2025இல் வெளிவந்த ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது: 42% ஆண்கள் விவாகரத்தின்போது ஒன் டைம் செட்டில்மெண்டைப் பண்ணுவதற்காக வங்கியின் தனிப்பட்ட கடனை வாங்கியிருக்கிறார்கள் (எகனானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இதைக் குறித்த கட்டுரை வந்துள்ளது). இப்படி கடன் வாங்குகிறார்களா? இது முடியுமா? எனக்குத் தெரிந்தே சிலர் வாங்கி செட்டில் பண்ணியிருக்கிறார்கள். அதாவது சம்பள ஆவணங்களைக் கொடுத்தோ சொத்தை அடமானம் வைத்தோ வாங்குவார்கள். சிலர் சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். ஆனால் அவமானம் கருதி வெளியே சொல்ல மாட்டார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? விவாகரத்துக்காக அலைவது, அது தரும் கடும் மனவதையை அனுபவிப்பது, மாதாமாதம் வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் கொடுக்க நேரிடும் என்பதை நினைத்து அஞ்சுவது, குழந்தையைப் பணம் கொடுத்துப் பெறுவதற்கு எனப் பல காரணங்கள். முக்கியமாக, இதையொட்டி வேலையில் வரும் நெருக்கடிகள். ஒரு ஆண் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் போவது கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்கு சமம்தான். தப்பிக்க வேண்டுமெனில் ஜட்டி வரை கழற்றிக் கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெண்ணுக்கு இத்தகைய இழப்புகள் விவாகரத்தின்போது வராது. சட்டங்களை அவ...