முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்ணாதிக்கமும் ஆண்களின் நெருக்கடியும்

ஆண்களின் நெருக்கடி

எல்லாரும் தவறாமல் கேட்க வேண்டிய உரை நவீன ஆண்களின் நெருக்கடி பற்றிய வேரல் பேரலின் டெட் டாக்!

எப்படி கடந்த சில பத்தாண்டுகளில் அப்பா இல்லாமல் வளரும் ஆண் குழந்தைகள் குற்றவாளிகளாக, தன்னம்பிக்கை அற்றவர்களாக, தற்கொலை எண்ணம் மிக்கவர்களாக மாறுகிறார்கள், எப்படி உலகம் முழுக்க ஆண் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்த்துள்ளது, இதற்கும் சமூகம் ஆண்களைக் கைவிட்டதற்கும், ஆசிரியர்கள் அதிகமாக பெண்களாக உள்ளதற்கும் உள்ள தொடர்பைப் பேசும் வேரன் பேரல் இன்றைய ஆண் குழந்தைகளும், இளைஞர்களும் ஒரு பெரும் நெருக்கடியை, தந்தையின்மையின் நெருக்கடியை சந்திப்பதாக சொல்லுகிறார். தந்தை என்பது இங்கு ஒரு குறியீடு தான் என நினைக்கிறேன்.

வேரன் பேரல் குறிப்பிடாத ஒரு விசயமுண்டு - தந்தைகள் முக்கியத்துவம் இழக்கும் சமூகங்களிலே சர்வாதிகார தலைவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவ்விதத்தில் கடந்த பத்தாண்டுகளில் மோடி பெற்றுள்ள ஆராதனை, புகழ், ஏற்புக்கு நம் சமூகம் பெண்-வழிபட்டதாக, ஒருதலைப்பட்சமாக மாறுவதற்கும் ஓரு நுட்பமான பிணைப்புள்ளது. உலகம் முழுக்க ஆண் நெருக்கடி அதிகமாக அதற்கு ஈடு செய்ய சினிமாவில், விளையாட்டுகளில், வீடியோ கேம்களில் நாம் மிகை வன்முறையை அதிகமாக விரும்பத் தொடங்குறோம். பாசிசத்தை ஆதரிக்கிறோம். இது நிலைமையை சிக்கலாக்குகிறது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மையம் ஒன்று தான் - குடும்பத்தில் இருந்து ஆணை வெளியேற்றி / பலவீனப்படுத்தி ஒற்றைப் பெண் தலைமையை வரவேற்கிறோம். வெளியிலும் ஆண்களுக்கு போதுமான அக்கறையை, பயிற்சியை, பாதுகாப்பை வழங்க மறுக்கிறோம். பெண்களைப் பாதுகாத்தால், முன்னேற்றினால் மட்டும் போதும் எனும் பாரபட்ச சிந்தனை நம் உலகை வன்முறையும், அநீதியும், பாசிசமும் பயங்கரவாதமும், தற்கொலையும், யுத்தங்களும் மிக்கதாக்கி விட்டது.

லிங்க்  Warren Farrel ted talk

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...