முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதற்காக இந்நூல் எழுதப்பட்டது?




 "நான் ஒரு இலக்கிய வாசகனாக படிக்கத் துவங்கிய போது, சமூக அரசியல் விசயங்களில் ஆர்வம் கொண்டு தோழர்களுடன் விவாதித்துப் பழகிய போது, பின்னர் எழுத வந்த போது ‘மாற்றுத்திறனாளி’ எனும் சொல் புழக்கத்தில் இல்லை, அதனாலே மாற்றுத்திறனாளிகள் குறித்த கதையாடல்களும் தமிழில் அனேகமாக இல்லை. ஒரு மாற்றுத்திறனாளியின் உலகை ஊடகங்கள் அன்று பொருட்படுத்தவே இல்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்வை, அவனை மையமாக்கி பேசிய முதல் படத்தை ஒரு உலக சினிமா விழாவிலே கண்டேன். இன்றும் அத்தகைய சினிமாக்கள் தமிழிலோ வேறு இந்திய மொழிகளிலோ இல்லை. தமிழ் இலக்கியத்திலோ வேறு இந்திய மொழி இலக்கியங்களிலோ நான் படித்தவரையில் இல்லை. அதாவது மாற்றுத்திறனாளிகளை ஒரு பிரச்சினையின், ஒரு மன இயல்பின் உருவகமாக மாற்றி அவர்களை உடலற்றவர்களாக சித்தரிக்கிற படைப்புகளே இருந்தன, இருக்கின்றன, அவர்களை அவர்களாக மட்டுமே பார்க்கிற படைப்புகள் இல்லை. இன்றும் தமிழ் இலக்கியத்தில் வெகுசொற்பமான மாற்றுத்திறனாளி எழுத்துக்கள் உள்ளன. விவாதங்கள் இல்லை, சித்தரிப்புகள் இல்லை, பேச்சே இல்லை, இதனால் மாற்றுத்திறனாளிகள் ஒரு புலப்படாத உயிரிகளாக மாறியுள்ளதைக் கண்டேன், இந்நிலையை மாற்ற வேண்டும் எனும் நோக்கத்திலே நான் என் முதல் நாவலான “கால்களை” எழுதினேன். அதே நோக்கத்துடனே என்னுடைய கட்டுரைகளில் மாற்றுத்திறனாளி அனுபவங்களைப் பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்தேன். ஒரு மாற்றுத்திறனாளியாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டு இச்சமூகத்தைப் பார்க்கவும் விவாதிக்கவும் தொடங்கினேன். இந்த கட்டுரை நூலின் நோக்கமும் உலகம் பேசத் தயங்கும் ஒன்றைப் பேசுவதே. மாற்றுத்திறனாளிகள் பற்றி தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை நூல் ஒருவேளை இதுவாகவே இருக்க வேண்டும்."

"கால்களின் கேள்விகள் நூலில் இருந்து"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...