அபிராமிகள் ஏன் உருவாகிறார்கள். மிகச்சிறந்த
நிதர்சன கட்டுரை சார். மிகப்பெரிய மணமார்ந்த நன்றிகள் (lot of wishes and love for your
thoughts- abiramigal yen uruvakiraarkal)
அன்புடன்
பொன். குமார்
அன்புள்ள பொன். குமார்
இக்கட்டுரையை எழுதி முடித்த
பின் திருத்தும் போது நான் குற்றம் செய்த தரப்பை மிகுதியாக நியாயப்படுத்துகிறேனோ எனும்
ஐயம் ஏற்பட்டது. ஆனால், அபிராமியை ஒரு மிருகமாக சித்தரிப்பதை ஏற்க என் மனம் மறுத்தது.
நம்மில் பலரையும் போல முரண்பட்ட பல எண்ணங்களுக்கு ஆட்பட்டவர் அவர்; ஏதோ ஒரு சந்தர்பத்தில்
ஒரு எல்லைக்கு தள்ளப்பட்ட பின், அவர் கண்மூடித்தனமான வன்மத்துடன் நடந்து கொள்ள நேர்ந்தது,
அதுவே அந்த கற்பனைக்கெட்டாத குற்றங்களுக்கு காரணம் எனத் தோன்றியது. கட்டுரையை மின்னம்பலத்துக்கு
அனுப்பும் போது “இதை வாசகர்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்; எனக்கு எதிர்மறை எதிர்வினைகளே
வரும்” என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் மாறாக கணிசமானோர் பாராட்டி உள்ளனர்.
அபிராமி ஒரு மிருகமல்ல என அவர்கள் கருதுவதாகவே இதன்வழி புரிந்து கொள்கிறேன். இந்த நிலைப்பாடு
நமக்கு இப்போது அவசியமானது.
நன்றி!
கருத்துகள்