முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்


Image result for தேவதேவன்
தேவதேவன்

ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது:
மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்சலை கவிதையில் பேசுவது முக்கியம் என நினைக்கிறேன். நிறைய எழுதுங்கள். தினம் ஒரு கவிதை என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். கவிதைப் பழக்கம் உங்கள் தினப்பழக்கங்களில் ஒன்றாக வேண்டும். பின் அதுவே பிரதான பழக்கமாக வேண்டும். வாழ்த்துக்கள்

அவர் இதை அடுத்து ஒரு கேள்வி கேட்டார்:
இந்த புரிய முடியாத குறியிடுகள் பற்றி உங்க கருத்து?


தமிழ் நவீன கவிதை குறியீடு, படிமம் மட்டுமல்ல தேவையற்ற புதிர்மையால் நிறைந்தது. ஆனால் கவிதை இன்று இத்தகைய சிலந்தி வலை சிடுக்குகளை கடந்து விட்டது. என் புரிதல் படி சமகால கவிதைக்கு குறியீடுகள் முக்கியமல்ல. இன்றைய கவிதை இன்றைய மனநிலையை பேச வேண்டும். இன்றைய மனநிலை என்றால் என்ன? முன்னுக்குப் பின் முரணாய் இயங்குவது. ஒன்றை சொல்லி விட்டு அடுத்த நொடியோ அதற்கு நேர்முரணான ஒன்றிக்கு நகர்வது. இதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வது. உணர்ச்சி மிகுந்து தவிப்பது. அந்த தவிப்பில் ஒரு பித்து நிலையில் உழல்வது. இறைஞ்சுவது, கொதிப்பது, வெடித்து ஒளிச்சிதறலாய் தெறிப்பது, வேடிக்கை செய்வது, எந்த பிடிப்பும் இன்றி பகடி மேல் பகடியாய் செய்வது.

சமீபத்தில் கவிஞர் பெருந்தேவி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் முதலில் நான் குறிப்பிடும் உணர்வுநிலைகள் அழகாய் வெளிவருகின்றன. அவை நமக்கான கவிதைகளாய் தெரிகின்றன. அதேநேரம் ஒரு தொன்மையான தமிழை, பழந்தமிழ் பிரயோகங்களை எடுத்தாள்கிறது. சமகால கவிஞர்கள் நகர வேண்டிய திசை இது தான்.
Image result for நகுலன்
நகுலன்
தொண்ணூறுகளில் இதே மொழியுடன் சிதறல் மனநிலையுடன் எழுதியவர் தேவதேவன். அதன் பிறகு என்.டி ராஜ்குமார். இக்காலகட்டத்தில் தோன்றிய பெண் கவிஞர்களையும் இப்பட்டியலில் சேர்க்கலாம். உடலை எழுத வேண்டும் எனும் கொள்கை அறிவுப்புடன் இயங்கிய இவர்களின் கவிதைகளில் நான் இன்று முக்கியமாய் கருதும் பல பின்நவீனத்துவ குணாதசியங்களாய் உள்ளது. நேரடி விவாத பாணியில் அதிகம் எழுதக் கூடியவர் என்றாலும் மனுஷ்ய புத்திரனின் காதல் / அகக் கவிதைகளில் மேற்சொன்ன இறைஞ்சலை, மனச்சிதறலைக் காண்கிறேன். அவரது அகக்கவிதைகள் இவ்வாறு முக்கியமானவை (நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறவை அவ்வகை கவிதைகள்). இவர்களுக்கு முன்னால் நகுலன் இவ்வகை கவிதைகளில் கோலோச்சினார்.
Image result for என்.டி ராஜ்குமார்
என்.டி ராஜ்குமார்
 இவர்களுக்கு நடுவில் பல கச்சிதமான நவீனத்துவ கவிஞர்கள் தோன்றி உள்ளார்கள்.  அவர்களின் பாணியில் இன்றும் பலர் எழுதுகிறார்கள். அவர்களையும் நான் கொண்டாடுவேன். அற்புதமான கவிஞர்கள் அவர்கள். ஆனால் சமகாலத்துக்கான கவிதை அவையல்ல என்பதில் தெளிவாக உள்ளேன். ஆகையால் நான் இளங்கவிஞரிடம் சொன்னேன்:
நாம் குறியீடுகளின் காலத்தை கடந்து விட்டோம். அவை இனி முக்கியமல்ல
மனதின் பித்துநிலையை கவிதை காட்டினால் போதும். அதற்கு வேண்டுமெனில் குறியீடுகளை பயன்படுத்தலாம். நேரடியாகவும் சொல்லலாம்.”



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...