முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புக் கட்டுரை: மாற்று மருத்துவமும் அலோபதியும்!

சிறப்புக் கட்டுரை: மாற்று மருத்துவமும் அலோபதியும்!

புற்றுநோய்க்கான அலோபதி சிகிச்சை குறித்துச் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு மின்னம்பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். புற்றுநோயைக் குணப்படுத்த இயலாது எனத் தெரிந்தும் அலோபதி மருத்துவம் சிகிச்சைக்காக லட்சங்களில் நம்மைச் செலவு செய்ய வைக்கிறது என்பதை விளக்கியிருந்தேன். இந்தப் பின்னணியில் அலோபதியையும் மாற்று மருத்துவ முறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அலோபதிக்கும் பிற மருத்துவ முறைகளுக்குமான வேறுபாடுகளும் முரண்களும் அதிகம். அலோபதி மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் மாற்று மருத்துவ முறைகளை ஏற்பதில்லை. மாற்று மருத்துவத்தின் மீது அலோபதியினர் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகளைச் சற்று ஆராய்வோம்.
குற்றச்சாட்டு 1: மாற்று மருத்துவம் முறைமை இல்லாதது.
ஆம், அதனால்தான் அது மாற்று மருத்துவம். முறைசாரா வாழ்க்கை இயக்கங்கள் அனைத்தையும் எதிர்ப்பது சரியா? தர்க்க ரீதியான தீர்வுகள் மட்டுமே நலன் பயக்கும் எனும் எண்ணம் ஐரோப்பிய அறிவொளிக் காலத்தில் எச்சம் மட்டுமே. நாம் இன்று மிகையாக தர்க்கத்தை / பகுத்தறிவை நம்பி இருப்பதை ஏற்பதில்லை.
குற்றச்சாட்டு 2: மாற்று மருத்துவம் தன்னை நிரூபிக்கவில்லை; போதுமான ஆதாரங்களை அது அளிப்பதில்லை.
அலோபதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கைப் பார்வையை, சிந்தனை முறையைக் கொண்டது மாற்று மருத்துவம். அதன் நிரூபண முறை என்பது நம்பிக்கை சார்ந்தது; அன்றாட வாழ்வில் கிடைக்கும் நுணுக்கமான மேம்பாடுகளைக் கவனிப்பதால் கிடைப்பது; வாழ்வை அமைதி மற்றும் ஆழமான திருப்தியை நோக்கி நகர்த்துவது; பரிபூரணமான அகம், புறம் இரண்டுக்குமான முன்னேற்றமே மாற்று மருத்துவத்தின் நோக்கம். அதை நிரூபிக்கச் சொல்வது ஓர் ஆன்மிகவாதியிடம் “ஆன்மாவை நிரூபி” என கோருவதைப் போல. ஒரு காதலனிடம் “உன் அன்பும் ஆசையும் வெறும் ஹார்மோன்களின் குழப்படி” எனச் சொல்வதைப் போல.
சுருக்கமாய் சொல்வதானால், மாற்று சிகிச்சை முறை நம் மொத்த வாழ்க்கை முறையையும் சீரமைக்க உத்தேசிக்கிறது. அலோபதி உடலை ஓர் எந்திரமாகவும், உடலின் கோளாறுகளைத் தனித்தனியாகவும் பார்க்கிறது. இதயக்கோளாறை அது இதயத் தசைகள் மற்றும் தமனிகளின் கோளாறாய் மட்டும் பார்க்கிறது. ஆனால், மாற்று மருத்துவம் அப்படித் தனித்தனியாய் காண்பதில்லை.

மேலும் படிக்க...
https://www.minnambalam.com/k/2018/11/28/4?fbclid=IwAR3XHS7fnGdlLSJE3bLJPDioPLv-CWT9KyuA8YCoZCaAjJDC0j0ZhV22ExI

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...