தான் இண்டெர்நேசனல் ஏர்லைன்ஸ்) கிளப் அணியில் ஆடினார். அந்த அணியின் தலைவர் வாசிம் அக்ரம். ஆனால் அக்ரம் சர்வதேச ஆட்டங்களில் பிஸி என்பதால் கிளப்புக்கு பெரும்பாலும் ஆட மாட்டார். ஆனால் சக்லைனின் அதிர்ஷ்டம் ஒரு ஆட்டத்தில் அக்ரம் பங்கு பெற்றார். அப்போது அவர் சக்லைனின் தூஸ்ராவை கண்கூடாக கண்டு வியந்தார். “நான் பல off ஸ்பின்னர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததிலேயே சிறந்த off ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தான்என்கிறார் அக்ரம்.
அதன் பின்னர் சக்லைன் பாகிஸ்தான் அணிக்கு தேர்வானார். வாசிம் அக்ரம் தலைவராக இருந்த அணியில் சக்லைன் அட்டகாசமாய் பந்து வீசினார். சக்லைன் ஒரு பக்கம்வாசிம் பாயைகடவுளாக வழிபட்டார். வாசிம் அக்ரம் சக்லைனை சொந்த சகோதரனை போல் நேசித்தார். அவர் மீது நம்பிக்கை வைத்தார். அக்ரம் அணித்தலைவராய் விளங்கின நான்கு வருடங்களும் சக்லைனும் அபாரமாய் வீசினார். அக்ரம் தலைமையில் இருந்து நீக்கப்பட்டதும் சக்லைனும் துவண்டு போனார். காயம் காரணமாகவும் போதுமான ஆதரவு இல்லாமலும் 25 வயதுக்கு உள்ளாகவே அவரது ஆட்ட வாழ்வு பெரும்பாலும் முடிந்து போயிற்று.  
2004இல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு ஆட சென்ற போது சக்லைன் முட்டியில் காயமடைந்திருந்தார். ஆனாலும் அவர் ஆட வேண்டிய நிர்பந்தம். விரேந்திர சேவாக் முல்தானில் 309 அடித்த ஆட்டத்தில் சக்லைனை அவர் கைமா செய்தார். அதன் பிறகு சக்லைன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாயிற்று. ”என் கிரிக்கெட் வாழ்வு முடிந்து போனதற்கு சேவாக் ஒரு காரணம்என சக்லைன் பிற்பாடு தெரிவித்தார்.
1996இல் இருந்தே சக்லைன் இங்கிலாந்தின் Surrey உள்ளூர் அணியில் ஆடி வந்தார். ஓய்வுக்கு பிறகு அவர் முழுதாய் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடினார். அங்கு அவர் சானா எனும் பெண்ணை சந்தித்து காதல் கொண்டார். அவரையே மணந்தார். இன்று சக்லைன் இங்கிலாந்தில் ஸ்பின் பவுலிங் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.
தூஸ்ரா வீசுவது எப்படி?
விதிமுறைகளுக்கு உட்பட்டு தூஸ்ரா வீச முடியாது என அஷ்வின் கூறி உள்ளார். ஆனால் சக்லைன் கிளீனாகவே வீசினார். Off ஸ்பின் வீச பெருவிரல், சுண்டு விரல் மற்றும் நடுவிரலை பயன்படுத்துவார்கள். மணிக்கட்டையும் திருப்ப வேண்டும். நடுவிரலை பயன்படுத்தாமல் மணிக்கட்டை திருப்பாமல் வீசினால் தூஸ்ரா ஆகும் என்கிறார் சக்லைன்.

கூடுதல் தகவல்கள்:
மிக குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100, 150 மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் சக்லைன் முஷ்டாக்
இரண்டு டெஸ்டுகளில் தொடர்ந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை அவர் இந்தியாவுக்கு எதிராய் 1999இல் நிகழ்த்தினார்
ஒரே வருடத்தில் மிக அதிக ஒருநாள் விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையும் இவருடையதே – 69 விக்கெட்டுகள்.
1999 உலகக்கோப்பையின் போது வீரர்கள் தம் மனைவியை ஹோட்டலில் தங்க வைக்கக் கூடாது என பாகிஸ்தான் வாரியம் வலியுறுத்தியது. அப்போது சக்லைன் ரகசியமாய் தன் மனைவியை தன் அறைக்குள் தங்க வைப்பார். அணியின் மேலாளரோ சக வீரர்களோ அறைக்கதவை தட்டினால் மனைவியை பீரோவுக்குள் வைத்து பூட்டி விடுவார். ஒருமுறை இந்த ரகசியம் தெரிந்து தன் நண்பர்கள் ஹோட்டல் அறைக்கு வந்துபீரொவுக்குள் இருக்கும் மனைவியை வெளியே வரச் சொல்என கலாய்த்ததாய் ஒரு பேட்டியில் சொல்கிறார்.
சக்லைன் டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கெட்டுகளும், ஒருநாள் ஆட்டங்களில் 288 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...