Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

செட்டில்மெண்டுக்குப் பிறகு ஆண்களின், பெண்களின் நிலை: ஒரு ஆய்வு

 


2025இல் வெளிவந்த ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது: 42% ஆண்கள் விவாகரத்தின்போது ஒன் டைம் செட்டில்மெண்டைப் பண்ணுவதற்காக வங்கியின் தனிப்பட்ட கடனை வாங்கியிருக்கிறார்கள் (எகனானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இதைக் குறித்த கட்டுரை வந்துள்ளது). இப்படி கடன் வாங்குகிறார்களா? இது முடியுமா?

எனக்குத் தெரிந்தே சிலர் வாங்கி செட்டில் பண்ணியிருக்கிறார்கள். அதாவது சம்பள ஆவணங்களைக் கொடுத்தோ சொத்தை அடமானம் வைத்தோ வாங்குவார்கள். சிலர் சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். ஆனால் அவமானம் கருதி வெளியே சொல்ல மாட்டார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? விவாகரத்துக்காக அலைவது, அது தரும் கடும் மனவதையை அனுபவிப்பது, மாதாமாதம் வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் கொடுக்க நேரிடும் என்பதை நினைத்து அஞ்சுவது, குழந்தையைப் பணம் கொடுத்துப் பெறுவதற்கு எனப் பல காரணங்கள். முக்கியமாக, இதையொட்டி வேலையில் வரும் நெருக்கடிகள். ஒரு ஆண் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் போவது கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்கு சமம்தான். தப்பிக்க வேண்டுமெனில் ஜட்டி வரை கழற்றிக் கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெண்ணுக்கு இத்தகைய இழப்புகள் விவாகரத்தின்போது வராது. சட்டங்களை அவ்வாறே அமைத்திருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட கடனை வாங்குவது எவ்வளவு பெரிய சுமையென்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் வீடு வாங்கக் கடன் பெற்றால் வீடாவது எஞ்சுகிறதே என ஆறுதல் கிடைக்கும். ஆனால் இதற்காக வாங்கி கடனைச் செலுத்தப் போராடும்போது ஒவ்வொரு நாளும் கடும் மன அழுத்தம்தான் எஞ்சும்.

சரி இந்த ஆய்வு வேறென்னவெல்லாம் முடிவுகளைத் தருகின்றன?
65% குடும்பங்களில் ஏற்கனவே பணப்பிரச்சினை இருந்திருக்கிறது. மாதம் ஒருமுறையாவது பணத்தை வைத்துச் சண்டை வந்துள்ளது என 90% பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் எடுத்த கணக்குப்படி 50 லட்சத்துக்கு மேல் சொத்துள்ள கணவருக்கு விவாகரத்தாகும் வாய்ப்பு 7% குறைகிறது.

நீதிமன்றச் செலவைப் பொறுத்தமட்டில் 16% பெண்கள் மட்டுமே 5 லட்சத்துக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் 49% ஆண்கள் 5 லட்சத்துக்கு மேல் செலவழித்துள்ளார்கள். இது ஏனென்றால் பெண்களுக்கான கட்டணத்தை வக்கீல்கள் ஒன் டைம் செட்டில்மெண்டில் 10-30% எடுத்துக் கொள்கிறார்கள். இதனாலே இவ்வக்கீல்கள் செட்டில்மெண்டை நோக்கி வழக்கை நகர்த்துவதில் குறியாக இருப்பார்கள். பேரத்தின்போது ஆணை மிரட்டிப் பணிய வைப்பார்கள். ஆகையால் பெண்கள் நேரடியாகப் பணத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. பெண் தரப்பு வக்கீலின் கட்டணத்தையும் கணவரே மறைமுகமாகக் கொடுக்கிறார் (இதுவும் போதாதென்று சில பேராசைக்காரப் பெண்கள் மொத்த நீதிமன்றச் செலவையும் கணவர் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது வக்கீலுக்கு செட்டில்மெண்ட் கட்டிங் + நேரடிக் கட்டணம்).

29% மேல் ஆண்கள் தம் சொத்து மதிப்பை விட அதிகமானத் தொகையை செட்டில்மெண்டாகக் கொடுத்திருக்கிறார்கள். (இதற்கு நேரடி ஆதாரங்கள் உண்டென்றாலும் இங்கே பகிர முடியாது.)

26% பெண்கள் ஆண்களின் 100% சொத்தை செட்டில்மெண்டாகப் பெற்றிருக்கிறார்கள் (இத்தகைய வழக்குகளைப் பற்றி பாதிக்கப்பட்ட சிலர் என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள்). எனக்குத் தெரிந்து பவேரியா கொள்ளைக்காரர்கள் கூட இதைவிட இரக்கத்துடன் நடந்துகொள்வார்கள்.

வருமானத்தில் 38%ஐ ஆண்கள் சராசரியாக ஜீவனாம்சத்துக்காக கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது ஒருவருடைய மாத வருமானம் 40,000 என்றால் 15, 200ஐ அவர் மாதாமாதம் கொடுக்கிறார். இந்த வருமானத்தை வைத்தே அவர் தன் வாடகையைச் செலுத்தி தன் மாதச் செலவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் ரூ 10,000 வாடகைக்கு வீட்டில் இருந்தால் மீதச் செலவுக்கு 15,000 கூட இருக்காது. அதாவது ஒரு நாளைக்கு அவர் தன் சோற்றுக்கு 300 ரூ செலவிடலாம். ஆனால் அவர் தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால்? பெட்ரோல், மின்சாரம், மொபைல், பல்வேறு கட்டணங்கள்? திடீர் மருத்துச் செலவு ஏற்பட்டால்? வேலை இழந்துவிட்டால்? குழந்தையின் பரிபாலனத்துக்கும் 8000 கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொன்னால் அவர் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட வேண்டுமா? இது ஒரு நவீனக் கொத்தடிமை முறை. ஜீவனாம்சத்தைச் சரிவர செலுத்தாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்புவார்கள். இன்றைய தேதியில் 300 ரூ வைத்துக் கொண்டு வாழ்வதற்கு ஜெயிலே நிம்மதி.

பெண்களின் தரப்புத் தரவுகளைப் பாருங்கள்:
விவாகரத்துக்குப் பின் பெண்கள் தம் வேலைப்பளு 16% குறைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். 30% வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். இது எப்படி?

சான்று:
'Nearly 42% men took loan to pay alimony': New survey reveals how divorce hits women and men in India
செப்டம்பர் 29, 2025

https://economictimes.indiatimes.com/news/new-updates/nearly-42-men-took-loan-to-pay-alimony-new-survey-reveals-how-divorce-hits-women-and-men-in-india/articleshow/124209186.cms?from=mdr

Comments

Popular posts from this blog

ரஜினியின் தனித்துவமான நடிப்பு

“பாஷா” ரஜினியும், “எஜமான்” ரஜினியும் ஒரே ரஜினி தான் - அவர்கள் இடையே நிறைய நுட்பமான வேறுபாடுகள் இருக்கும், ஆனால் பார்வையாளர்களில் எல்லாரையும் திருப்திப்படுத்தும் மாறுபட்ட குணநலன்களும் இருக்கும். இந்த முரண் இயல்புகள் உறுத்தாமல் இருக்க, ரஜினி அப்பாத்திரத்துக்கு என நடையின் வேகத்தில், பார்வையில், சைகைகளின் வீச்சு மற்றும் வேகத்தில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டு வருவார். அதற்கு மேல் முயன்று ஒரு பாத்திரமாகவே ஆக முயல மாட்டார்; ரஜினி தன் ‘நடிப்பை’ நடிப்பாக அல்ல ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வினையாற்றுகிற ஒன்றாகப் பார்க்கிறார். இதற்கும் மேலாக அவரது ஸ்டைல், சின்னச் சின்ன சேட்டைகள், நட்சத்திர பிம்பம் கட்டியமைக்கப்படுவதால் அவரது சன்னமான நடிப்பு வெளிப்பாடுகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். கிண்டிலில் "ரஜினிகாந்த்" நூலை வாங்க https://www.amazon.in/dp/B0GDGQ2YQH?fbclid=IwY2xjawPn21dleHRuA2FlbQIxMQBicmlkETFnNkdnMTE1bmVDaHJUbUtTc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHsjGj6zfIg4207UJ3iEOj9DtejPeqRNUjptrKoyquP9RJ18C0qnMkqOeNzss_aem_zjwowo0tzM_mYQ8Jh7zI5g

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன . இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது . நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு , வம்பு , கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம் . அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் . ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர் , பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர் , அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள் , அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை . இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா ? இருந்தார்கள் , இருக்கிறார்கள் , இருப்பார்கள் . இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது , கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள் . குற்றங்கள் கூட அல்ல . ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள் , சினிமா தயாரிப்பாளர்கள் , மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் . பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்...

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...