Skip to main content

பாக்தாத் திருடர்கள்

 


திருமணத்தை மீறிய உறவைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கலாம் எனும் நிபந்தனை பெண்களுக்கு மட்டுமே உண்மையில் சாதகமானது, ஆண்களுக்கு அல்ல - பிறழ்வைக் காரணம் காட்டி கணவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்தாலும் அப்பெண் புதிய திருமணத்திற்குள் போகும்வரைக்கும் ஜீவனாம்சம் வாங்க முடியும். ஒன் டைம் செட்டில்மெண்ட் வாங்க முடியும். இதைக் கொண்டு அவனைப் பழிவாங்க முடியும். ஆனால் ஆண் அதே தவறைச் செய்தால் அவன் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து வக்கீலுக்கும் செலவு செய்து அழிய வேண்டும். கூடுதலாகத் தன் குழந்தையை அவன் அவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அவள் தன் காதலனை மணந்து கொண்டு தன் பிள்ளை அவனை அப்பா என்று அழைப்பதை அவன் வேடிக்கைப் பார்க்க வேண்டும். அவனால் அவளைப் பழிவாங்க முடியாது. எல்லாவற்றையும் இழக்க மட்டுமே முடியும். ஆகையால் முடிந்தவரைக்கும் அவன் மனைவியிடம் கெஞ்சித்தான் பார்க்கிறான். அவர்கள் உடன்படாதபோதே விவாகரத்துக்கு முன்வருகிறான். அப்போதும் அவனுக்கு இந்த நீதிமன்ற அமைப்பு தன் அண்டிராயரை உருவப் போகிற விசயம் தெரிந்திருக்காது; ஆனால் அவனது மனைவி படித்தவராகவும் தந்திரமானவராகவும் இருந்தால் இதையெல்லாம் ஏற்கனவே விசாரித்து வைத்திருப்பார். அவர் சகல தயாரிப்புகளுடனும் உற்சாகமாக களமிறங்குவார். அது மட்டுமல்ல விவாகரத்து வாங்கி 'செட்டில்' ஆனது கூந்தலைக் கத்தரிப்பது, ஆடையணியும் பாணியை மாற்றுவது ஆகியவற்றைச் செய்து சடங்கார்த்தமாக சில விசயங்களைச் செய்து தான் ஒரு புதுப்பெண்ணாகப் பிறந்துவிட்டதாக கற்பனையும் பண்ணிக் கொள்வார். ஆனால் ஆணோ சோர்ந்து போய் இருட்டறையில் முகட்டைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். கடன், தனிமை, தோல்வி, அவமானம்... இதையெல்லாம் நான் நூற்றுக்கணக்கான கேஸ்களைப் பார்த்தும், பல ஆயிரம் பேர்களின் கதைகளைப் படித்தும் சொல்கிறேன்.

இன்று சவுக்கு சங்கரின் இணையராக உள்ள ஒரு பெண் சில வருடங்களுக்கு முன் தன் முதல் கணவரிடம் அவரது குழந்தையைக் கொடுக்க 35 லட்சங்கள் பெற்றார். இல்லாவிட்டால் அப்பிள்ளை சதா போதை மருந்து, கட்டப்பஞ்சாயத்து, விபச்சாரம் என வாழும் சவுக்கு சங்கரின் வீட்டில் வளர வேண்டி வந்திருக்கும். இதை அந்த அப்பாவின் கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள், எவ்வளவு கொடூரமாக அவருக்கு இருந்திருக்கும். இன்று அதே பெண் சில நூறு கோடிகள் மோசடிச் சொத்துக்களின் அதிபதி (அதாவது பினாமி). சென்னையில் பல வீடுகள் வைத்திருக்கிறார் என நக்கீரன் பிரகாஷ் சொல்கிறார். சவுக்குடன் சேர்ந்து பணத்துக்காக மிரட்டலில் ஈடுபட்டதாக அவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. யோசித்துப் பாருங்கள் - இப்பெண் ஒரு சராசரி குற்றவாளி அல்லள். படித்த பெண், ஊடகத்தில் பணியாற்றிய பெண், ஆனால் பணத்துக்காக, வசதிக்காக தலைகீழாக மாறுகிறார். அவரிடம் தன் குழந்தையைக் கொடுக்காமல் காப்பாற்ற அந்த மனிதர் தன் மொத்தச் சேமிப்பையும் இழந்தார். அவரது வீட்டில் அவர் சொந்த உழைப்பில் வாங்கிய அறைகலன்கள் உள்ளிட்ட அனைத்தையும் அப்பெண் ஒருநாள் எடுத்துக் கொண்டு போய் விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அவர் லட்சக்கணக்கில் பணத்தை அழுது தன் குழந்தையுடன் வீடு வந்தால் அவர் வீட்டை காலியாக வைத்திருக்கிறார். கொஞ்சம் கூட நீதியுணர்வோ குற்றவுணர்வோ இல்லாத பெண்கள் இப்படி பலர் இருக்கிறார்கள். இது ஒரு தீவிர எதிர்நிலை வழக்குதான்; இதற்கு 50% சமானமான கொடூர ஆண் ஒடுக்குமுறை வழக்குகள்தாம் குடும்ப நல நீதிமன்றங்களில் இன்று வருவன. நம் சட்டம் எவ்வளவு பாரபட்சமானது எனப் பாருங்கள். இவர்களுக்கு எதிராக இச்சட்டத்தில் ஒன்றுமே பண்ண முடியாது. 35 லட்சம் தர முடியாவிட்டால் அக்குழந்தை இப்பெண்ணிடம்தான் வளர வேண்டும் எனச் சட்டம் சொல்லியிருக்கும். அவர் மீதான வழக்கைக் காட்டிக் கூட வாதிட முடியாது. அதாவது ஒரு பெண் கடுங்குற்றவாளியாக, மோசடிக்காரராக, பிள்ளையிடம் பாசமே இல்லாதவராக இருந்தாலும் கூட சட்டம் அவருக்கே குழந்தையை வளர்க்கும் அதிகாரத்தைக் கொடுக்கும். அவர் அதைப் பயன்படுத்தி தன் கணவரை மிரட்டி அதிகப் பணம் பெறுவார்.

இதில் விதிவிலக்கு பெரும்பணக்காரர்கள் மட்டுமே - அவர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து தம் பிள்ளைகளைத் தம் வசம் வைத்துக் கொள்கிறார்கள், வழக்கும் பெரிய அளவில் அவர்களைப் பாதிக்காது. ஆனாலும் இதிலும் விதிவிலக்கான பணக்காரர்கள் உள்ளனர். அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். ஆனால் செட்டில்மெண்ட் கொடுத்ததும் பெரும்பாலும் பிரச்சினைகள் முடிந்து போகின்றன - அதாவது ஒழுக்கம், ஒழுங்கீனம், துரோகம் எல்லாம் பணத்தின் முன் காணாமல் போகின்றன. பணத்தை வாங்கியதும் எல்லா கோபமும் மறைகிறது. இந்த மாயமந்திரத்தைப் புரிந்துகொள்வது சிரமமானது.

நம் நீதிமன்றத்துடன் துணையுடன் நவீனத் திருமணத்தை மல்டி லெவல் மார்க்கெட்டிங்காக மாற்றிவிட்டார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...