ஆர். அபிலாஷ் எழுதிய “நாவல் எழுதும் கலை” நூல் வாசித்தேன். அபிலாஷின் எழுத்துநடை அபுனைவு நூலையும் தொய்வின்றி வாசிக்க வைத்தது. இந்நூல் புதியதாய் நாவல் எழுத நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். நாவல் எழுதுவது பற்றிய பல்வேறு உதாரணங்களை தந்திருக்கிறார் அபிலாஷ். இந்த நூலிருந்து கற்றுக்கொள்வதைப் போல அவரது உதாரண நூல்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம். என்னளவில் நாவல் எழுதுவது என்பது “அவ்வளவு பெருசா எழுதணுமே” எனும் சோம்பேறித்தனும் தயக்கமும் கலந்த ஒன்றாகவே பல வருடங்கள் நீடித்தது. அதை உடைத்தபோது பிறந்ததுதான் என் முதல் நாவல் தேரி. அதை உடைப்பதற்கும் ஏராளமான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் இந்நூல் வாசகருக்கு தருகிறது. அபிலாஷ் தானும் ஒரு நாவலாசிரியர் என்பதால் அவரது சொந்த அனுபவக்குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார். மேலும், அவரது பயிலரங்கில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி பதில்களையும் இணைத்திருப்பது மிகுந்த பயனுள்ளதாகவே இருக்கிறது.
இவை போன்ற நூல்கள் அதிகம் தமிழில் வர வேண்டும். அவை கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டும். இந்நூலுக்கு அபிலாஷுக்கு வாழ்த்துகள் சொல்வதை விட இந்நூலை வாங்கிப் படித்து நாவலொன்றை எழுதி அவருக்கு நன்றி சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
நூலின் பெயர்: நாவல் எழுதும் கலை
ஆசிரியர்: ஆர்.அபிலாஷ்
வெளியீடு: எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.400
கருத்துகள்