முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்


Image result for தேவதேவன்
தேவதேவன்

ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது:
மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்சலை கவிதையில் பேசுவது முக்கியம் என நினைக்கிறேன். நிறைய எழுதுங்கள். தினம் ஒரு கவிதை என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். கவிதைப் பழக்கம் உங்கள் தினப்பழக்கங்களில் ஒன்றாக வேண்டும். பின் அதுவே பிரதான பழக்கமாக வேண்டும். வாழ்த்துக்கள்

அவர் இதை அடுத்து ஒரு கேள்வி கேட்டார்:
இந்த புரிய முடியாத குறியிடுகள் பற்றி உங்க கருத்து?


தமிழ் நவீன கவிதை குறியீடு, படிமம் மட்டுமல்ல தேவையற்ற புதிர்மையால் நிறைந்தது. ஆனால் கவிதை இன்று இத்தகைய சிலந்தி வலை சிடுக்குகளை கடந்து விட்டது. என் புரிதல் படி சமகால கவிதைக்கு குறியீடுகள் முக்கியமல்ல. இன்றைய கவிதை இன்றைய மனநிலையை பேச வேண்டும். இன்றைய மனநிலை என்றால் என்ன? முன்னுக்குப் பின் முரணாய் இயங்குவது. ஒன்றை சொல்லி விட்டு அடுத்த நொடியோ அதற்கு நேர்முரணான ஒன்றிக்கு நகர்வது. இதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வது. உணர்ச்சி மிகுந்து தவிப்பது. அந்த தவிப்பில் ஒரு பித்து நிலையில் உழல்வது. இறைஞ்சுவது, கொதிப்பது, வெடித்து ஒளிச்சிதறலாய் தெறிப்பது, வேடிக்கை செய்வது, எந்த பிடிப்பும் இன்றி பகடி மேல் பகடியாய் செய்வது.

சமீபத்தில் கவிஞர் பெருந்தேவி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் முதலில் நான் குறிப்பிடும் உணர்வுநிலைகள் அழகாய் வெளிவருகின்றன. அவை நமக்கான கவிதைகளாய் தெரிகின்றன. அதேநேரம் ஒரு தொன்மையான தமிழை, பழந்தமிழ் பிரயோகங்களை எடுத்தாள்கிறது. சமகால கவிஞர்கள் நகர வேண்டிய திசை இது தான்.
Image result for நகுலன்
நகுலன்
தொண்ணூறுகளில் இதே மொழியுடன் சிதறல் மனநிலையுடன் எழுதியவர் தேவதேவன். அதன் பிறகு என்.டி ராஜ்குமார். இக்காலகட்டத்தில் தோன்றிய பெண் கவிஞர்களையும் இப்பட்டியலில் சேர்க்கலாம். உடலை எழுத வேண்டும் எனும் கொள்கை அறிவுப்புடன் இயங்கிய இவர்களின் கவிதைகளில் நான் இன்று முக்கியமாய் கருதும் பல பின்நவீனத்துவ குணாதசியங்களாய் உள்ளது. நேரடி விவாத பாணியில் அதிகம் எழுதக் கூடியவர் என்றாலும் மனுஷ்ய புத்திரனின் காதல் / அகக் கவிதைகளில் மேற்சொன்ன இறைஞ்சலை, மனச்சிதறலைக் காண்கிறேன். அவரது அகக்கவிதைகள் இவ்வாறு முக்கியமானவை (நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறவை அவ்வகை கவிதைகள்). இவர்களுக்கு முன்னால் நகுலன் இவ்வகை கவிதைகளில் கோலோச்சினார்.
Image result for என்.டி ராஜ்குமார்
என்.டி ராஜ்குமார்
 இவர்களுக்கு நடுவில் பல கச்சிதமான நவீனத்துவ கவிஞர்கள் தோன்றி உள்ளார்கள்.  அவர்களின் பாணியில் இன்றும் பலர் எழுதுகிறார்கள். அவர்களையும் நான் கொண்டாடுவேன். அற்புதமான கவிஞர்கள் அவர்கள். ஆனால் சமகாலத்துக்கான கவிதை அவையல்ல என்பதில் தெளிவாக உள்ளேன். ஆகையால் நான் இளங்கவிஞரிடம் சொன்னேன்:
நாம் குறியீடுகளின் காலத்தை கடந்து விட்டோம். அவை இனி முக்கியமல்ல
மனதின் பித்துநிலையை கவிதை காட்டினால் போதும். அதற்கு வேண்டுமெனில் குறியீடுகளை பயன்படுத்தலாம். நேரடியாகவும் சொல்லலாம்.”



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...