முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன் எனும் பேரலை (1)


 Image result for balakumaran

இந்த கட்டுரையை எழுதுவது பற்றி உரையாடுகையில் ப்ரியா கல்யாணராமன் என்னிடம் வினவினார்: “நீங்க பாலகுமாரன் விசிறியா?” நான் தயங்காமல் உடனேஆமாம்என்றேன். பிறகு யோசித்துப் பார்த்த போது எனக்கே அது வியப்பாக இருந்தது.
 என்னிடம் உங்களுக்குசுந்தர ராமசாமி / பிரமிள் / லா..ரா / சி.சு. செல்லப்பா / கா..சு பிடிக்குமா?” எனக் கேட்டால் நான் சில நொடிகள் குழம்புவேன்; தவிப்பேன்; பிறகு இவர்களைப் பற்றின என் மதிப்பீட்டை நழுவி வழுவிச் சொல்வேன். ஏனென்றால் இலக்கிய மதிப்பீடு மிக சிக்கலானது; தொடர்ந்து மாறுவது; இலக்கியத்துள் ஒருவரது ஆகிருதி இது என துல்லியமாய் சொல்வது மிக மிக சிரமம்.

 ஆனால் பாலகுமாரனை நான் என்றும் மதிப்பிட்டதில்லை. அவரை படிநிலையில் எங்கே வைப்பது என தலையை புண்ணாக்கியதில்லை. என் நினைவுகளுடன், என் மென் உணர்வுகளுடன், என் தனிமையுடன், உறவுநிலைகள் குறித்த என் தவிப்புடன், என் அழகுணர்வுடன், இந்த சமூகத்திடம் என்னால் வெளிப்படுத்த முடியா அன்புடன் தொடர்ந்து உரையாடியவர் அவர்.
 அவரது நாவல் ஒன்றில் ஒரு வடகிழக்கு மாநில கூர்க்கா பாத்திரம் வருவார். அந்த கூர்க்கா தேநீரை எப்போதும் பொறுமையாய் ரசித்து அருந்துவார்; அதன் வெதுவெதுப்பு வாசனை சுவை ஆகியவை தன் மூச்சில் தன் பிரக்ஞையில் தன் நினைவுகளில் கலந்து தானற்று போகும்படி ரசித்து அருந்துவார். பதின்வயதில் இந்த இடத்தைப் படித்த பின் நான் தேநீர் அருந்தும் விதமே மாறியது. இப்படி பாலகுமாரனிடம் இருந்து தாக்கம் பெற்று மெல்ல மெல்ல நிறைய விதங்களில் நான் மாறிய நூறு நூறு சந்தர்பங்களைக் கூற முடியும். பாலகுமாரன் ஒரு குரல்; என்னை அடித்து கரையிலொதுக்கி அலைகழித்த ஒரு பேரலை.
 அவர் நிறைய பலவீனங்கள் கொண்ட எளிய மனிதரும் தான். அதை அவர் மறைக்க முயன்றதும் இல்லை. அவருக்குள் விவேகமும் சாமர்த்தியமும் வெகுளித்தனமும் ஒரே சமயம் தெரிந்தன. நான் இதையெல்லாம் அவரிடம் ரசித்தேன். அதனால் தான் நான் அவருக்கு வாசகன் அல்ல; ஒரு ரசிகன். இந்த கட்டுரையில் நான் அவரை கராறாய் மதிப்பிடப் போவதில்லை. அவரைப் பற்றின எனது அபிப்ராயங்கள், புரிதல்கள், அவதானிப்புகளை பகிர்கிறேன்.
பாலகுமாரன் தனது பிரசித்தமான ஆரம்ப கால நாவலானமெர்க்குரிப் பூக்களைஎழுதுகையில் எனக்கு ஒரு வயதிருக்கும். என் பன்னிரெண்டாவது வயதில் அவரது நாவல்கள் எனக்கு பல்வேறு வெகுஜன புனைவுகள் மத்தியில் அறிமுகமாயின. அந்த காலத்தில் என்னுடன் வெகு அணுக்கமாய் உரையாடும், ஆலோசனைகள் சொல்லும், பெண் அன்யோன்யம் பற்றி கிளுகிளுப்பாய் நட்பாய் பேசும் ஒரு குரலாய் அவர் மாறினார்.
 பாலகுமாரன் நாவல்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒன்று தான். அவர் நூல்களில் ஒலிப்பது ஒரே அங்கலாய்ப்பு, ஆவேசம், இச்சை, நம்பிக்கை தான் என புரிந்து கொண்டேன். ஆனாலும் அந்த சொற்களை மீள மீள கேட்க நான் விரும்பினேன். இது தான் அவருக்கும் பிற வெகுஜன, இலக்கிய படைப்பாளிகளுக்குமான வித்தியாசம்.
 நீங்கள் சுஜாதாவை அவர் தரும் துல்லிய புகைப்படம் போன்று பளபளப்பான சொற்சித்திரங்களுக்காக, வசனங்களின் நுணுக்கங்களுக்காக, எதிர்பாரா வாழ்வியல் விநோதங்கள், அபத்தங்களுக்காக படிப்பீர்கள். அந்த நகைச்சுவை, அந்த சாமர்த்தியம், அந்த நளினத்தில் மட்டுமே சுஜாதா இருப்பார். மற்றபடி அவர் தான் சொல்லும் கதையில் இருந்து வெகுவாக விலகி இருப்பார். சுருக்கென்று குத்தி விட்டு, சட்டென விலாவில் தொட்டு சிரிப்பு மூட்டி விட்டு, இருளில் ஒளி பாய்ச்சி சில வினாடிகள் உங்களை திகைக்க விட்டு விட்டு நகர்ந்து விடுவார். ஆனால் பாலகுமாரன் தன் எல்லா பாத்திரங்களிலும் இருப்பார். வசனங்களில் சிறு சிறு தொனி வேறுபாடுகளுடன் ஒலிப்பது பாலகுமாரனின் மனக்குரலாகவே இருக்கும்.




கருத்துகள்

Massy spl France. இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக எழுதி உள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி அபிலாஷ் சந்திரன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல எழுத்து .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...