முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஷான் கிஷன் மறந்த வழி

 


இஷான் கிஷனின் மட்டையாட்டத்தை கடந்த ஓராண்டாக கவனித்தால் ஒரு முக்கியமான பலவீனம் தெரியும். அவர் அனேகமாக எல்லா பந்துகளையும் off பக்கமாக விரட்ட, தூக்கி அடிக்க விரும்புகிறார். அதற்காக பந்து வெளிப்பட்டதும் middle and off க்கு அவரது முன்னங்கால் நகர்ந்து விடுகிறது. பந்து வீச்சாளர்கள் அவருக்கு வீசும் பந்தின் திசையை off குச்சியில் இருந்து உள்ளே வருவதாக வைத்துள்ளார்கள். இதனால் மற்ற இடதுகையாளர்கள் நேராகவோ மிட் விக்கெட்டுக்கோ அடிக்கக் கூடிய பந்துகளை கிஷனால் சுத்தமாக அடிக்க முடிவதில்லை, cramp ஆகி விடுகிறார். ரன்கள் வராமல் அவர் தடுமாற ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் ரிதம் போய் விடுகிறது. விளைவாக அவுட் ஆகிறார்


இதை சரி செய்ய அவர் பந்தின் திசைக்கு ஏற்ப காலாட்டத்தை கொள்ள வேண்டும். முன்முடிவுடன் குச்சிகளுக்கு குறுக்காக எல்லா பந்துகளுக்கும் நகர்வதை நிறுத்த வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஷிக்கர் தவனுக்கு இதே பிரச்சனை இருந்தது. தவன் பின்னர் வலதுகாலை லெக் ஸ்டம்பில் வைத்து இடம் பண்ணிக் கொண்டு நேராக வரும் பந்துகளை கால் பக்கமாக மிட்விக்கெட், லாங் ஆனில் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். அத்துடன் பவுலர்கள் அவரை மிடில் ஆண்ட் லெக் திசையில் போட்டு கடுப்பேற்றுவதை நிறுத்தினார்கள்.


சில பத்தாண்டுகளுக்கு முன்பு off பக்கத்தின் கடவுளான சவுரவ் கங்குலிக்கு இதே போலொரு பிரச்சனை இருந்தது. அவர் பயிற்சி செய்து அழகாக on drive ஆடி அந்த குறையை சரி செய்தார்


இஷான் கிஷனும் இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார் என நம்புவோம். என்ன விசித்திரம் எனில் இஷான் இந்திய அணிக்குள் வரும் முன்பு மிட் விக்கெட், லாங் ஆன் பகுதிகளில் ஒரு கையை விட்டு பெரிய சிக்ஸர்களை விளாசுபவராக இருந்தார். இந்திய அணியில் நிலைபெறத் தொடங்கியதும் வீட்டுக்குத் திரும்பும் வழியை மறந்த அல்செமர்ஸ் வந்த தாத்தாவைப் போல் ஆகி விட்டார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...