

கேட் ஷர்மா எனும் டிவி நடிகை மற்றும் மாடல் இப்போது சற்றே
விசித்திரமான கொஞ்சம் குழப்பமான ஒரு பாலியல் வழக்கை இந்திப்பட இயக்குநர் சுபாஷ் கய்
மீது தொடுத்துள்ளார்.
இந்த நடிகை சுபாய் கய்யை நன்றாகத் தெரிந்தவர். பார்ட்டிகள்
அவர் சுபாய் கய்யுடன் கலந்து கொண்டு எடுத்த போட்டோக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஒரு
மாலையில் அவர் சுபாய் கய்யின் இல்லத்தில் இருக்கிறார். கூட ஐந்து நண்பர்களும் உண்டு.
நண்பர்கள் முன்னிலையில் அவர் நடிகையை தனக்கு மசாஜ் பண்ண கேட்கிறார். நடிகையும் அதை
செய்கிறார். இதன் பிறகு சுபாய் கய் தன்னை அறைக்கு வரச் சொல்லி அங்கே தன்னை அரவணைத்து
முத்தமிட முயன்றதாய், தான் உடன்பட மறுத்த போது தன் படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப்
போவதில்லை என மிரட்டியதாகவும் அவர் கூறுகிறார். இதை அடுத்து இருவரிடையே சாட்டில் உரையாடல்
தொடர்கிறது. சாட்டிலும் அவர் தன்னை மிரட்டியதாய் நடிகை கூறுகிறார்.
இந்த குற்றச்சாட்டை அவர் நேரடியாய் காவல் துறைக்கு புகாராய்
அளித்துள்ளார்; அவர் மீடியாவுக்கு அளித்துள்ள அந்த குற்ற விவரணையிலும் மசாஜ் தகவல்
சொருகப்பட்டுள்ள விதத்தை கவனிக்க வேண்டும்.
ஒரு பெண் தன்னை ஒரு ஆண் வன்புணர்வு செய்த்தாய் புகார் அளிக்க
1) அவர் தன்னை உடல்ரீதியாய் அத்துமீறியதற்கான ஆதாரங்கள் (காயங்கள்) மற்றும் 2) தன்னுடன்
வற்புறுத்த உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் (விந்து, வியர்வை இன்னபிற) வேண்டும்.
ஆக, இவ்வழக்கு பலாத்காரம் ஆகாது, பாலியல் தொந்தரவு வழக்காகும்.
மஹிமா குக்ரெஜா என்பவர் தன் டிவிட்டெரில் சுபாஷ் கய் ஒரு
பெண்ணுக்கு மதுவில் போதை மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாய் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் வழக்குத் தொடுக்கவோ தன் பெயரை வெளிப்படுத்தவோ இல்லை.
இந்த வழக்கு வலுவானது. அவர் அடுத்த நாள் வழக்கு தொடுத்திருந்தால்
சுபாஷ் கய் உள்ளே போயிருப்பார். சமீபத்தைய சட்ட திருத்தங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட
பெண் தான் விருப்பமின்றி உறவு கொள்ளப்பட்டதாய் நிரூபிக்க தேவையில்லை. அதை நிரூபிக்கும்
பொறுப்பு குற்றம் சாட்டப்பட்ட ஆளுக்கானது. ஆனால் உறவு நடந்ததற்கான நிரூபணம் வேண்டும்.
டி.என்.ஏ சோதனை இதற்கு உதவும். குற்றம் நடந்த பின் விசாரணை
அதிகாரிகள் ஒரு மருத்துவரின் துணையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் உள்ள வியர்வை,
எச்சில், ரத்தம், விந்து உள்ளிட்ட வஸ்துக்களை சேகரித்து அதில் உள்ள டி.என்.ஏ மூலம்
குற்றம் செய்தவரை உறுதிப்படுத்த முடியும்.
ஆனால் குற்றம் நடந்து ஒரு நாளுக்குள் தடயங்கள் அழியுமுன்
இந்த சோதனை செய்யப்பட வேண்டும்.
ஆனால் மேற்சொன்ன குற்றச்சாட்டில் அதற்கான காலம் கடந்து விட்டது.
அப்பெண் தான் அவருடன் வீட்டில் இருந்த போது அவர் தன் தொடையை
வருடினதாகவும், அதன் பின்னர் தன் நிலையை கூறி அழுது புலம்பியதாகவும், அழுத நிலையில்
அப்பெண்ணின் தோளில் சாய்ந்ததாகவும், இதன் பின் முத்தமிட்டதாகவும் கூறுகிறார். அப்பெண்
இதன் பின் வீட்டுக்கு சென்ற பின் நடந்ததைக் குறித்து வருந்துகிறார். ஆனால் தொடர்ந்து
சுபாய் கய்யுடன் வேலை செய்கிறார். அப்போது தான் மேற்சொன்ன வன்புணர்வு நடக்கிறது. சுபாய்
கய் அவரை காரில் அழைத்து செல்கிறார். அவர் அளித்த பார்ட்டி டிரக் கலந்த மதுவை அப்பெண்
குடித்த பின் மயங்கின நிலைக்கு செல்கிறார். அதன் பின் கய் தன்னை ஒரு நட்சத்திர விடுதிக்கு
அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாய் அப்பெண் கூறுகிறார்.
இங்கு அப்பெண் ஏன் முதலில் கய்யை தன் உடலைத் தொட அனுமதித்தார்,
ஏன் தொடர்ந்து அவருடன் பணி செய்தார், ஏன் காரில் சென்றார், ஏன் மதுவருந்தினார் போன்ற
கேள்விகளுக்கு சட்டத்தில் பிரசித்தம் இல்லை. இன்று சட்டம் வெகுவாக மாறி விட்டது. மேற்சொன்ன
பெண்ணின் நடத்தை தவறானது என முன்னர் வழக்காடு மன்றத்தில் வாதாடுவார்கள். ஆனால் இன்று
நிலைமை மாறி விட்டது.
AIR 1979 SC வழக்கின் பின், உறவின் போது பெண்ணின் இணக்கம்
என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கு சாதகமாக்க முடியாது என நீதிமன்றம் கருத துவங்கி
விட்டது.
ஆக, அப்பெண் ஏன் அவரை இந்தளவுக்கு எல்லை மீற அனுமதித்தார்
எனும் கேள்விகளுக்கு இனி சட்டத்தில் பிரசித்தம் இல்லை.
ஆனால் நடைமுறையில் இது சற்று குழப்பமான சங்கதி. ஒரு ஆண் தன்னை
சில நொடிகள் பார்க்கிற விதத்தை வைத்தே பெண்கள் அவரை நெருங்கலாமா என முடிவெடுப்பார்கள்.
ஆனாலும் சில நேரங்களில் சில அதிகாரமிக்க, ஆதிக்கமான ஆண்களுடன் – முழு விருப்பமின்றி
- பழக வேண்டிய தேவை பெண்களுக்கு ஏற்படுகிறது. வேலையிடங்களில் இது நடப்பதுண்டு. இந்த
நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் அத்துமீறலாய் மாறும் என பெண்கள் அறிவார்கள். ஆனால் பணம்,
வாய்ப்பு, தனிப்பட்ட தேவைகள் ஆகிய காரணங்களுக்காக பெண்கள் அந்த ஆபத்தான கட்டம் வரை
போய்ப் பாய்க்கலாம், பிரச்சனை வந்தால் அப்போது தற்காத்துக் கொள்ளலாம் என நினைப்பார்கள்.
அதாவது தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறார்கள்.
இது ஒரு குழப்பமான
நிலை, ஒரு grey area. ஒரு பெண் தன்னை ஓரளவுக்கு இத்தகைய சூழலுக்கு உட்படுத்தின பின்
ஆணுக்கு தவறான சில நம்பிக்கைகள் கிடைக்கும். ஒரு பெண் தொடையை வருட அனுமதிக்கிறார்கள்
என்றால அடுத்த கட்டத்துக்கு போகலாம் என நினைப்பார்கள். ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில்
எந்த எல்லை வரை ஆணை அனுமதிக்கலாம் என்பதில் பெண்ணுக்கு ஒரு உறுதிப்பாடு இருக்கும்.
இதை ஆண் அறிய மாட்டான். அந்த எல்லையை அவன் தாண்டும் போது இது பலாத்காரம் ஆகிறது. பலாத்காரம்
என்பது ஒரு பெண்ணை பின் தொடர்ந்து போய் கடத்தியோ உடல் பலத்தை பிரயோகித்தோ வன்புணர்வது
மட்டுமல்ல. இது போன்ற இணங்கியும் இணங்காத பல உறவுகளும் வன்புணர்வுகளே என்கிறது நமது
சட்டம்.
இங்கே பெண்ணின் தரப்புக்கு மதிப்பளிப்பதற்கு ஒரு காரணம் அவள்
பலவீனமானவளாய் இருக்கிறாள் என்பது.
சுபாய் கய் போன்றவர்கள் செய்யும் குற்றம் தொடர்ந்து மறைமுக
அழுத்தத்தை செலுத்தி பெண்களை இந்த எல்லைக்கு தள்ளுவது. உ.தா., ஒரு வீட்டுக்கு வேலைக்காரி
பெண்ணை முதலாளி போகிற போக்கில் உரசுகிறார், அவர் விரல்களை எதையோ வாங்கும் சாக்கில்
தொடுகிறார், அப்போது அப்பெண் எதிர்க்கவில்லை என்றால், அதற்கு அவர் தரப்பில் நியாயம்
இருக்கலாம். ஆனால் அதற்காய் ஆண் அப்பெண்ணிடம் அத்துமீறத் துணிந்தால் அது அவள் அனுமதியுடன்
அல்ல.
இதையெல்லாம் உணர்ந்து தான் சட்டம் தற்போது குற்றம் சாட்டும்
பெண்ணுக்கு ஆதரவாக உள்ளது.
கருத்துகள்