முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன் எனும் பேரலை (1)


 Image result for balakumaran

இந்த கட்டுரையை எழுதுவது பற்றி உரையாடுகையில் ப்ரியா கல்யாணராமன் என்னிடம் வினவினார்: “நீங்க பாலகுமாரன் விசிறியா?” நான் தயங்காமல் உடனேஆமாம்என்றேன். பிறகு யோசித்துப் பார்த்த போது எனக்கே அது வியப்பாக இருந்தது.
 என்னிடம் உங்களுக்குசுந்தர ராமசாமி / பிரமிள் / லா..ரா / சி.சு. செல்லப்பா / கா..சு பிடிக்குமா?” எனக் கேட்டால் நான் சில நொடிகள் குழம்புவேன்; தவிப்பேன்; பிறகு இவர்களைப் பற்றின என் மதிப்பீட்டை நழுவி வழுவிச் சொல்வேன். ஏனென்றால் இலக்கிய மதிப்பீடு மிக சிக்கலானது; தொடர்ந்து மாறுவது; இலக்கியத்துள் ஒருவரது ஆகிருதி இது என துல்லியமாய் சொல்வது மிக மிக சிரமம்.

 ஆனால் பாலகுமாரனை நான் என்றும் மதிப்பிட்டதில்லை. அவரை படிநிலையில் எங்கே வைப்பது என தலையை புண்ணாக்கியதில்லை. என் நினைவுகளுடன், என் மென் உணர்வுகளுடன், என் தனிமையுடன், உறவுநிலைகள் குறித்த என் தவிப்புடன், என் அழகுணர்வுடன், இந்த சமூகத்திடம் என்னால் வெளிப்படுத்த முடியா அன்புடன் தொடர்ந்து உரையாடியவர் அவர்.
 அவரது நாவல் ஒன்றில் ஒரு வடகிழக்கு மாநில கூர்க்கா பாத்திரம் வருவார். அந்த கூர்க்கா தேநீரை எப்போதும் பொறுமையாய் ரசித்து அருந்துவார்; அதன் வெதுவெதுப்பு வாசனை சுவை ஆகியவை தன் மூச்சில் தன் பிரக்ஞையில் தன் நினைவுகளில் கலந்து தானற்று போகும்படி ரசித்து அருந்துவார். பதின்வயதில் இந்த இடத்தைப் படித்த பின் நான் தேநீர் அருந்தும் விதமே மாறியது. இப்படி பாலகுமாரனிடம் இருந்து தாக்கம் பெற்று மெல்ல மெல்ல நிறைய விதங்களில் நான் மாறிய நூறு நூறு சந்தர்பங்களைக் கூற முடியும். பாலகுமாரன் ஒரு குரல்; என்னை அடித்து கரையிலொதுக்கி அலைகழித்த ஒரு பேரலை.
 அவர் நிறைய பலவீனங்கள் கொண்ட எளிய மனிதரும் தான். அதை அவர் மறைக்க முயன்றதும் இல்லை. அவருக்குள் விவேகமும் சாமர்த்தியமும் வெகுளித்தனமும் ஒரே சமயம் தெரிந்தன. நான் இதையெல்லாம் அவரிடம் ரசித்தேன். அதனால் தான் நான் அவருக்கு வாசகன் அல்ல; ஒரு ரசிகன். இந்த கட்டுரையில் நான் அவரை கராறாய் மதிப்பிடப் போவதில்லை. அவரைப் பற்றின எனது அபிப்ராயங்கள், புரிதல்கள், அவதானிப்புகளை பகிர்கிறேன்.
பாலகுமாரன் தனது பிரசித்தமான ஆரம்ப கால நாவலானமெர்க்குரிப் பூக்களைஎழுதுகையில் எனக்கு ஒரு வயதிருக்கும். என் பன்னிரெண்டாவது வயதில் அவரது நாவல்கள் எனக்கு பல்வேறு வெகுஜன புனைவுகள் மத்தியில் அறிமுகமாயின. அந்த காலத்தில் என்னுடன் வெகு அணுக்கமாய் உரையாடும், ஆலோசனைகள் சொல்லும், பெண் அன்யோன்யம் பற்றி கிளுகிளுப்பாய் நட்பாய் பேசும் ஒரு குரலாய் அவர் மாறினார்.
 பாலகுமாரன் நாவல்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒன்று தான். அவர் நூல்களில் ஒலிப்பது ஒரே அங்கலாய்ப்பு, ஆவேசம், இச்சை, நம்பிக்கை தான் என புரிந்து கொண்டேன். ஆனாலும் அந்த சொற்களை மீள மீள கேட்க நான் விரும்பினேன். இது தான் அவருக்கும் பிற வெகுஜன, இலக்கிய படைப்பாளிகளுக்குமான வித்தியாசம்.
 நீங்கள் சுஜாதாவை அவர் தரும் துல்லிய புகைப்படம் போன்று பளபளப்பான சொற்சித்திரங்களுக்காக, வசனங்களின் நுணுக்கங்களுக்காக, எதிர்பாரா வாழ்வியல் விநோதங்கள், அபத்தங்களுக்காக படிப்பீர்கள். அந்த நகைச்சுவை, அந்த சாமர்த்தியம், அந்த நளினத்தில் மட்டுமே சுஜாதா இருப்பார். மற்றபடி அவர் தான் சொல்லும் கதையில் இருந்து வெகுவாக விலகி இருப்பார். சுருக்கென்று குத்தி விட்டு, சட்டென விலாவில் தொட்டு சிரிப்பு மூட்டி விட்டு, இருளில் ஒளி பாய்ச்சி சில வினாடிகள் உங்களை திகைக்க விட்டு விட்டு நகர்ந்து விடுவார். ஆனால் பாலகுமாரன் தன் எல்லா பாத்திரங்களிலும் இருப்பார். வசனங்களில் சிறு சிறு தொனி வேறுபாடுகளுடன் ஒலிப்பது பாலகுமாரனின் மனக்குரலாகவே இருக்கும்.




கருத்துகள்

Massy spl France. இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக எழுதி உள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி அபிலாஷ் சந்திரன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல எழுத்து .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...