முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வணிகப்படங்களும் கலைப்படங்களும்

அன்புள்ள அபிலாஷ்,

நலம்தானே.

ராசி திரைப்படம் பற்றிய தங்களின் பதிவை வாசித்தேன். சிகரெட் மற்றும் சுருட்டை வைத்து ரம்பாவின் நோக்கத்தை காட்சிப்படுத்தியது ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்தது. அந்தப்படத்தின் இயக்குனர் இதைப் படித்தாலும் "நான் இப்படியா யோசித்தேன்" என்று வியக்கக்கூடும். இதில் நான் ரசித்தது எப்படி ஒரு சிறு விஷயத்தைக்கூட அது வெளிப்படும் விதத்தை தாண்டி  ரசிக்கமுடியும் என்பது. நம் கண்களால் காணும் காட்சிகளுக்கும் அதன் ரசனைக்கும் ஒரு எல்லை உண்டு, அதைத்தாண்டி கற்பனை செய்யவும் ரசிக்கவும் ஒரு அகக்கண் தேவை என்று தோன்றுகிறது


பார்வைக்கும் ரசனைக்குமான இந்த தொடர்பு இப்பொழுது அற்றுக்கொண்டே வருகிறது. எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்க்க பழகிவிட்டோம். ரசிப்பது எப்படி என்று சொல்லித்தர முடியுமா, ரசித்துதான் காட்டவேண்டும்.

என் இரண்டு வயது மகன் பேனாவில் தரைமுழுதும் கிறுக்குவான். பின்பு அந்த கிறுக்கல்களிலிருந்து அவனுக்கு தெரிந்த வடிவங்களை கண்டுகொள்வான். உங்கள் பதிவு அதைத்தான் நினைவூட்டியது. உடைந்த கண்ணாடிகளைக்கொண்டு கலெடோஸ்கோப் செய்யும் உங்கள் ரசனையை நானும் ரசித்தேன். நன்றி.

அன்புடன்,
பிரபு 

அன்புள்ள பிரபு
தரையில் கிறுக்கும் ஓவியங்களில் இருந்து தனக்கான வடிவத்தை கண்டு கொள்ளும் குழந்தையின் சுபாவத்தை என்னுடன் ஒப்பிட்டத்தை மிகவும் ரசித்தேன். என்னுடைய ஆளுமை குறித்த மிகத் துல்லியமான சித்திரம் இது தான். என் நண்பர்களில் என்னை நீங்கள் தான் மிக கச்சிதமாய் கணித்திருக்கிறீர்கள். நன்றி.
”ராசி” படத்தின் இயக்குநர் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா? ம்ஹும். ஆனால் இதையே நீங்கள் கிட்டத்தட்ட எல்லா வணிக இயக்குநர்களுக்கும் சொல்லலாம். கலைப்பட இயக்குநர்களுக்கும் வணிக இயக்குநர்களுக்குமான முக்கிய வித்தியாசங்களில் ஒன்று முன்னவர்களுக்கு கோட்பாட்டு பரிச்சயம் உண்டு என்பது. உதாரணமாய், ஒரு கலைப்பட இயக்குநர் பெண்னியம் கற்றிருப்பார். பெண்ணியவாதி ஒருவர் அப்படத்தை அர்த்தப்படுத்தும் வகையில் வசதியாய் அப்படத்தை அவர் எடுப்பார். பிராயிடுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் நாம் பிராயிடிய கோட்பாட்டுத் தாக்கத்தைக் காண்கிறோம். ஹேங்கரில் சட்டையை தொங்க விடுவது போல் ஒரு கோட்பாட்டில் நீங்கள் இப்படங்களை தொங்க விட முடியும்.
ஆனால் வணிகப் படங்களில் நடப்பது வேறு. நமது சமூக மனம் இப்படங்களின் மொழியில் வெளித்தெரிகிறது. கலைப்படங்களை ஆய்வது நமது கோட்பாட்டு அறிவை உரசிப் பார்க்கவும், வணிகப்படங்களை அலசுவது நமது சமூக உளவியலின் போக்குகளை புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. எனக்கு அதனாலேயே வணிக கலை வடிவங்களை கவனிப்பதில் ஆர்வம் அதிகம்.
உங்கள் அன்புக்கு நன்றி பிரபு.
அன்புடன்

ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...