முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் விஜய் ஆதரவாளர்களை அரசியல்படுத்த இயலாது?




//விஜய்க்கு வாக்களித்தவர்கள், இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, தமிழ் உணர்வு, சிறுபான்மை நலன், தொகுதி வரையறை எதிர்ப்பு, மாநில சுயாட்சி இவை மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பைக்கூட அறியாதவர்கள்(அப்படி ஒரு கட்சி இருப்பதும் பலருக்குத் தெரியாது) இதுதான் அரசியலற்றத் தன்மை. - வே. மதிமாறன்//

இப்பார்வை தவறென்கிறேன். பாசிஸம் ஆன்மீக தோரணை கொண்டது. சினிமா ரசிக மனநிலையும் அப்படியானதே. அது இல்லாத ஒன்றை நோக்கி கற்பனையாலும் உணர்வுகளாலும் பாய முயல்வது. அது இலக்கில்லாத ஒரு பாய்ச்சல். விஜய் ரசிகர்கள் அதனால் ஒரு புது ஆட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக வாக்களிக்கிறார்கள். இத்தகையோர் தனிமனிதப் பண்புகளான கௌரவம், சுயசிந்தனை, பகுத்தறிவு, தொலைநோக்கு இல்லாதவர்கள். கவனியுங்கள்: இவர்கள் படிப்பு, வேலை எனத் தம் வாழ்க்கைத் தேவையின் பொருட்டு பகுத்தறிவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தம்மைக் குறித்துப் பரிசீலிக்க, வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க இவர்களால் பகுத்தறிவின் வழியில் செல்ல இயலாது. இவர்கள் உடைந்து போனவர்கள். முன்பு மதம் மக்களுக்கு இருந்தது. இவர்களுக்கு மதத்திலும் தீவிர பிடிப்பு இருக்காது. பொழுதுபோக்கு, போதை மருந்து, சினிமா, அரசியல் எல்லாமே அதனால் ஒருவித மதமாகி விடுகிறது இவர்களுக்கு. தம்மையே அறியாமல் அப்படிச் செயல்படுகிறார்கள். இவர்களைச் சமூகவலைதளப் பிரச்சாரம் இப்படி மாற்றவில்லை. இவர்கள் இத்தகைய கூட்டு மனநிலைகளை, இன்பத்தையும் குதூகலத்தையும் அளிக்கும் மனநிலைகளைத் தேடுகிறார்கள். விஜய் அதை அளிக்கிறார். கொள்கையும் அரசியல் சிந்தனையும் இவர்களைத் தம்மைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் பரிசீலிக்க வைக்கும் என்பதால் அதைச் செய்ய மாட்டார்கள். தம்மைக் கடந்து செல்ல வேண்டிய விழைவுக்கு மதமும் தீனியளிக்காததால் இவர்கள் மேற்சொன்ன வழியில் பயணிக்கிறார்கள்.
இவர்கள் இத்தகைய மனநிலைக்கு வரும்போது தமது எல்லா அடையாளங்களையும் இழந்து ஒரு தலைவரைக் கடவுளாகக் கருதி புளகாங்கிதம் அடைவார்கள். இவர்களுக்கு அதுவே வேண்டும். இதுவே இவர்களை முடிவுகளை எடுப்பதில் இருந்து, பொறுப்புகளை வரிப்பதில் இருந்து காப்பாற்றுகிறது. இதுவே இவர்களுக்கு மர்மமானதொரு அதிகாரத்தை அளிக்கிறது. இத்தகையோரை நீங்கள் அரசியல்படுத்த இயலாது. இவர்கள் மக்களாட்சி முறை, மானுடவாதம், அதன் விழுமியங்களுக்கு அப்பால் உள்ளவர்கள். அரசியல்படுத்துவது தனிமனிதர்களுக்கான செயல்பாடு. இவர்கள் தனிமனிதர்கள் அல்லர்.
இத்தகையோரை நாம் போதை மருந்துப் பயனர்களுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் இவர்களுடைய மூளையமைப்பிலேயே மாறுதல்கள் தோன்றும். இதைப் படித்துப் பாருங்கள் (https://www.labroots.com/.../15729/cults-change-brain...).
இன்ஸ்டாவில் சென்று பரப்புரை செய்தாலும் இவர்களைக் 'கைப்பற்ற' முடியாது.
இரண்டு விசயங்கள் மட்டுமே சாத்தியம்:
1) இயல்பு வாழ்க்கைக்கு இவர்களைத் திருப்புவது. இயல்பு வாழ்க்கையைத் தன்னளவில் மகிழ்ச்சியாக்குவது. வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது. குடும்ப அமைப்பை வலுப்படுத்துவது. கல்வி அமைப்பில் ஆசிரியர்களின் இடத்தை வலுவாக்குவது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பது. யாரையும் கைவிடாதிருப்பது. சமூகத் தனிமையை ஒழிப்பது. அதன்பிறகு நம் சமூகத்தில் போதை வஸ்துக்களையும் சினிமா பயன்பாட்டையும் குறைப்பது.
2) இந்த கும்பல் மட்டுமே தமிழ் நாடு அல்லர். 65% மக்கள் இன்றும் பாதிக்கப்படாமலே உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது அவசியம்.
இது அரசியல் பிரச்சினை என்பதை விட ஒரு சமூக உளவியல் பிரச்சினை. இது திமுகவின் பிரச்சினை என்பதைவிட ஒரு சமூகப் பிரச்சினை. ஒருவர் தன் வாழ்வின் கடைநிலையில் இருக்கும்போது மட்டுமே விஜய்யை ஆதரிக்க முடியும். மக்கள் ஏன் அந்நிலைக்குப் போகிறார்கள் எனச் சிந்திக்கலாம். என்றாவது இதெல்லாம் சரியாகலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் கல்ட் வழிபாட்டாளர்களைக் கடந்தே சிந்திக்க வேண்டும்.
அதேநேரம் இவர்கள் நம் பிள்ளைகளாகவும், சகோதர சகோதரிகளாகவும் தாய்மாராகவும் சக குடிமக்களாகவும் இருப்பதால் நம்மால் இவர்களைக் கடந்தும் செல்ல முடியாது. தனிப்பட்ட நிலையில், நமக்கும் இவர்களுக்குமான இடைவெளியானது ஒரு தலைமுறை இடைவெளி அல்ல. அவ்வாறு சொல்லப்படுவது அபத்தமானது. நாம் இவர்களிடம் எப்படி உரையாடுவது என்பதல்ல, இவர்களை என்ன செய்வது என்பதே பிரச்சினை. நம் குடும்பத்தில், நட்பு வட்டத்தில் இருந்து சிந்தித்துப் பார்க்கலாம். அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...