முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (4) – “சகோதரிகள்”


 Image result for அசோகமித்திரன்
Image result for பாலகுமாரன்

”சகோதரிகள்” நாவல் தகப்பனின் ஆதரவற்ற ஒரு குடும்பத்துப் பெண்கள் உறவுகளில் சந்திக்கும் ஏமாற்றங்களை, துக்கத்தை, அவலத்தை சித்தரிக்கிறது. ஆண்களால் தொடர்ந்து கைவிடப்படும், ஏமாற்றப்படும், ஒடுக்கப்படும் பெண்களின் கதை என்பதே இதன் ஒற்றை வரி சுருக்கம். இது ஒரு டிவி சீரியல் கதை என உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அதே கதை தான். ஆனால் கே.என் செந்தில் இதே கதையை அபாரமான ஒரு இலக்கிய பிரதி ஆக்குகிறார்.

இந்த ஒற்றை வரியை அவர் அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலின் சட்டகத்துள் கொண்டு வைக்கிறார். பாலகுமாரனின் தளுதளுப்பான மனம் பொங்கி பிரவாகிக்கும் மொழிநடையை எடுத்தாள்கிறார்; பாலகுமாரனின் தனித்து போராடும் பெண்களை ஒரு புதிய கோணத்தில் (காமம் இன்றி) உள்ளே கொண்டு வருகிறார். ஒரு பக்கம் மிகவும் நெகிழ்வான உணர்ச்சிகரமான கதைப்போக்கு, இன்னொரு பக்கம் அசோகமித்திரன் தன் பாத்திரங்கள் மீது காட்டும் கட்டுப்பாடு – இந்த ரெண்டுமே இந்நாவலில் உள்ளது. ரெண்டுமே இதன் பலங்கள்.
அசோகமித்திரனின் ஜமூனா, சாயாவும் இந்நாவலில் வரும் வசந்தி, திலகாவும் ஒன்றல்ல. ஆயினும் இந்நால்வருக்கும் ஒரு நுணுக்கமான தொடர்பு உள்ளது.
அசோகமித்திரனைப் போன்றே செந்திலும் நாவலின் பாத்திரங்கள் தாம் சந்திக்கும் அவலங்களினால் ஒருவரை ஒருவர் நுணுக்கமாய் பாதிப்பது, ஒருவரது அந்தரங்க வாழ்க்கை இன்னொருவரது வாழ்க்கையுடன் வலைப்பின்னல் போல் தொடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறார். இவ்வளவு சின்ன நாவலில் இவ்வளவு பிசிறு தட்டாமல் களத்தை அமைப்பது எளிதல்ல. மூன்று நாவல்களை எழுதிய ஒருவனாக என்னால் இதை அனுபவரீதியாய் சொல்ல முடியும். செய்நுட்பத்தைப் பொறுத்தமட்டில் “சகோதரிகள்” ஒரு சாதனை. (இது புரியாமல் வெறுமனே இது நாடகத்தனமாய் இருக்கிறது என ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் எரிச்சல் வருகிறது. நாவல் என்பது வெளியே தெரிவது மட்டுமல்ல; அதனுள் பல நுணுக்கங்கள் உள்ளன.)
 “தண்ணீரில்” நாம் காணும் இருத்தலிய தொனி (ஆல்பர்ட் காமு தாக்கம்) செந்திலின் நாவலில் இல்லை. இதுவே பிரதான வேறுபாடு.
இதற்கு மேல் நான் இந்நாவலைப் பற்றி எழுதினால் அது நாவலை விட பெரிதாக அமைந்து விடும் என்பதால் உங்களையே படித்து உணரும் படி வேண்டுகிறேன்.
இத்தொடரை முடிக்கும் முன், “சகோதரிகளில்” என்னை கவர்ந்த பகுதிகளில் ஒருசிலவற்றை கீழே தந்துள்ளேன். நாவலை படிக்க உத்தேசம் (அல்லது அவகாசம்) இல்லாதவர்கள் இதைப் படிக்கலாம்:
1.      சில தினங்களுக்குப் பின் கைலாசம் வீட்டு வாசலிலேயே அவளை
இறக்கி விட்டுப் போனான்.மறுநாள் காலையில் ஹாரனை உரக்க
ஒலிக்கவிட்ட பின்னும் பதில் இல்லாததால் பைக்கில் அமர்ந்தபடியே திலகாவை பெயர் சொல்லி அழைத்து கண்ணாடியில் தலைமுடியை சரிசெய்வதை இந்திராணி பார்த்து உள்ளே அழைத்து டீ கொடுத்து சம்பிரதாயமாக விசாரித்தாள். அவன் இந்திராணிக்கு பின்னால் நின்று கொண்டிருந்த திலகாவையும் அவள்குனியும் போது வசந்தியையும் மாறி மாறி பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான்.
திலகா விடுவிடுவென வந்து அவனை இழுத்து அம்மாவின் காலில் விழ முயன்றாள். அவன் உள்ளேகாயும் உள்ளாடைகளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.”
2.      திலகா தன் மனதை மீறி உடல் செல்வதைக் கட்டுபடுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். ஆணின் துணைக்கு ஏங்குகிறேனா? என கேட்டுக் கொண்டாள். அந்த எண்ணத்தை விரட்டுவது போலதலையை அசைத்து மறுத்தாள். பேருந்தின் நெரிசலில் ஆண்களின் உடல் படும்போதெல்லாம் கடும்சினத்துடன் திரும்பி முறைப்பாள். அருவருப்படைவாள். இன்று இறங்குகையில் தவறுதலாக ஒருவனின் விரல் அவள் புறங்கையில் உரசிய போது தன் உடல் முழுக்க அந்தஸ்பரித்தின் சுகம் ஊடுருவிச் செல்வதை உணர்ந்து அச்சம் கொண்டாள். அப்போது கைலாசத்தின் நினைவு எழுந்தது. கண்களை இறுகமூடி கால்களைக் குறுக்கி போர்வையால்தலையையும் சேர்த்து மூடிக் கொண்டதும் பக்கத்து படுக்கையில் வசந்தியின் போர்வைக்குள்ளிலிருந்து அவளது சிரிப்புச் சத்தமும் வளையல்களின் ஓசையும் திலகாவுக்குக் கேட்டது.”
3.      வசந்தி மும்மரமாக அடுத்தடுத்தபீஸ்களைத் தைத்துக் கீழே தள்ளிக் கொண்டிருக்கையில் ஒரு நிழல் அவள் முதுகின் மீது விழுவதை உணர்வாள். ஒரு வினாடி கால்கள் தைக்க மறந்து நிற்கும். பின் அது அவன் என அறிந்ததும் முன்னை விட வேகமெடுக்கும். ”
4.      தூசு படிந்து நிற்கும் அவன் பைக்கின் கண்ணாடியை துடைத்து அதில் தன் முகத்தைப் பார்த்தாள். அவன் கண்களுக்குள் தன்னைப் பார்ப்பது போல இருந்தது”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...