முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹதராபாத் vs பெங்களூர் - அதிர்ஷ்ட தேவதை கோலியின் மடியில்



இன்றைய போட்டியில் 164 எனும் இலக்கை ஹைதராபாத்தால் அடித்திருக்க முடியும் - துரதிஷ்டவசமாக ரன் அவுட்டுகள் இரண்டு, ஒரு காயம் ஆகியவை அவர்களை முடக்கியிராவிட்டால். ஆனால் பெங்களூர் இதை சாதகமாக பயன்படுத்தி பந்து வீசி வென்றனர். குறிப்பாக இன்றைய நட்சத்திரம் வீச்சாளர்கள் சயினி மற்றும் சாஹல். இறுதி ஓவர்களில் துபேவை ஹைதராபாதால் அடிக்க முடியவில்லை என்பது விசித்திரமே. அடித்துப் பிடித்து வென்றிருந்தாலும் பெங்களூர் அணியின் பந்து வீச்சு பெரிதும் நம்பிக்கையளிக்கவில்லை. 


இன்றைய ஆடுதளம், சூழல் - முந்தின ஆட்டங்களில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது - துவக்க 6-8 ஓவர்களுக்கு ஆடுவது சுலபமாகி உள்ளது. குறைநீளத்தில் அதிகம் எகிறவில்லை. பந்து சுழலவில்லை. ஆடுதள அமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள்.


முதலில் மட்டையாடிய பெங்களூர் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக தேவ்தத் படிக்கல்லின் அரை சதம் - அவர் உயரமான இடதுகையாளர். நன்றாக டைமிங் செய்கிறார். கால்கள் அதிகம் நகர்வதில்லை. நேராகவோ v வடிவிலோ அடிப்பதில்லை. off பக்கம் இடம் விட்டு அடிக்கிறார். கால் பக்கம் வந்தால் flick செய்கிறார். சற்று 90 மற்றும் 2000த்தின் துவக்கத்தின் இலங்கை அணியில் ஆடிய இடதுகை மட்டையாளர்களை நினைவுபடுத்துகிறார்; குறிப்பாக உப்புல் தரங்காவை. ஆனால் இப்போதைக்கு அவரை ஒரு சிறந்த வீரர் என சொல்ல முடியாது. தொழில்நுட்பத்தில் வலுவானவர் அல்ல. ஒரே பாணியில் அநேகமாய் ஒரே இடங்களில அடிக்கிறார். வருங்காலத்தில் அவரது பலவீனத்தை உணர்ந்து வீசுவார்கள். டி-20யில் ஜொலிப்பதற்கான தோள்வலிமையும் இல்லை.


ஒரு விசயம் வினோதமாக இருந்தது - துவக்க வீரர்கள் நன்றாக ஆடி வந்த போதே தொடர்ந்து 15வது ஓவர் வரை அதை எடுத்து செல்லாமல் அவசரப்பட்டு வெளியேறினார்கள். ஒருவேளை 180-200 ரன்களை எதிர்பார்க்கிறார்களோ என நினைத்தேன். ஆனால் இருவரும் போன பிறகு வந்த கோலி மற்றும் டிவில்லியர்கள் பொறுமையாக ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுத்து ரன் ரேட்டை குறைத்தார்கள். இதற்கு துவக்க வீரர்களே ஆடியிருக்கலாமே?


முக்கியமான திருப்புமுனை நடராஜன் கோலியின் விக்கெட்டை எடுத்தது. 


இறுதி 8 ஓவர்களில் ஓட்டமெடுப்பது சிரமமாக உள்ளது. வந்தவுடன் பந்தின் வேகத்தை கணித்து அடிக்க இயலவில்லை. ஒருவேளை டிவில்லியர்ஸ் அரைசதம் அடிக்காவிடில் பெங்களூர் இன்னும் சிரமப்பட்டிருக்கும்.


மைதானத்தின் புல்வெளி, லேண்டிங் இடம் ஆகியவை சற்று இளகின மண்ணால் அமைக்கப்பட்டுள்ளதால் சுலபத்தில் களத்தடுப்பாளர்களுக்கு வழுக்குகிறது. நேற்று அஷ்வின் காயப்பட்டால் இன்று இரண்டு மேல் மேலும் காயப்பட்டார்கள் - மிச்சல் மார்ஷ் மற்றும் சாஹல். அதுவும் சரியாக முதல் 6 ஓவர்களுக்குள் இது நடக்கிறது. என்ன மாயமோ?


நேற்றைக்கும் இன்றைக்குமான முக்கிய வித்தியாசம் இந்த ஆடுதளத்தில் திடீரென சுழல்பந்து திரும்பவில்லை - ரஷீதுக்கு அது நடக்கவில்லை என்றால் பாருங்களேன். (ஆனால் சாஹலின் ஒரு பந்து திரும்பியது - அவர் ரஷீதை விட சரியான நீளத்தில் வீசயதாலா அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுதளம் சற்று மாறுகிறதா?) இது மத்திய ஓவர்களில் விக்கெட் எடுப்பதை சிரமமாக்கியது. பொறுமையாக கராறாக வீசி ரன்களை குறைத்து மட்டையாளனை கடுப்பேற்றி விக்கெட் எடுப்பது மட்டுமே சாத்தியம். அதைச் செய்கிற அணியே வெல்லும்.


நவ்தீப் சயினி மிக நன்றாக வீசினார் - 145 கி.மீ வேகத்தில் சரியான நீளத்தில். ஒரு சர்வதேச வீச்சாளரைப் போல அவ்வளவு நிதானமாய் வீசுகிறார். வரும் சீஸனில் இந்திய அணிக்குள் தொடர்ந்து இடம்பெறுவார் என நினைக்கிறேன்.


இது போன்ற ஆடுதளத்தில் 160க்கு மேல் இலக்கை விரட்டும் போது முதல் 10 ஓவர்களில் 90-100 ரன்களைக் குவித்து விட வேண்டும். அல்லாவிடில் ஒன்றிரண்டு மட்டையாளர்கள் இறுதி ஓவர் வரை நின்றாட வேண்டும்.

ஹைதராபாத் முடிந்தவரை ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றாலும் காயம், துரதிஷ்டமான ரன் அவுட்டுகளை அவர்களை பின்னுக்குத் தள்ளியது. அதிர்ஷ்ட தேவதை இன்று கோலியை தாராளமாக அணைத்துக் கொண்டாள்.


வரும் ஆட்டங்களில் பெங்களூர் இன்னும் சிறப்பாக பந்து வீச்சில் ஆட முயன்றால் இத்தொடரில் இறுதிப்போட்டியைக் கூட அடைய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...