இலங்கை அரசு இப்படியான படுகொலைகளை எப்போது நிறுத்தப் போகிறது? இதுவே கொல்லப்பட்டது அதிமுக அமைச்சர் குடும்பம் என்றால் இப்படி ரெண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அவசரமாக மயானத்துக்கு அனுப்பி அடக்கி விடுவார்களா?
இது மீனவர் எல்லை கடக்கிற பிரச்சனை மட்டுமல்ல. இதுவே இந்தியர்கள் பாக் எல்லையில் கொல்லப்பட்டிருந்தால் பிரதமரே முழங்கி ஏவுகணைகளை அனுப்பி இருப்பார். ஆனால் சீனா மற்றும் இலங்கை விசயத்தில் நம் அரசுகள் பம்மியே செல்கின்றன, அவர்கள் நம் நாட்டை ஆக்கிரமித்தாலும், மக்களைக் கொன்றாலும் கூட. காரணம் அரசின் பினாமிகள் இந்நாடுகளில் செய்துள்ள பல லட்சம் கோடி முதலீடுகள். இந்த வணிக நலன்களைப் பாதுகாக்கவே அரசு எப்போதும் வெள்ளைக்கொடி காட்டி எவ்வளவு செருப்படிகளையும் வாங்கிக் கொள்கிறது. மற்றொரு காரணம் கொல்லப்படுவது தமிழர்கள் என்பது. இதுவே மலையாளிகள் என்றால் இதை ஒரு தேசியப் பிரச்சனையாக்கி இருப்பார்கள். பஞ்சாபியர் என்றால் இந்தியா முழுவதையும் ஸ்தம்பிக்க செய்திருப்பார்கள். அதைக் கூட விடுங்கள், கொல்லப்பட்டது கப்பலில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகள் என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்திருக்கும். மீனவ மக்களை தமிழகம் ஏதிலிகளாகவே நடத்துகிறது!
இந்த நாட்டுக்கு குடியரசு தினம் ஒரு கேடா?

கருத்துகள்