முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீதியின் பெருவெற்றி ஏன் தேசத்துக்கு முக்கியம்!



இந்த மாநில தேர்தல் முடிவுகளின் மிகப்பெரிய மகிழ்ச்சி திமுக கூட்டணியின் வெற்றி அல்ல, மேற்கு வங்கத்தில் தீதியின் பெருவெற்றி தான். ஏனென்றால் திமுக வெற்றியானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸை ஒழித்துக் கட்டி விட்டோம் என பாஜக சார்பு ஊடகங்கள் கொக்கரித்தன. மோடி "தீதி ஓ தீதி" என விடலைத்தனமாக பரப்புரையில் கூவினார். "எவ்வளவு லட்சம் பேர் என்னைப் பார்க்க வந்திருக்காங்க" என அகமகிழ்ந்து பேசினார். ஆனால் வங்காள வாக்காளர்கள் பாஜகவை "நீ அதே இடத்தில நின்னுக்கோ" என உட்கார வைத்து விட்டார்கள்.

 மாறாக ஒருவேளை பாஜக வென்றிருந்தாலோ நிலைமை தலைகீழாகி இருக்கும் - குடியுரிமை திருத்தச் சட்டத்தை அங்கே உடனடியாக நடைமுறைப்படுத்தி அதற்கு மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்து விட்டார்கள் என அவர்களே அறிவித்து, அடுத்து நாடு முழுக்க கொண்டு வந்திருப்பார்கள். நாடு முழுக்க பாஜக மற்றமை என கருதும் மக்கள் முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பார்கள். பல மாநிலங்கள் பாதி திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகியிருக்கும். நம் சிறுபான்மை சொந்தங்களை கண்முன்னே அடிப்படை உரிமைகளை பறித்து விலங்குகளுக்கும் கீழாக நடத்தி இருப்பார்கள். மற்றொரு முள்ளிவாய்க்காலை இங்கு நிகழ்த்தி இருப்பார்கள். பாஜகவின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புக்கு மே.வ வாக்காளர்கள் சாணி அடித்திருக்கிறார்கள்! நாட்டை காப்பாற்றி இருக்கிறார்கள்! இதற்காகவே வங்காளிகளை போற்றுவோம்! வாழ்த்துவோம்!


இரு கோரிக்கைகள்!


1) இந்த இரண்டாம் அலை முடிந்த பிறகு பினராயி விஜயன், மமதா ஆகியோரை அழைத்து காங்கிரஸ், இடதுசாரிகள், தலித், சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து திமுக தமிழகத்தில் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய அளவில்  அடுத்த கட்ட முன்னெடுப்புக்கான அறிவிப்பாக, முற்போக்கு சக்திகளின் எழுச்சியாக இதை சித்தரிக்க வேண்டும்.


2) மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பாஜகவின் பின்னின்று வேலை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பழைய வரலாற்றை மறந்து தீதியுடன் நல்லுறவை பேண வேண்டும். பாஜகவை வெல்ல வைத்தால் இடதுசாரிகள் அங்கு ஒரேயடியாக மறைந்து போகும் எனும் எளிய உண்மையை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் இணைந்தால் மட்டுமே இனி மறுமலர்ச்சி அடைய முடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...