முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் விஜய் ஆதரவாளர்களை அரசியல்படுத்த இயலாது?




//விஜய்க்கு வாக்களித்தவர்கள், இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, தமிழ் உணர்வு, சிறுபான்மை நலன், தொகுதி வரையறை எதிர்ப்பு, மாநில சுயாட்சி இவை மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பைக்கூட அறியாதவர்கள்(அப்படி ஒரு கட்சி இருப்பதும் பலருக்குத் தெரியாது) இதுதான் அரசியலற்றத் தன்மை. - வே. மதிமாறன்//

இப்பார்வை தவறென்கிறேன். பாசிஸம் ஆன்மீக தோரணை கொண்டது. சினிமா ரசிக மனநிலையும் அப்படியானதே. அது இல்லாத ஒன்றை நோக்கி கற்பனையாலும் உணர்வுகளாலும் பாய முயல்வது. அது இலக்கில்லாத ஒரு பாய்ச்சல். விஜய் ரசிகர்கள் அதனால் ஒரு புது ஆட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக வாக்களிக்கிறார்கள். இத்தகையோர் தனிமனிதப் பண்புகளான கௌரவம், சுயசிந்தனை, பகுத்தறிவு, தொலைநோக்கு இல்லாதவர்கள். கவனியுங்கள்: இவர்கள் படிப்பு, வேலை எனத் தம் வாழ்க்கைத் தேவையின் பொருட்டு பகுத்தறிவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தம்மைக் குறித்துப் பரிசீலிக்க, வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க இவர்களால் பகுத்தறிவின் வழியில் செல்ல இயலாது. இவர்கள் உடைந்து போனவர்கள். முன்பு மதம் மக்களுக்கு இருந்தது. இவர்களுக்கு மதத்திலும் தீவிர பிடிப்பு இருக்காது. பொழுதுபோக்கு, போதை மருந்து, சினிமா, அரசியல் எல்லாமே அதனால் ஒருவித மதமாகி விடுகிறது இவர்களுக்கு. தம்மையே அறியாமல் அப்படிச் செயல்படுகிறார்கள். இவர்களைச் சமூகவலைதளப் பிரச்சாரம் இப்படி மாற்றவில்லை. இவர்கள் இத்தகைய கூட்டு மனநிலைகளை, இன்பத்தையும் குதூகலத்தையும் அளிக்கும் மனநிலைகளைத் தேடுகிறார்கள். விஜய் அதை அளிக்கிறார். கொள்கையும் அரசியல் சிந்தனையும் இவர்களைத் தம்மைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் பரிசீலிக்க வைக்கும் என்பதால் அதைச் செய்ய மாட்டார்கள். தம்மைக் கடந்து செல்ல வேண்டிய விழைவுக்கு மதமும் தீனியளிக்காததால் இவர்கள் மேற்சொன்ன வழியில் பயணிக்கிறார்கள்.
இவர்கள் இத்தகைய மனநிலைக்கு வரும்போது தமது எல்லா அடையாளங்களையும் இழந்து ஒரு தலைவரைக் கடவுளாகக் கருதி புளகாங்கிதம் அடைவார்கள். இவர்களுக்கு அதுவே வேண்டும். இதுவே இவர்களை முடிவுகளை எடுப்பதில் இருந்து, பொறுப்புகளை வரிப்பதில் இருந்து காப்பாற்றுகிறது. இதுவே இவர்களுக்கு மர்மமானதொரு அதிகாரத்தை அளிக்கிறது. இத்தகையோரை நீங்கள் அரசியல்படுத்த இயலாது. இவர்கள் மக்களாட்சி முறை, மானுடவாதம், அதன் விழுமியங்களுக்கு அப்பால் உள்ளவர்கள். அரசியல்படுத்துவது தனிமனிதர்களுக்கான செயல்பாடு. இவர்கள் தனிமனிதர்கள் அல்லர்.
இத்தகையோரை நாம் போதை மருந்துப் பயனர்களுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் இவர்களுடைய மூளையமைப்பிலேயே மாறுதல்கள் தோன்றும். இதைப் படித்துப் பாருங்கள் (https://www.labroots.com/.../15729/cults-change-brain...).
இன்ஸ்டாவில் சென்று பரப்புரை செய்தாலும் இவர்களைக் 'கைப்பற்ற' முடியாது.
இரண்டு விசயங்கள் மட்டுமே சாத்தியம்:
1) இயல்பு வாழ்க்கைக்கு இவர்களைத் திருப்புவது. இயல்பு வாழ்க்கையைத் தன்னளவில் மகிழ்ச்சியாக்குவது. வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது. குடும்ப அமைப்பை வலுப்படுத்துவது. கல்வி அமைப்பில் ஆசிரியர்களின் இடத்தை வலுவாக்குவது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பது. யாரையும் கைவிடாதிருப்பது. சமூகத் தனிமையை ஒழிப்பது. அதன்பிறகு நம் சமூகத்தில் போதை வஸ்துக்களையும் சினிமா பயன்பாட்டையும் குறைப்பது.
2) இந்த கும்பல் மட்டுமே தமிழ் நாடு அல்லர். 65% மக்கள் இன்றும் பாதிக்கப்படாமலே உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது அவசியம்.
இது அரசியல் பிரச்சினை என்பதை விட ஒரு சமூக உளவியல் பிரச்சினை. இது திமுகவின் பிரச்சினை என்பதைவிட ஒரு சமூகப் பிரச்சினை. ஒருவர் தன் வாழ்வின் கடைநிலையில் இருக்கும்போது மட்டுமே விஜய்யை ஆதரிக்க முடியும். மக்கள் ஏன் அந்நிலைக்குப் போகிறார்கள் எனச் சிந்திக்கலாம். என்றாவது இதெல்லாம் சரியாகலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் கல்ட் வழிபாட்டாளர்களைக் கடந்தே சிந்திக்க வேண்டும்.
அதேநேரம் இவர்கள் நம் பிள்ளைகளாகவும், சகோதர சகோதரிகளாகவும் தாய்மாராகவும் சக குடிமக்களாகவும் இருப்பதால் நம்மால் இவர்களைக் கடந்தும் செல்ல முடியாது. தனிப்பட்ட நிலையில், நமக்கும் இவர்களுக்குமான இடைவெளியானது ஒரு தலைமுறை இடைவெளி அல்ல. அவ்வாறு சொல்லப்படுவது அபத்தமானது. நாம் இவர்களிடம் எப்படி உரையாடுவது என்பதல்ல, இவர்களை என்ன செய்வது என்பதே பிரச்சினை. நம் குடும்பத்தில், நட்பு வட்டத்தில் இருந்து சிந்தித்துப் பார்க்கலாம். அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஜோக்கர்களை ஆதரிக்கத் தேவையில்லை

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி. பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அ...