Skip to main content

செட்டில்மெண்டுக்குப் பிறகு ஆண்களின், பெண்களின் நிலை: ஒரு ஆய்வு

 


2025இல் வெளிவந்த ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது: 42% ஆண்கள் விவாகரத்தின்போது ஒன் டைம் செட்டில்மெண்டைப் பண்ணுவதற்காக வங்கியின் தனிப்பட்ட கடனை வாங்கியிருக்கிறார்கள் (எகனானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இதைக் குறித்த கட்டுரை வந்துள்ளது). இப்படி கடன் வாங்குகிறார்களா? இது முடியுமா?

எனக்குத் தெரிந்தே சிலர் வாங்கி செட்டில் பண்ணியிருக்கிறார்கள். அதாவது சம்பள ஆவணங்களைக் கொடுத்தோ சொத்தை அடமானம் வைத்தோ வாங்குவார்கள். சிலர் சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். ஆனால் அவமானம் கருதி வெளியே சொல்ல மாட்டார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? விவாகரத்துக்காக அலைவது, அது தரும் கடும் மனவதையை அனுபவிப்பது, மாதாமாதம் வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் கொடுக்க நேரிடும் என்பதை நினைத்து அஞ்சுவது, குழந்தையைப் பணம் கொடுத்துப் பெறுவதற்கு எனப் பல காரணங்கள். முக்கியமாக, இதையொட்டி வேலையில் வரும் நெருக்கடிகள். ஒரு ஆண் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் போவது கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்கு சமம்தான். தப்பிக்க வேண்டுமெனில் ஜட்டி வரை கழற்றிக் கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெண்ணுக்கு இத்தகைய இழப்புகள் விவாகரத்தின்போது வராது. சட்டங்களை அவ்வாறே அமைத்திருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட கடனை வாங்குவது எவ்வளவு பெரிய சுமையென்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் வீடு வாங்கக் கடன் பெற்றால் வீடாவது எஞ்சுகிறதே என ஆறுதல் கிடைக்கும். ஆனால் இதற்காக வாங்கி கடனைச் செலுத்தப் போராடும்போது ஒவ்வொரு நாளும் கடும் மன அழுத்தம்தான் எஞ்சும்.

சரி இந்த ஆய்வு வேறென்னவெல்லாம் முடிவுகளைத் தருகின்றன?
65% குடும்பங்களில் ஏற்கனவே பணப்பிரச்சினை இருந்திருக்கிறது. மாதம் ஒருமுறையாவது பணத்தை வைத்துச் சண்டை வந்துள்ளது என 90% பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் எடுத்த கணக்குப்படி 50 லட்சத்துக்கு மேல் சொத்துள்ள கணவருக்கு விவாகரத்தாகும் வாய்ப்பு 7% குறைகிறது.

நீதிமன்றச் செலவைப் பொறுத்தமட்டில் 16% பெண்கள் மட்டுமே 5 லட்சத்துக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் 49% ஆண்கள் 5 லட்சத்துக்கு மேல் செலவழித்துள்ளார்கள். இது ஏனென்றால் பெண்களுக்கான கட்டணத்தை வக்கீல்கள் ஒன் டைம் செட்டில்மெண்டில் 10-30% எடுத்துக் கொள்கிறார்கள். இதனாலே இவ்வக்கீல்கள் செட்டில்மெண்டை நோக்கி வழக்கை நகர்த்துவதில் குறியாக இருப்பார்கள். பேரத்தின்போது ஆணை மிரட்டிப் பணிய வைப்பார்கள். ஆகையால் பெண்கள் நேரடியாகப் பணத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. பெண் தரப்பு வக்கீலின் கட்டணத்தையும் கணவரே மறைமுகமாகக் கொடுக்கிறார் (இதுவும் போதாதென்று சில பேராசைக்காரப் பெண்கள் மொத்த நீதிமன்றச் செலவையும் கணவர் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது வக்கீலுக்கு செட்டில்மெண்ட் கட்டிங் + நேரடிக் கட்டணம்).

29% மேல் ஆண்கள் தம் சொத்து மதிப்பை விட அதிகமானத் தொகையை செட்டில்மெண்டாகக் கொடுத்திருக்கிறார்கள். (இதற்கு நேரடி ஆதாரங்கள் உண்டென்றாலும் இங்கே பகிர முடியாது.)

26% பெண்கள் ஆண்களின் 100% சொத்தை செட்டில்மெண்டாகப் பெற்றிருக்கிறார்கள் (இத்தகைய வழக்குகளைப் பற்றி பாதிக்கப்பட்ட சிலர் என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள்). எனக்குத் தெரிந்து பவேரியா கொள்ளைக்காரர்கள் கூட இதைவிட இரக்கத்துடன் நடந்துகொள்வார்கள்.

வருமானத்தில் 38%ஐ ஆண்கள் சராசரியாக ஜீவனாம்சத்துக்காக கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது ஒருவருடைய மாத வருமானம் 40,000 என்றால் 15, 200ஐ அவர் மாதாமாதம் கொடுக்கிறார். இந்த வருமானத்தை வைத்தே அவர் தன் வாடகையைச் செலுத்தி தன் மாதச் செலவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் ரூ 10,000 வாடகைக்கு வீட்டில் இருந்தால் மீதச் செலவுக்கு 15,000 கூட இருக்காது. அதாவது ஒரு நாளைக்கு அவர் தன் சோற்றுக்கு 300 ரூ செலவிடலாம். ஆனால் அவர் தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால்? பெட்ரோல், மின்சாரம், மொபைல், பல்வேறு கட்டணங்கள்? திடீர் மருத்துச் செலவு ஏற்பட்டால்? வேலை இழந்துவிட்டால்? குழந்தையின் பரிபாலனத்துக்கும் 8000 கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொன்னால் அவர் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட வேண்டுமா? இது ஒரு நவீனக் கொத்தடிமை முறை. ஜீவனாம்சத்தைச் சரிவர செலுத்தாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்புவார்கள். இன்றைய தேதியில் 300 ரூ வைத்துக் கொண்டு வாழ்வதற்கு ஜெயிலே நிம்மதி.

பெண்களின் தரப்புத் தரவுகளைப் பாருங்கள்:
விவாகரத்துக்குப் பின் பெண்கள் தம் வேலைப்பளு 16% குறைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். 30% வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். இது எப்படி?

சான்று:
'Nearly 42% men took loan to pay alimony': New survey reveals how divorce hits women and men in India
செப்டம்பர் 29, 2025

https://economictimes.indiatimes.com/news/new-updates/nearly-42-men-took-loan-to-pay-alimony-new-survey-reveals-how-divorce-hits-women-and-men-in-india/articleshow/124209186.cms?from=mdr

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...