முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிந்திக்க அனுமதிக்காத சினிமா



 நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கையில் நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் உணர்வுகளையும் தொகுத்துக் கொள்ள அவகாசமொன்றை அது அளிக்கிறது. அதனாலே வாசிக்க வாசிக்க தெளிவாகவும் கூர்மையாகவும் சிந்திக்கிற, நினைத்ததைத் தொகுத்துச் சொல்கிற, பளிச்சென்று முடிவெடுக்க இயல்கிறது. வாசிப்பவர்கள் நினைத்ததை எல்லாம் உணர்வுவயப்பட்டுச் செய்பவர்கள் அல்லர். அதுவே பக்குவம். ஆனால் சினிமா இதை அனுமதிப்பதில்லை. சினிமா நமக்குள் பிம்பங்களையும் ஒலிகளையும் அனுப்பியவாறே இருக்கிறது. இவையே எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் உணர்வுகளாகவும் இருப்பதால் நம்மால் இவற்றைப் பரிசீலிக்க இயல்வதில்லை. அங்கு கற்பனைக்கும் சிந்தனைக்குமான இடம் மிகமிகக் குறைவு. வாசித்து ஒரு சொல் நமக்குள் சென்று அது ஒலியாக, பிம்பமாக மாறி உணர்வாகவோ சிந்தனையாகவோ உருக்கொள்ள சில நுண் வினாடிகள் எடுக்கும். சினிமா அதை அனுமதிக்காமல் ரெடி மேடாக எல்லாவற்றையும் அளிக்கிறது. அதாவது சினிமா பார்க்க நீங்கள் பாமரராக இருந்தாலே போதும். சொல்லப்போனால் 99% வெகுஜனப் படங்கள் உங்களை ஒரு பாமரராகக் கருதியே கதை சொல்கின்றன. நீங்கள் உங்களை அவ்வாறு மாற்றியே ரசிக்க முடியும். தமிழில் வெற்றி பெற்ற எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு அங்குலமும் பாமரத்தனம் மட்டுமே இருக்கும். இதனாலே இலக்கியத்தில் இருந்து சினிமாவுக்கு வரும்போது அதை ஆழமாக உள்வாங்க முடிகிறது (அதாவது அது ஒரு குப்பையெனப் புரிந்துகொள்ள முடிகிறது). ஆனால் சினிமாவில் இருந்து இலக்கியத்துக்கு வந்தால் அதைப் படிக்கக் கூட இயலாது: ஒன்றுமே புரியாது.

நான் மேலே சினிமாவைக் குறித்துச் சொல்வதை இன்று திறன்பேசிப் பயன்பாடு, ரீல்ஸ் மீதான ஈடுபாடு குறித்த ஆய்வுகள் சொல்கின்றன. இவை நம் மூளையின் அமைப்பையே மாற்றுவதாகக் கூறுகின்றன. இவற்றால் மக்கள் கவனம் அற்றவர்களாக, யோசிக்கவும் பேசவும் எழுதவும் முடியாதவர்களாக மாறுவதாக இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.
தமிழில் ஒரு பெரிய பிரச்சினை நாம் சினிமாவை இவ்விதமாகப் பார்ப்பதில்லை என்பது. நமது சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் இவ்வாறு சினிமாவை விமர்சிக்கவில்லை. ஆகையால் நாம் சினிமாவைக் கொண்டாடத் தொடங்கி அதை மதமாக்கி விட்டோம். விளைவாக ஒரு பாமரச் சமூகம் ஆகிவிட்டோம்.
குடியை விட சினிமா மோகமே கேடுகெட்டது. மது ஒழிப்பைவிட சினிமா ஒழிப்பே அவசியம். நம் மாநிலத்தி இத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நமது ஊரில் மக்கள் நசுங்கிச் செத்ததோ சட்டம் ஒழுங்கு கெட்டதோ இல்லை. சினிமா மோகத்தால் நடந்திருக்கிறது. குடிகாரர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மலினமான நடிகரை முதல்வராக்கவில்லை. சினிமா ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்.

கருத்துகள்

Boomi இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...