Skip to main content

எது குற்றம்?


-    (இம்மாத “வெற்றி வேந்தன்” பத்திரிகையில் வெளியான கட்டுரை)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை சேர்ந்த சிராஜிதின் சமீபத்தில் ஐ.எஸ் தீவிரவாதி எனும் முத்திரையில் தீவிரவாத தடுப்புக் குழுவால் (ATS) கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் தான் என்ன? அவர் ஐ.எஸ்ஸுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் எழுதினார். ஐ.எஸ்ஸின் பிரச்சார பத்திரிகையை தன் கணினியில் வைத்திருந்தார். இதனால் அவர் குற்றவாளி ஆகி விடுகிறாரா? என்னைப் பொறுத்த மட்டில் இல்லை.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையினரின் அட்டூழியங்கள் பற்றி வெளியிட்ட நூல் ஒன்று பரவலாக கைமாறப்பட்டு படிக்கப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாய் எழுதாத பேசாத எத்தனை பேர் இங்கு இருக்கிறோம்? ராஜீவ் எப்படியெல்லாம் துண்டு துண்டாய் சிதறி சாக வேண்டும் என ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளர் கவிதை கூட எழுதினார். நாம் உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஒரு பிரச்சனையில் நாம் சிலநேரம் அரசின் வெளியுறவுக் கொள்கை நேர் எதிரான தீவிர நிலைப்பாடு எடுக்க நேரிடும். தீவிர எதிர்நிலைப்பாடுகள் எப்போதுமே கொந்தளிப்பான மனநிலையையும் கோபமான சொற்களையும் தூண்டும். இப்படி எழுதியவர்கள் எல்லாம் குற்றவாளிகள் ஆகி விடுவார்களா? இளவரசன் கொல்லப்பட்ட போது நான் ஒவ்வொறு பா.ம.கவினரும் சாக வேண்டும் என எழுதினேன். அதற்காய் நான் பயங்கரவாதியா? சிராஜிதின் இந்த அளவுக்கு தீவிரமாய் எழுதியதாய் கூடத் தெரியவில்லை. ஐ.எஸ்ஸின் வரலாற்றை படிக்கிறவர்களுக்கு அதன் தோற்றத்தில் அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய தேசங்களுக்கும் சம பங்கு உண்டு என அறியலாம். சொல்லப்போனால் சிரியாவை இரண்டாய் பிளந்து அங்குள்ள ஆளுங்கட்சியை பலவீனமாக்கி எப்போதும் தம் கட்டுப்பாட்டில் வைக்க அமெரிக்கா விரும்பியது. ஆரம்பத்தில் ஐ.எஸ்ஸுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்ததற்கும் ஆதாரம் உள்ளது. ஒரு கட்டத்தில் ஐ.எஸ் பெரிய தலைவலியாய் மாறியதும் அமெரிக்கா அங்குள்ள பழங்குடிகளுக்கு ஆயுதங்களும் அரசியல் ஆதரவும் கொடுத்து ஐ.எஸ்ஸுக்கு எதிராய் போரிட வைத்தது. பழங்குடிகள் ஐ.எஸ்ஸை ஓரளவு முறியடித்து பின்வாங்கவும் வைத்தன. இப்போர்களில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக பிரான்ஸ் உள்ளிட்ட அமெரிக்க துணை நாடுகளின் போர்விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. தோல்வியின் விளிம்பில் மீண்டும் தன் தரப்பை வலுப்படுத்தவும் தன் ஆதரவாளர்களுக்கு தெம்பூட்டும் வகையில் ஐ.எஸ் பிரான்ஸில் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்தது. நான் இத்தாக்குதலை நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஐ.எஸ் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டுமானால் நாம் முதலில் அமெரிக்க ஜனாதிபதியை தான் கைது செய்து சிறையில் அடைத்தாக வேண்டும்.
இதையெல்லாம் நான் எழுதலாம். நான் முஸ்லீம் அல்ல. ஆனால் ஒருவேளை நான் ஒரு முஸ்லீம் என்றால் இவ்வளவு வெளிப்படையாக எழுத தயங்குவேன். என்னை தீவிரவாதி என வழக்கு தொடுத்து ரிமாண்டில் வைக்கவும் பத்திரிகையில் என் படத்தை வெளியிடவும் இவர்களுக்கு எவ்வளவு நேரமாகும் சொல்லுங்கள்.
 நமக்கும் சிராஜிதினுக்கும் இரண்டு வித்தியாசங்கள். நாம் நம்முடைய நம்பிக்கைகளுக்கு சாதகமான அரசியல் சூழல் கொண்ட மாநிலத்தில் வாழ்கிறோம். சிராஜிதின் அப்படி எந்த சாதகமும் அற்ற ஒரு நாட்டில் வாழ்கிறார். மேலும் அவர் ஒரு முஸ்லீம். மிக சுலபமாய் அவர் மீது தீவிரவாத முகமூடியை மாட்ட முடிகிறது.
இங்கு இன்னொரு பிரச்சனையும் எழுகிறது. ஒரு குற்றம் செய்ய சாத்தியமுண்டு என நாமாக கற்பனை பண்ணி, எந்த உறுதியான ஆதாரமும் இன்றி, ஒருவரை கைது செய்யலாமா? இப்போது இந்த பாணியிலான குற்றபுலனாய்வு பிரபலமாகி வருகிறது, இதன் தந்தை அமெரிக்கா தான். அங்கு சி.ஐ.ஏ சிலரை வட்டம் போட்டு தேர்வு செய்து மறைமுகமாய் புலனாய்வு செய்யும். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் எந்த தொடர்பும் இருக்காது. மிக இயல்பான வாழ்க்கையில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் ஒருவேளை மதவாத உணர்வுகளைத் தூண்டும் ஆட்களை சந்தித்தால் தீவிரவாதி ஆவார்களா என சி.ஐ.ஏ சந்தேகிக்கும். உடனே புலனாய்வு அதிகாரி ஒருவர் மப்டியில் அவருடன் நட்பாய் பழக ஆரம்பிப்பார். அவருடன் தொடர்ந்து மதவாதத்துக்கு ஆதரவாய் பேசி உணர்ச்சிகளைத் தூண்டுவார். அவர் அதற்கு இசைந்தால் அவரிடம் தான் வெடிகுண்டு போன்ற பொருட்களை கொடுத்து தாக்குதலுக்கு உதவப் போவதாய் உறுதி அளிப்பார். ஏதோ ஒரு கட்டத்தில் இவரும் உளவியல் அழுத்தம் தாளாமல் ஒத்துக் கொள்வார். உடனே அவர் தீவிரவாதி என முடிவு கட்டி சி.ஐ.ஏ கைது செய்யும்.
 இந்த பாணியிலான புலனாய்வு மனித உரிமைகளுக்கு மட்டும் அல்ல அடிப்படை உளவியலுக்கே எதிரானது. மனிதர்கள் சூழலுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுப்பவர்கள். இதனால் தான் விஞ்ஞானிகள் மனித மூளையை plastic தன்மை கொண்டது என்கிறார்கள். மதவாத கலவர சூழலில் வாழ்பவர்கள் இயல்பாகவே அதனால் தூண்டப்படுபவர்களாக இருப்பார்கள். மனித மனம் தன்னுடன் செயல்படுகிறவர்களைக் கண்டு போலச் செய்யும் தன்மை கொண்டது (பக்கத்தில் உள்ளவர் கொட்டாவி விட்டால் உங்களுக்கும் கொட்டாவி வருவது போல). இதனால் தான் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தனியான பொது உளவியல் தோன்றுகிறது. உதாரணமாய் மனித உரிமை, சிறுபான்மையினர் உரிமை, கடவுள் மறுப்பு, இடதுசாரி சிந்தனை, தமிழ்தேசியம் போன்ற சில அடிப்படை நம்பிக்கைகள் சார்ந்து சிறுபத்திரிகை வட்டத்தினர் ஒரே போல யோசிப்பதை பார்க்கலாம். தென்மாவட்ட மக்களுக்கு சாதி சார்ந்தும் இது போல் ஒரு வன்முறை உளவியல் இருக்கும். அவர்கள் அவ்விடத்தில் இருந்து புலம்பெயர்த்தால் புது மனிதர்கள் ஆகி விடுவார்கள். எதுவுமே ரத்தத்தில் இல்லை; மதத்திலோ சாதியிலோ இல்லை – சூழலிலும் உரையாடல்களிலும் மொழியிலும் இருக்கிறது. இதனாலேயே ஒரு மனிதனின் இன்றைய பேச்சை வைத்து அவன் நாளைய நடவடிக்கையை தீர்மானிக்க இயலாது. ஒருவேளை இன்றைய நடவடிக்கையை வைத்து நாளைய நடவடிக்கையை ஓரளவு கணிக்கலாம் (நம் செயல்கள் நம் நியூரான்களுக்கும் ஒரு பாதையை, டெம்பிளேட்டை அமைக்கின்றன.)

மேற்சொன்ன வகை புலனாய்வின் முதல் கட்டம் தான் ஒருவரது பேச்சு மற்றும் எழுத்தை கண்காணிப்பது. அதன் மூலம் அவரை குற்றவாளி என தீர்மானிப்பது. அமெரிக்க அதிகாரிகளைப் போல் மப்டியில் பழகி தீவிரவாதத்துக்கு தூண்டும் வேலையை இன்னும் நம் அதிகாரிகள் செய்ய ஆரம்பிக்க வில்லை. ஆனால் மாதக்கணக்காய் அவர்கள் இஸ்லாமியரின் பேஸ்புக் பக்கங்களை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். இப்படி சும்மா கணினி முன் உட்கார்ந்து பேஸ்புக் பார்த்துக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் வேலை செய்ததாய் காட்ட வேண்டாமா? அதனால் அடிக்கடி சிராஜிதின் போல் யாராவது ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு பலிபீடம் முன் கட்டி வைக்கிறார்கள். முட்டாள்தனமான சோம்பேறித்தனமான போலீஸ் விசாரணை வேலையின் உச்சபட்ச உதாரணம் இது. 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...