முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகன்" - விமர்சனம்: சுஜீஸ் குழந்தைசாமி


 

இந்த புத்தகத்தை நான் சென்ற பொங்கல் அன்று வாங்கினேன் .

15 நாளில் இந்த 400 பக்க சிறு நாவலை நான் படித்து முடித்து இருந்தாலும்,
இதை நான் படிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவே கருதுகிறேன் !
ஏனென்றால்,
நான் ஒரு வருடத்திற்கு முன்னால் இதில் உள்ள இரண்டு மூன்று அத்தியாயங்களை படித்திருக்கிறேன்,
அதன் பிறகு என் கையில் இந்த புத்தகம் இல்லாமல் போனது.

இதை வாங்குவதற்காக சில முயற்சிகளை எடுத்தேன், பிறகு விட்டு விட்டேன்.
பல வேலைகளினால் மறந்து போனேன். இந்த #சென்னை புத்தகக் காட்சி அதற்கு வழி வகுத்தது .
மீண்டும் வாங்கினேன் முதலில் இருந்து படிக்க தொடங்கினேன் படித்தேன்,
முடித்தேன்!

அதற்கு முக்கிய காரணம் என்னுடைய தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யாதது தான் அது நான் படிப்பதற்கான அதிக நேரத்தை தந்தது
ரீசார்ஜ் செய்யாத
என் தொலைபேசிக்கு நன்றிகள்!

இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆர். அபிலாஷ்!
இந்த புத்தகத்தை படித்துவிட்ட எனக்கு ஒரே சந்தேகம் தான் !
அவர் எதை வெளிப்படையாக கூற தயங்குவார் என சிந்திக்க தோன்றுகின்றது !

கதை என்பது :

1970, 80-ல் இருந்த ஒருவன் சீரிய சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்த ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு எழுத்தாளராக ,
ஒரு மார்க்ஸ் சிந்தனையாளராக இருந்த ஒருவன், காலங்கள் மாறி அந்த சொல்லாடல்கள் எல்லாம் கரைந்து போய், அவனுடைய முயற்சிகள் எதுவுமே எடுபடாமல் போய் இறுதியாக, காலத்தின் வசத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதன் மூலம் சித்திரவதை அனுபவித்து இறந்தவனின் கதையே இது !
இந்த கதை கேரளத்தை சுற்றி அதிகம் நகர்கின்றது!
நாகர்கோவிலை கொஞ்சம் சுற்றிக்கொண்டு பயணிக்கும் கதையாக உள்ளது!
இப்படியாக இந்த கதை முழுக்க அனேக கதாபாத்திரங்கள் நம்மோடு ஒன்றுகின்றன! புதுப்புது இடங்களில் நம்மையும் கூட அழைத்துக் கொண்டு போகிறது. இந்த கதையின் முடிவு , நாம் எதிர்பார்க்காக தொடக்கம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ அதற்கு நேர் எதிர் மாறாக முடிவு அமைகிறது!
அதுவே என்னை பெரும்துயரில் ஆழ்த்தியது!

இந்த பதிவை பார்க்கும் நீங்கள் யாரேனும் இதை வாசிக்க எத்தனித்தால், உயிர்மை பதிப்பகம் வழி வாங்கிக்கொள்ள கேட்கிறேன் !
அது மட்டுமின்றி இப்போது எல்லா மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடைபெறுகின்றது , பயன்பெறுங்கள்!


நூலை இணையத்தில் வாங்க https://uyirmmaibooks.com/product/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...