முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியும் ஜெர்மானியரும்


"இந்தியாவின் பலமும் விசேஷமும் அதன் பன்மைத்துவம். உதாரணமாக, ஜெர்மனிக்கு ஒரு உத்தரப் பிரதேசக்காரரும் ஒரு தமிழரும் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்த்து ஜெர்மன்காரர் உங்கள் இருவருக்கும் தேசப் பற்றே இல்லையே, நீங்கள் இருவரும் இந்தியராய் இருந்து கொண்டு, உங்கள் மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேசுகிறீர்களே என்று கேட்டு இருவரையும் மிகக் கடுமையாக விமர்சிப்பார். அவருக்கு நீங்கள் எவ்வளவுதான் விளக்கினாலும் புரியவே புரியாது. அவர்களால் ஒரே தேசத்தில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், பல்வேறு கடவுள்களைத் தொழும் மக்கள், பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ முடியும் என்பதையே புரிந்து கொள்ள முடியாது. ஜெர்மன் என்றால் அவர் ஜெர்மானிய மொழிதான் பேச வேண்டும்; கிறிஸ்தவராகத்தான் இருக்க வேண்டும். இப்படி ஒரு தேசம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை ஒரே மொழி, ஒரே மதம்தான் இருக்க முடியும். ஆனால் இந்தியாவில் செம்மொழிகளே அரை டஜன் இருக்கின்றன. உதிரி மொழிகள் நூற்றுக் கணக்கில்.


கடவுள், மதம் என்று எடுத்துக் கொண்டால், ஒரு கடவுள் கிடையாது. நூற்றுக் கணக்கான கடவுள்கள். புனித நூலும் கிடையாது. தீர்க்கதரிசியும் கிடையாது. பகவத் கீதையெல்லாம் இந்து மதத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட புனித நூல் இல்லை. வியாசன் என்ற கவிஞன் எழுதிய மகாபாரதம் என்ற இலக்கியப் படைப்பில் வரும் ஒரு சிறிய பகுதியே கீதை. ஆனால் இஸ்லாம், கிறித்தவம் போன்றவற்றில் அப்படிக் கிடையாது. கடவுள் ஒன்று; தீர்க்கதரிசி ஒன்று; புனித நூல் ஒன்று. ஆனால் இந்து மதமே பன்மைத்துவத்தைப் போற்றும் மதமாக இருக்கிறது."
- சாரு நிவேதிதா


இதனால் தான் இந்துத்துவர்கள் ஐரோப்பிய மனோபாவம் கொண்டவர்கள் என்கிறேன். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கல்வி பெற்ற, இந்திய சிந்தனை அற்றவர்கள் தாம் இந்துத்துவாவை தோற்றுவித்தார்கள். சாவர்க்கரில் இருந்து மோடி வரை இந்திய தோல் போர்த்திய ஐரோப்பியரே. சாரு குறிப்பிடும் ஜெர்மானியரைப் போன்று தான் ஒவ்வொரு இந்துத்துவரும் சிந்திக்கிறார். மற்றமையை தன்னில் ஒன்றாய் பார்ப்பது இந்திய மனப்பான்மை. மற்றமையை மறுத்து, அம்மறுப்பின் மூலம் தன்னை கட்டமைப்பது ஐரோப்பிய மனோபாவம். மோடி பக்தர்கள் அத்தகைய மனோபாவத்தினர்.(உண்மையான இந்திய மனம் காந்தியிடம் இருந்தது)

நான் சாருவிடம் முரண்படும் இடம் திராவிடர்கள் பற்றியது. திராவிட சிந்தனையும் மற்றமை மீதான வெறுப்பை தனதடிப்படையாக கொண்டதே. (அதனாலே தமிழ் தேசியத்தின் இடத்தில் இந்து தேசியம் இங்கு வருவது மிக சிரமம். தமிழ் தேசியம் முழுக்க மதிப்பிழந்தால் இயல்பாக அவ்விடத்தில் இந்து தேசியம் வந்து விடும்.)

தமிழ் தேசியர்களும் பன்மைத்துவத்துக்கு எதிரானவர்களே. இங்குள்ள சிறுதெய்வங்கள், அவர்களின் சடங்கு சம்பிரதாயங்கள், மக்களின் பூர்வீக நம்பிக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதை மூட நம்பிக்கை என கடந்து போனார்கள். பல்வேறு வட்டார வழக்குகளின் இடத்தில் செவ்வியல் தமிழின் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்தினார்கள்.

ஆனால் இந்து தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஆபத்தற்றவர்களே என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்தியாவில் இன்றுள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு நாம் நம் வேர்களுக்கு மீள்வதே. அப்போது நாம் இயல்பாகவே இந்துத்துவா போன்ற முரண் எதிர்வு சித்தாந்தத்தை மறுத்து விடுவோம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...