முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீ டூ: சில விமர்சனங்கள் - நூல் மதிப்புரை - மா. அண்ணாமலை


 

நூல் : #me too சில விமர்சனங்கள்

ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 96
வகை : கட்டுரை
#me too என்பது சமூக வலைத்தளங்களில் பிரபலமான இயக்கம். இதன் பிரதான நோக்கம் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது. இதன் மூலம் அக்குற்றங்களை செய்த ஆண்களை சமூகத்தின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவது. சரி, இதில் அபிலாஷிற்கு என்ன வேலை என்றால், மீ டு இயக்கம் எதற்காகத் தொடங்கப்பட்டது? என்னென்ன சிக்கல்களைப் பேசியது? எதைத் தவறவிட்டது? அவ்வியக்கத்தின் சந்தர்ப்பவாதங்கள், போலிகள், ஆணாதிக்கம், பெண்ணியம் என நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தர்க்கத்தோடு விளக்கியுள்ளார்.
பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகிறார்கள். உண்மைதான், ஆனால் பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? ஆண்களின் குற்றச்சாட்டுகளை ஏன் அவ்வியக்கம் ஏற்பதில்லை? போலவே குற்றம் சாட்டப்பட்டதற்காகவே அவர் குற்றவாளி இல்லை. அவரின் தரப்பு விளக்கங்களை ஏன் மீ டு இயக்கம் செவிமடுக்கவில்லை? மேலும் ஒரு பாலின ஈர்ப்பாளர்களை அது ஏன் கணக்கில் கொள்ளவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான பின்புலத்தை விளக்கிய விதத்தில் ஆர்.அபிலாஷ் இந்நூலை சுவாரஸ்யமாக்குகிறார்.
ஆரம்பத்தில் நூலை ஆர்வமின்றியே வாசிக்க தொடங்கினேன். ஆனால் இந்த மீ டு இயக்க பெண்கள் ஒரு ஆண் தன் விருப்பத்தை தெரிவிப்பதை எப்படி எல்லாம் தவறாகக் கொள்கிறார்கள் என்று விளக்கிய முறையில் நூலின் மீது பிடிப்பை கொண்டு வருகிறார். அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் தன் சக பெண் ஊழியரிடம் ஒரு ஆண் ‘உங்கள் ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு’ என்று சொன்னதற்கே அந்த நபரை பிடிக்காத பெண் அவருக்கு எதிராக #me too வில் பதிவிடுவதாக கவலை தெரிவித்துள்ளார். இதை போலி பெண்ணியக்கவாதிகள் பார்த்தியா! ஆண்கள் எல்லாருமே ரேப்பிஸ்டுகள்தான் என்று அதற்கு கொதித்தெழுவதாக கோபப்படுகிறார். இதே பெண்ணிக்கவாதிகள் பெண்ணால் பெண்ணுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்பதற்கு உதாரணங்களையும் பட்டியலிடுகிறார். கேள்விகளுக்கு உட்படுத்தாத எந்த அமைப்பும் சரியான பாதையில் செல்வதில்லை என்பதற்கு மீ டு இயக்கமும் இருப்பதை தரவுகளோடு விளக்கி இருக்கிறார்.
குறிப்பாக ஆணாதிக்கம் என்பது ஆண் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. எங்கெல்லாம் அடக்குமுறைகள், பழிவாங்கல்கள், அடிபணிய வைத்தல் நிகழ்கின்றதோ அங்கிருக்கிறது என்கிறார். கட்டுரையில் மீ டு இயக்கத்தின் போலித்தன்மையை வரலாற்றோடு இணைத்த விதம் அருமை. பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படுவதை பெரிதாய் பேசும் சமூகம் ஆண் குழந்தைகள், ஆண்கள் பெண்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதை பேசுவதில்லை; அப்படி நிகழ்ந்தால் அதை ‘அனுபவித்துவிட்டு போ’ என்று கடக்கிறது. உண்மை அதுவல்ல. அப்படி அந்த பெண்களிடம் அகப்படும் ஆண்கள் அப்பெண்களின் உத்தரவிற்கு கட்டுப்படாத போது கூர்மையான கருவிகளால் தாக்கப்படுதல்; விலங்குகளோடு உறவு கொள்ள மிரட்டப்படுதல்; மீறினால் ஆண் தன்னை பலாத்காரம் செய்ய வந்தான் என பகிரங்கப்படுத்துதல் என்பனவற்றை தரவுகளோடு கூறியதற்கு போலி பெண்ணியவாதிகளிடம் பதில் இருக்குமா எனத் தெரியவில்லை. உண்மையில் கட்டாயத்தின் பேரில் தான் படித்தேன். ஒரு சிறந்த எழுத்தாளராக என்னை ஈர்த்துக் கொண்டார் அபிலாஷ். வாசியுங்கள் அபிலாஷ் உங்களையும் தன் எழுத்துகளின் வழி ஈர்ப்பார். நன்றி சார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க: புத்தகத்தை இணையத்தில் வாங்க: https://uyirmmaibooks.com/product/metoo-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...