Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"ரசிகன்" - விமர்சனம்: சுஜீஸ் குழந்தைசாமி


 

இந்த புத்தகத்தை நான் சென்ற பொங்கல் அன்று வாங்கினேன் .

15 நாளில் இந்த 400 பக்க சிறு நாவலை நான் படித்து முடித்து இருந்தாலும்,
இதை நான் படிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவே கருதுகிறேன் !
ஏனென்றால்,
நான் ஒரு வருடத்திற்கு முன்னால் இதில் உள்ள இரண்டு மூன்று அத்தியாயங்களை படித்திருக்கிறேன்,
அதன் பிறகு என் கையில் இந்த புத்தகம் இல்லாமல் போனது.

இதை வாங்குவதற்காக சில முயற்சிகளை எடுத்தேன், பிறகு விட்டு விட்டேன்.
பல வேலைகளினால் மறந்து போனேன். இந்த #சென்னை புத்தகக் காட்சி அதற்கு வழி வகுத்தது .
மீண்டும் வாங்கினேன் முதலில் இருந்து படிக்க தொடங்கினேன் படித்தேன்,
முடித்தேன்!

அதற்கு முக்கிய காரணம் என்னுடைய தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யாதது தான் அது நான் படிப்பதற்கான அதிக நேரத்தை தந்தது
ரீசார்ஜ் செய்யாத
என் தொலைபேசிக்கு நன்றிகள்!

இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆர். அபிலாஷ்!
இந்த புத்தகத்தை படித்துவிட்ட எனக்கு ஒரே சந்தேகம் தான் !
அவர் எதை வெளிப்படையாக கூற தயங்குவார் என சிந்திக்க தோன்றுகின்றது !

கதை என்பது :

1970, 80-ல் இருந்த ஒருவன் சீரிய சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்த ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு எழுத்தாளராக ,
ஒரு மார்க்ஸ் சிந்தனையாளராக இருந்த ஒருவன், காலங்கள் மாறி அந்த சொல்லாடல்கள் எல்லாம் கரைந்து போய், அவனுடைய முயற்சிகள் எதுவுமே எடுபடாமல் போய் இறுதியாக, காலத்தின் வசத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதன் மூலம் சித்திரவதை அனுபவித்து இறந்தவனின் கதையே இது !
இந்த கதை கேரளத்தை சுற்றி அதிகம் நகர்கின்றது!
நாகர்கோவிலை கொஞ்சம் சுற்றிக்கொண்டு பயணிக்கும் கதையாக உள்ளது!
இப்படியாக இந்த கதை முழுக்க அனேக கதாபாத்திரங்கள் நம்மோடு ஒன்றுகின்றன! புதுப்புது இடங்களில் நம்மையும் கூட அழைத்துக் கொண்டு போகிறது. இந்த கதையின் முடிவு , நாம் எதிர்பார்க்காக தொடக்கம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ அதற்கு நேர் எதிர் மாறாக முடிவு அமைகிறது!
அதுவே என்னை பெரும்துயரில் ஆழ்த்தியது!

இந்த பதிவை பார்க்கும் நீங்கள் யாரேனும் இதை வாசிக்க எத்தனித்தால், உயிர்மை பதிப்பகம் வழி வாங்கிக்கொள்ள கேட்கிறேன் !
அது மட்டுமின்றி இப்போது எல்லா மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடைபெறுகின்றது , பயன்பெறுங்கள்!


நூலை இணையத்தில் வாங்க https://uyirmmaibooks.com/product/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/

Comments

Popular posts from this blog

ரஜினியின் தனித்துவமான நடிப்பு

“பாஷா” ரஜினியும், “எஜமான்” ரஜினியும் ஒரே ரஜினி தான் - அவர்கள் இடையே நிறைய நுட்பமான வேறுபாடுகள் இருக்கும், ஆனால் பார்வையாளர்களில் எல்லாரையும் திருப்திப்படுத்தும் மாறுபட்ட குணநலன்களும் இருக்கும். இந்த முரண் இயல்புகள் உறுத்தாமல் இருக்க, ரஜினி அப்பாத்திரத்துக்கு என நடையின் வேகத்தில், பார்வையில், சைகைகளின் வீச்சு மற்றும் வேகத்தில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டு வருவார். அதற்கு மேல் முயன்று ஒரு பாத்திரமாகவே ஆக முயல மாட்டார்; ரஜினி தன் ‘நடிப்பை’ நடிப்பாக அல்ல ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வினையாற்றுகிற ஒன்றாகப் பார்க்கிறார். இதற்கும் மேலாக அவரது ஸ்டைல், சின்னச் சின்ன சேட்டைகள், நட்சத்திர பிம்பம் கட்டியமைக்கப்படுவதால் அவரது சன்னமான நடிப்பு வெளிப்பாடுகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். கிண்டிலில் "ரஜினிகாந்த்" நூலை வாங்க https://www.amazon.in/dp/B0GDGQ2YQH?fbclid=IwY2xjawPn21dleHRuA2FlbQIxMQBicmlkETFnNkdnMTE1bmVDaHJUbUtTc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHsjGj6zfIg4207UJ3iEOj9DtejPeqRNUjptrKoyquP9RJ18C0qnMkqOeNzss_aem_zjwowo0tzM_mYQ8Jh7zI5g

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன . இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது . நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு , வம்பு , கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம் . அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் . ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர் , பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர் , அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள் , அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை . இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா ? இருந்தார்கள் , இருக்கிறார்கள் , இருப்பார்கள் . இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது , கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள் . குற்றங்கள் கூட அல்ல . ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள் , சினிமா தயாரிப்பாளர்கள் , மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் . பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்...

நிம்மதியும் வாசிப்பும்

வாசிப்பு நிதானமாக, கவனமாக, ஒன்றினுள் துணிந்து ஆழ்ந்து போக அனுமதிக்கிறது, பழக்குகிறது. வாசிக்கும்போது உலகம் முழுக்க நாம் கொள்ளும் மனநிலை, அணுகுமுறை முழுக்க தனித்துவமானது. கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. வாசிப்புக்கு எதிராக உள்ள மனநிலை பரபரவென்று எதாவது ஒரு கவலையில், பயத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், தவிப்பில் இருப்பது. புலனனுபவத்தை நாடி அதில் மனதைத் தொய்க்க வைப்பது. அதிலும் மனம் இல்லாதபோது அதை உணராதிருப்பது. எதையும் வெளியே நின்று பார்த்தபடி இருப்பது. வாசிப்பு இயற்கையானது அல்ல. ஆனால் ஒருவிதத்தில் அது இயற்கையானதுதாம்தான். வாசிக்கும் ஒருவர் நமக்கு ஆதி இயல்பாக உள்ள ஒரு அகநிலையை மீட்டெடுக்கிறார். அது நமக்குள் வெகு ஆழத்தில் இருக்குள் எங்கோ ஒளி நடுக்கத்தைப் போல இருக்கிறது. நீரில் மிதக்கும் பிரதிபலிப்பைப் போல கிடக்கிறது. அதைத் தொட்டெடுத்ததும் அது நம்மை உள்ளிருந்து ஒளிர வைக்கிறது. மெல்ல மெல்ல 'முழுவதுமாக' நாம் இருக்க உதவுகிறது. ஆக, வாசிப்பை ஒரு 'பின்னோக்கிச் செல்லும் கல்வி' எனலாம் (ஐரோப்பிய கற்பனாவாதிகள் இயற்கையைக் குறித்து நம்பியதைப் போல). தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களில் ...