முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாக்தாத் திருடர்கள்

 


திருமணத்தை மீறிய உறவைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கலாம் எனும் நிபந்தனை பெண்களுக்கு மட்டுமே உண்மையில் சாதகமானது, ஆண்களுக்கு அல்ல - பிறழ்வைக் காரணம் காட்டி கணவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்தாலும் அப்பெண் புதிய திருமணத்திற்குள் போகும்வரைக்கும் ஜீவனாம்சம் வாங்க முடியும். ஒன் டைம் செட்டில்மெண்ட் வாங்க முடியும். இதைக் கொண்டு அவனைப் பழிவாங்க முடியும். ஆனால் ஆண் அதே தவறைச் செய்தால் அவன் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து வக்கீலுக்கும் செலவு செய்து அழிய வேண்டும். கூடுதலாகத் தன் குழந்தையை அவன் அவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அவள் தன் காதலனை மணந்து கொண்டு தன் பிள்ளை அவனை அப்பா என்று அழைப்பதை அவன் வேடிக்கைப் பார்க்க வேண்டும். அவனால் அவளைப் பழிவாங்க முடியாது. எல்லாவற்றையும் இழக்க மட்டுமே முடியும். ஆகையால் முடிந்தவரைக்கும் அவன் மனைவியிடம் கெஞ்சித்தான் பார்க்கிறான். அவர்கள் உடன்படாதபோதே விவாகரத்துக்கு முன்வருகிறான். அப்போதும் அவனுக்கு இந்த நீதிமன்ற அமைப்பு தன் அண்டிராயரை உருவப் போகிற விசயம் தெரிந்திருக்காது; ஆனால் அவனது மனைவி படித்தவராகவும் தந்திரமானவராகவும் இருந்தால் இதையெல்லாம் ஏற்கனவே விசாரித்து வைத்திருப்பார். அவர் சகல தயாரிப்புகளுடனும் உற்சாகமாக களமிறங்குவார். அது மட்டுமல்ல விவாகரத்து வாங்கி 'செட்டில்' ஆனது கூந்தலைக் கத்தரிப்பது, ஆடையணியும் பாணியை மாற்றுவது ஆகியவற்றைச் செய்து சடங்கார்த்தமாக சில விசயங்களைச் செய்து தான் ஒரு புதுப்பெண்ணாகப் பிறந்துவிட்டதாக கற்பனையும் பண்ணிக் கொள்வார். ஆனால் ஆணோ சோர்ந்து போய் இருட்டறையில் முகட்டைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். கடன், தனிமை, தோல்வி, அவமானம்... இதையெல்லாம் நான் நூற்றுக்கணக்கான கேஸ்களைப் பார்த்தும், பல ஆயிரம் பேர்களின் கதைகளைப் படித்தும் சொல்கிறேன்.

இன்று சவுக்கு சங்கரின் இணையராக உள்ள ஒரு பெண் சில வருடங்களுக்கு முன் தன் முதல் கணவரிடம் அவரது குழந்தையைக் கொடுக்க 35 லட்சங்கள் பெற்றார். இல்லாவிட்டால் அப்பிள்ளை சதா போதை மருந்து, கட்டப்பஞ்சாயத்து, விபச்சாரம் என வாழும் சவுக்கு சங்கரின் வீட்டில் வளர வேண்டி வந்திருக்கும். இதை அந்த அப்பாவின் கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள், எவ்வளவு கொடூரமாக அவருக்கு இருந்திருக்கும். இன்று அதே பெண் சில நூறு கோடிகள் மோசடிச் சொத்துக்களின் அதிபதி (அதாவது பினாமி). சென்னையில் பல வீடுகள் வைத்திருக்கிறார் என நக்கீரன் பிரகாஷ் சொல்கிறார். சவுக்குடன் சேர்ந்து பணத்துக்காக மிரட்டலில் ஈடுபட்டதாக அவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. யோசித்துப் பாருங்கள் - இப்பெண் ஒரு சராசரி குற்றவாளி அல்லள். படித்த பெண், ஊடகத்தில் பணியாற்றிய பெண், ஆனால் பணத்துக்காக, வசதிக்காக தலைகீழாக மாறுகிறார். அவரிடம் தன் குழந்தையைக் கொடுக்காமல் காப்பாற்ற அந்த மனிதர் தன் மொத்தச் சேமிப்பையும் இழந்தார். அவரது வீட்டில் அவர் சொந்த உழைப்பில் வாங்கிய அறைகலன்கள் உள்ளிட்ட அனைத்தையும் அப்பெண் ஒருநாள் எடுத்துக் கொண்டு போய் விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அவர் லட்சக்கணக்கில் பணத்தை அழுது தன் குழந்தையுடன் வீடு வந்தால் அவர் வீட்டை காலியாக வைத்திருக்கிறார். கொஞ்சம் கூட நீதியுணர்வோ குற்றவுணர்வோ இல்லாத பெண்கள் இப்படி பலர் இருக்கிறார்கள். இது ஒரு தீவிர எதிர்நிலை வழக்குதான்; இதற்கு 50% சமானமான கொடூர ஆண் ஒடுக்குமுறை வழக்குகள்தாம் குடும்ப நல நீதிமன்றங்களில் இன்று வருவன. நம் சட்டம் எவ்வளவு பாரபட்சமானது எனப் பாருங்கள். இவர்களுக்கு எதிராக இச்சட்டத்தில் ஒன்றுமே பண்ண முடியாது. 35 லட்சம் தர முடியாவிட்டால் அக்குழந்தை இப்பெண்ணிடம்தான் வளர வேண்டும் எனச் சட்டம் சொல்லியிருக்கும். அவர் மீதான வழக்கைக் காட்டிக் கூட வாதிட முடியாது. அதாவது ஒரு பெண் கடுங்குற்றவாளியாக, மோசடிக்காரராக, பிள்ளையிடம் பாசமே இல்லாதவராக இருந்தாலும் கூட சட்டம் அவருக்கே குழந்தையை வளர்க்கும் அதிகாரத்தைக் கொடுக்கும். அவர் அதைப் பயன்படுத்தி தன் கணவரை மிரட்டி அதிகப் பணம் பெறுவார்.

இதில் விதிவிலக்கு பெரும்பணக்காரர்கள் மட்டுமே - அவர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து தம் பிள்ளைகளைத் தம் வசம் வைத்துக் கொள்கிறார்கள், வழக்கும் பெரிய அளவில் அவர்களைப் பாதிக்காது. ஆனாலும் இதிலும் விதிவிலக்கான பணக்காரர்கள் உள்ளனர். அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். ஆனால் செட்டில்மெண்ட் கொடுத்ததும் பெரும்பாலும் பிரச்சினைகள் முடிந்து போகின்றன - அதாவது ஒழுக்கம், ஒழுங்கீனம், துரோகம் எல்லாம் பணத்தின் முன் காணாமல் போகின்றன. பணத்தை வாங்கியதும் எல்லா கோபமும் மறைகிறது. இந்த மாயமந்திரத்தைப் புரிந்துகொள்வது சிரமமானது.

நம் நீதிமன்றத்துடன் துணையுடன் நவீனத் திருமணத்தை மல்டி லெவல் மார்க்கெட்டிங்காக மாற்றிவிட்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...