முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ் 2


Image result for பிக்பாஸ் 2

தமிழர் சினிமா பைத்தியம் தான். அதற்காக பாஜகவுக்கு (முன்பு அம்மாவுக்கும்) அரசியல் களத்தில் குழப்பில் விளைவிக்க வேண்டும் என்றாலும் நடிகர்கள். பிக்பாஸ் என்றாலும் நடிகர்கள்.
பிக்பாஸில் எல்லா பங்கேற்பாளர்களும் வாய்ப்பு இல்லாத, ஒன்றிரண்டு படங்கள் மூலம் சற்றே முகபரிச்சயம் பெற்ற நடிகர்கள், அல்லது டிவியில் சினிமா நிகழ்ச்சிகள் தொகுப்பவர்கள், அல்லது பாட்டுபாடுபவர்கள்… அலுப்பாக இருக்கிறது. பிரபலங்களின் சச்சரவுகள், விவாகரத்தாகி பிரிந்திருக்கும் ஜோடிகளின் மறுசந்திப்பு (தாடி பாலாஜியும் முன்னாள் மனைவியும்) ஆகியவை ஆர்வமூட்டும் விசயங்களே. ஆனால் அதை மட்டுமே மக்கள் எவ்வளவு நாட்கள் பார்க்க வேண்டும்?

ஒரு சமூக சேவகர், ஒரு அரசியல் போராளி, அரசியலில் அதிக வேலையில்லாத ஒரு குட்டித் தலைவர், ஒரு துடிப்பான எழுத்தாளன் … இப்படி ஒரு அணி சேர்க்கை இன்னும் அதிரடியாய் இருக்கும். சரிக்கு சமமாய் சினிமா ஆட்களும் இருக்கட்டுமே! ஏனென்றால் சினிமா தவிர்த்த ஆட்கள் இருந்தால் அவர்களுக்கு பேசவும் அரட்டை அடிக்கவும் சர்ச்சிக்கவும் பல்வேறு புது விசயங்கள் இருக்கும். பிக்பாஸ் வழி சமூகத்துக்கு தேவையான பல அபிப்பிராயங்கள், கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் முடியும். இந்நிகழ்ச்சிக்கும் வெறும் கிசிகிசு பொழுதுபோக்கு என்பதைக் கடந்து மக்களின் பிரச்சனைகளைப் பேசும் நிகழ்ச்சியெனும் ஒரு சமூக இடமும் கிடைக்கும்.
அப்புறம், இந்த விஜய் டிவியில் துணி துவைத்தவர்கள், முகம் அலம்பினவர்கள் என யாராவது ரெண்டு பேரை எந்த நிகழ்ச்சியென்றாலும் உள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள். பிக்பாஸ் வீடு என தனியாக தேவையில்லை. விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சியும் ஒரு  பிக்பாஸ் வீடு தான். பார்த்த ஆட்களே தினமும் காலையில் பல் தேய்ப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை திரும்ப திரும்ப எதிலும் பார்க்க வேண்டும் என்பது பார்வையாளருக்கு நீங்கள் வழங்கும் தண்டனையா? இப்போது பிக்பாஸிலும் இவர்கள் அளிக்கும் வாயுத் தொல்லை.
இந்த பிக்பாஸ் முடியும் போது பார்வையாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் அடைபட்டு பைத்தியமாகும் நிலைக்கு வந்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...