இந்த புத்தகத்தை நான் சென்ற பொங்கல் அன்று வாங்கினேன் .
15 நாளில் இந்த 400 பக்க சிறு நாவலை நான் படித்து முடித்து இருந்தாலும்,இதை நான் படிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவே கருதுகிறேன் !
ஏனென்றால்,
நான் ஒரு வருடத்திற்கு முன்னால் இதில் உள்ள இரண்டு மூன்று அத்தியாயங்களை படித்திருக்கிறேன்,
அதன் பிறகு என் கையில் இந்த புத்தகம் இல்லாமல் போனது.
இதை வாங்குவதற்காக சில முயற்சிகளை எடுத்தேன், பிறகு விட்டு விட்டேன்.
பல வேலைகளினால் மறந்து போனேன். இந்த #சென்னை புத்தகக் காட்சி அதற்கு வழி வகுத்தது .
மீண்டும் வாங்கினேன் முதலில் இருந்து படிக்க தொடங்கினேன் படித்தேன்,
முடித்தேன்!
அதற்கு முக்கிய காரணம் என்னுடைய தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யாதது தான் அது நான் படிப்பதற்கான அதிக நேரத்தை தந்தது
ரீசார்ஜ் செய்யாத
என் தொலைபேசிக்கு நன்றிகள்!
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆர். அபிலாஷ்!
இந்த புத்தகத்தை படித்துவிட்ட எனக்கு ஒரே சந்தேகம் தான் !
அவர் எதை வெளிப்படையாக கூற தயங்குவார் என சிந்திக்க தோன்றுகின்றது !
கதை என்பது :
1970, 80-ல் இருந்த ஒருவன் சீரிய சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்த ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு எழுத்தாளராக ,
ஒரு மார்க்ஸ் சிந்தனையாளராக இருந்த ஒருவன், காலங்கள் மாறி அந்த சொல்லாடல்கள் எல்லாம் கரைந்து போய், அவனுடைய முயற்சிகள் எதுவுமே எடுபடாமல் போய் இறுதியாக, காலத்தின் வசத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதன் மூலம் சித்திரவதை அனுபவித்து இறந்தவனின் கதையே இது !
இந்த கதை கேரளத்தை சுற்றி அதிகம் நகர்கின்றது!
நாகர்கோவிலை கொஞ்சம் சுற்றிக்கொண்டு பயணிக்கும் கதையாக உள்ளது!
இப்படியாக இந்த கதை முழுக்க அனேக கதாபாத்திரங்கள் நம்மோடு ஒன்றுகின்றன! புதுப்புது இடங்களில் நம்மையும் கூட அழைத்துக் கொண்டு போகிறது. இந்த கதையின் முடிவு , நாம் எதிர்பார்க்காக தொடக்கம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ அதற்கு நேர் எதிர் மாறாக முடிவு அமைகிறது!
அதுவே என்னை பெரும்துயரில் ஆழ்த்தியது!
இந்த பதிவை பார்க்கும் நீங்கள் யாரேனும் இதை வாசிக்க எத்தனித்தால், உயிர்மை பதிப்பகம் வழி வாங்கிக்கொள்ள கேட்கிறேன் !
அது மட்டுமின்றி இப்போது எல்லா மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடைபெறுகின்றது , பயன்பெறுங்கள்!
Comments