முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது…

Image result for tolstoy
தல்ஸ்தாய்

சமீபத்தில் ஒரு நண்பர் தான் எழுதி வரும் நாவலைப் பற்றி பேசினார். “எவ்வளவு பக்கம் எழுதியிருக்கீங்க?”
“ஒரு நூறு பக்கம் போல”
“இன்னும் எவ்வளவு பக்கம்?”
“30 பக்கம்”
நான் அவரிடம் கூடுதலாய் ஒரு 120 பக்கங்களாவது எழுதக் கேட்டுக் கொண்டேன். இரண்டு காரணங்கள்.

1)   நாவல் என்பதன் சுவாரஸ்யம் கதையில் இல்லை. சிறு சிறு சம்பவங்களை நுண் தகவல்கள் கொண்டு விரித்தெழுதுவதிலே உள்ளது. அதைத் தான் வாசகன் சிலாகிக்கிறான். தல்ஸ்தாய் தனது போரும் வாழ்வும் நாவலின் துவக்கத்தில் ஒரு பிரபுக்குடும்பத்தில் நடக்கும் விருந்தைப் பற்றி விரிவாக எழுதுவார். அதை இளமையில் படிக்கும் போது எனக்கு அவ்வளவு குதூகலமாய் இருந்தது. கதை சொல்வதில் குறியாக இருக்கும் சில எழுத்தாளர்கள் ”விருந்து கோலாகாலமாய் நடந்து முடிந்தது” என ஒற்றை வரியில் அதை கடந்து விடுவார்கள். அது நாவல் எழுத்துக்கு நேர் எதிரான பாணி.
Image result for காடு ஜெயமோகன்

 ஜெயமோகன் தன் “காடு” நாவலில் மையப் பாத்திரம் காட்டில் தொலைந்து போகும் இடத்தை ஒரு தனி அத்தியாயமாய் எழுதியிருப்பார். அது போல் பல்வேறு சிறு சிறு காட்சிகளை அபாரமான நுண் விவரங்களுடன் கவித்துவத்துடன் விரித்து எழுதியிருப்பார். இக்காட்சிகளையே வாசகர்கள் கொண்டாடினார்கள். அந்நாவலின் கதையை நீங்கள் மூன்று அத்தியாயங்களில் முடித்து விடலாம். ஆனால் மூன்று அத்தியாயங்களை 25 அத்தியாயங்களாய் இலை விரித்து விருந்து பரிமாறுவது தான் நாவல் எழுத்து.
Image result for கரைந்த நிழல்கள்

சுருக்கமான நாவல்கள் சாத்தியமே. ஆனால் அசோகமித்திரன் போன்ற அபாரமான கலைஞர்கள் மட்டுமே “கரைந்த நிழல்கள்” எழுதி வெற்றி பெற முடியும். அந்நாவலில் அவர் 30 பக்க அத்தியாயத்தை 8 பக்க அத்தியாயமாய் சுருக்கி இருப்பார். வாசிக்கையில் நம் மனதில் சிறு அத்தியாயங்கள் ஒரு பறவை இறகுகளை தடதடத்து விரிப்பது போல் அகன்று விஸ்தாரமாகும். அதாவது அசோகமித்திரன் 150 பக்க நாவல் எழுதுவதில்லை. 300 பக்கங்களை 150 பக்கங்களாய் சுருக்குகிறார். அவரை அடுத்து இந்த கலை கைவரப்பெற்றவர் இமையம் மட்டுமே. மற்றவர்கள் விரிவாய் எழுத முயல்வதே பாதுகாப்பானது.
2)   நாம் கணினியில் எழுதும் நாவல் பிரசுரமாகும் போது 30% பக்கங்கள் எண்னிக்கையில் குறைந்து விடும். கையெழுத்துப் பிரதி என்றால் இன்னும் குறையும். 100 பக்கங்கள் 60 பக்கங்களாகும். இப்படி எழுதி விட்டு தாராளமாய் நீங்கள் அந்த பிரதியை திருத்தவும் தேவையில்லாத இடங்களை அகற்றவும் முடியாது. ஆனால் 250 பக்கங்கள் எழுதி விட்டு 180 ஆக சுருக்கலாம்.
நான் மேலே குறிப்பிட்ட நிலைமை எதார்த்த / இயல்புவாத எழுத்தாளர்களுக்கு மட்டுமே. சாருவைப் பின்பற்றி எழுதி வரும் இளம் (பின்நவீனத்துவ) எழுத்தாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் நாவல் மெர்குரிரை தரையில் சிந்தியது போல் இயல்பாகவே நெகிழ்வாக வடிவமற்ற வடிவம் கொண்டதாய் இருக்கும். நீண்ட கவிதையுடன் இந்நாவல்களை ஒப்பிடலாம். ஆக, அவர்கள் நாவல்கள் 100 பக்கங்கள் என்றாலும் கூட மனதுக்குள் விரிவு பெறும்.
தற்போதைய இளம் எழுத்தாளர்களில் விநாயக முருகன் இயல்பிலேயே விரிவான களத்துடன் நாவல் எழுதக் கூடியவர். காரணம் அவர் (சமகால) வரலாற்றை எடுத்துக் கொள்வது. வரலாறு ஒரு நாவலுக்கு சுலபத்தில் நாவலுக்கான இயல்புகளை கொடுத்து விடும்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் நாவலை புதிதாய் எழுத முயல்கிறவர்கள் ஒன்று சிறுகதை அல்லது கவிதை வடிவில் அதிகம் பழகுகியவர்கள். அல்லது பேஸ்புக்கில் சிறு சிறு பத்திகளாய் எழுதுகிறவர்கள். அவர்கள் நாவல் என்பது சற்றே பெரிய கதை என தவறாக புரிந்து கொள்கிறார்கள். கதையை வேகமாய் சுவாரஸ்யமாய் நகர்த்த எத்தனிக்கிறார்கள். இது சிறுகதையின் அல்லது பேஸ்புக் கதையின் பார்முலாவை நாவலில் பிரயோகிப்பதாகும். இம்முயற்சிகள் வெற்றி பெறாது!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I'm more tһаn happy to uncover tһіѕ site.

I wanteԀ to tһank you for оnes time for
thiss рarticularly fantastic read!! I definitely likked every paгt of it ɑnd Ι
hаѵe you saved too fav to lο᧐k at neew infоrmation on your blog.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...