முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ் 2


Image result for பிக்பாஸ் 2

தமிழர் சினிமா பைத்தியம் தான். அதற்காக பாஜகவுக்கு (முன்பு அம்மாவுக்கும்) அரசியல் களத்தில் குழப்பில் விளைவிக்க வேண்டும் என்றாலும் நடிகர்கள். பிக்பாஸ் என்றாலும் நடிகர்கள்.
பிக்பாஸில் எல்லா பங்கேற்பாளர்களும் வாய்ப்பு இல்லாத, ஒன்றிரண்டு படங்கள் மூலம் சற்றே முகபரிச்சயம் பெற்ற நடிகர்கள், அல்லது டிவியில் சினிமா நிகழ்ச்சிகள் தொகுப்பவர்கள், அல்லது பாட்டுபாடுபவர்கள்… அலுப்பாக இருக்கிறது. பிரபலங்களின் சச்சரவுகள், விவாகரத்தாகி பிரிந்திருக்கும் ஜோடிகளின் மறுசந்திப்பு (தாடி பாலாஜியும் முன்னாள் மனைவியும்) ஆகியவை ஆர்வமூட்டும் விசயங்களே. ஆனால் அதை மட்டுமே மக்கள் எவ்வளவு நாட்கள் பார்க்க வேண்டும்?

ஒரு சமூக சேவகர், ஒரு அரசியல் போராளி, அரசியலில் அதிக வேலையில்லாத ஒரு குட்டித் தலைவர், ஒரு துடிப்பான எழுத்தாளன் … இப்படி ஒரு அணி சேர்க்கை இன்னும் அதிரடியாய் இருக்கும். சரிக்கு சமமாய் சினிமா ஆட்களும் இருக்கட்டுமே! ஏனென்றால் சினிமா தவிர்த்த ஆட்கள் இருந்தால் அவர்களுக்கு பேசவும் அரட்டை அடிக்கவும் சர்ச்சிக்கவும் பல்வேறு புது விசயங்கள் இருக்கும். பிக்பாஸ் வழி சமூகத்துக்கு தேவையான பல அபிப்பிராயங்கள், கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் முடியும். இந்நிகழ்ச்சிக்கும் வெறும் கிசிகிசு பொழுதுபோக்கு என்பதைக் கடந்து மக்களின் பிரச்சனைகளைப் பேசும் நிகழ்ச்சியெனும் ஒரு சமூக இடமும் கிடைக்கும்.
அப்புறம், இந்த விஜய் டிவியில் துணி துவைத்தவர்கள், முகம் அலம்பினவர்கள் என யாராவது ரெண்டு பேரை எந்த நிகழ்ச்சியென்றாலும் உள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள். பிக்பாஸ் வீடு என தனியாக தேவையில்லை. விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சியும் ஒரு  பிக்பாஸ் வீடு தான். பார்த்த ஆட்களே தினமும் காலையில் பல் தேய்ப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை திரும்ப திரும்ப எதிலும் பார்க்க வேண்டும் என்பது பார்வையாளருக்கு நீங்கள் வழங்கும் தண்டனையா? இப்போது பிக்பாஸிலும் இவர்கள் அளிக்கும் வாயுத் தொல்லை.
இந்த பிக்பாஸ் முடியும் போது பார்வையாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் அடைபட்டு பைத்தியமாகும் நிலைக்கு வந்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...