Skip to main content

மீ டூ: சில விமர்சனங்கள் - நூல் மதிப்புரை - மா. அண்ணாமலை


 

நூல் : #me too சில விமர்சனங்கள்

ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 96
வகை : கட்டுரை
#me too என்பது சமூக வலைத்தளங்களில் பிரபலமான இயக்கம். இதன் பிரதான நோக்கம் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது. இதன் மூலம் அக்குற்றங்களை செய்த ஆண்களை சமூகத்தின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவது. சரி, இதில் அபிலாஷிற்கு என்ன வேலை என்றால், மீ டு இயக்கம் எதற்காகத் தொடங்கப்பட்டது? என்னென்ன சிக்கல்களைப் பேசியது? எதைத் தவறவிட்டது? அவ்வியக்கத்தின் சந்தர்ப்பவாதங்கள், போலிகள், ஆணாதிக்கம், பெண்ணியம் என நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தர்க்கத்தோடு விளக்கியுள்ளார்.
பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகிறார்கள். உண்மைதான், ஆனால் பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? ஆண்களின் குற்றச்சாட்டுகளை ஏன் அவ்வியக்கம் ஏற்பதில்லை? போலவே குற்றம் சாட்டப்பட்டதற்காகவே அவர் குற்றவாளி இல்லை. அவரின் தரப்பு விளக்கங்களை ஏன் மீ டு இயக்கம் செவிமடுக்கவில்லை? மேலும் ஒரு பாலின ஈர்ப்பாளர்களை அது ஏன் கணக்கில் கொள்ளவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான பின்புலத்தை விளக்கிய விதத்தில் ஆர்.அபிலாஷ் இந்நூலை சுவாரஸ்யமாக்குகிறார்.
ஆரம்பத்தில் நூலை ஆர்வமின்றியே வாசிக்க தொடங்கினேன். ஆனால் இந்த மீ டு இயக்க பெண்கள் ஒரு ஆண் தன் விருப்பத்தை தெரிவிப்பதை எப்படி எல்லாம் தவறாகக் கொள்கிறார்கள் என்று விளக்கிய முறையில் நூலின் மீது பிடிப்பை கொண்டு வருகிறார். அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் தன் சக பெண் ஊழியரிடம் ஒரு ஆண் ‘உங்கள் ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு’ என்று சொன்னதற்கே அந்த நபரை பிடிக்காத பெண் அவருக்கு எதிராக #me too வில் பதிவிடுவதாக கவலை தெரிவித்துள்ளார். இதை போலி பெண்ணியக்கவாதிகள் பார்த்தியா! ஆண்கள் எல்லாருமே ரேப்பிஸ்டுகள்தான் என்று அதற்கு கொதித்தெழுவதாக கோபப்படுகிறார். இதே பெண்ணிக்கவாதிகள் பெண்ணால் பெண்ணுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்பதற்கு உதாரணங்களையும் பட்டியலிடுகிறார். கேள்விகளுக்கு உட்படுத்தாத எந்த அமைப்பும் சரியான பாதையில் செல்வதில்லை என்பதற்கு மீ டு இயக்கமும் இருப்பதை தரவுகளோடு விளக்கி இருக்கிறார்.
குறிப்பாக ஆணாதிக்கம் என்பது ஆண் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. எங்கெல்லாம் அடக்குமுறைகள், பழிவாங்கல்கள், அடிபணிய வைத்தல் நிகழ்கின்றதோ அங்கிருக்கிறது என்கிறார். கட்டுரையில் மீ டு இயக்கத்தின் போலித்தன்மையை வரலாற்றோடு இணைத்த விதம் அருமை. பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படுவதை பெரிதாய் பேசும் சமூகம் ஆண் குழந்தைகள், ஆண்கள் பெண்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதை பேசுவதில்லை; அப்படி நிகழ்ந்தால் அதை ‘அனுபவித்துவிட்டு போ’ என்று கடக்கிறது. உண்மை அதுவல்ல. அப்படி அந்த பெண்களிடம் அகப்படும் ஆண்கள் அப்பெண்களின் உத்தரவிற்கு கட்டுப்படாத போது கூர்மையான கருவிகளால் தாக்கப்படுதல்; விலங்குகளோடு உறவு கொள்ள மிரட்டப்படுதல்; மீறினால் ஆண் தன்னை பலாத்காரம் செய்ய வந்தான் என பகிரங்கப்படுத்துதல் என்பனவற்றை தரவுகளோடு கூறியதற்கு போலி பெண்ணியவாதிகளிடம் பதில் இருக்குமா எனத் தெரியவில்லை. உண்மையில் கட்டாயத்தின் பேரில் தான் படித்தேன். ஒரு சிறந்த எழுத்தாளராக என்னை ஈர்த்துக் கொண்டார் அபிலாஷ். வாசியுங்கள் அபிலாஷ் உங்களையும் தன் எழுத்துகளின் வழி ஈர்ப்பார். நன்றி சார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க: புத்தகத்தை இணையத்தில் வாங்க: https://uyirmmaibooks.com/product/metoo-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...