
பொதுவாக, ஐ.பி.எல்லில் சூதாட்டம் என்றால் நடுவர்கள் கூட ஆச்சரியப்பட
மாட்டார்கள். அது ஒரு பட்டவர்த்தமான ரகசியம். ஐ.பி.எல் என்றால் கொண்டாட்டம் -
ரசிகர்களுக்கு, வீரர்களுக்கு, சூதாட்ட வாடிக்கையாளர்களுக்கு, சூதாட்ட வியாபாரிகளுக்கு, அனைவருக்கும். ஆகையால் அனைவரும் நுகரும்
ஒரு வணிகப் பண்டத்தில் கொஞ்சம் சூதாட்ட நுகர்வும் இருந்து விட்டுப் போகட்டுமே
என்பது வாரிய நிர்வாகிகளின் வெளியே சொல்ல முடியாத தீர்மானம்.
இந்த சூதாட்டம் ஸ்பாட் பிக்ஸிங் என
சொல்லப்படுகிற குறிப்பிட்ட ஓவர்களில் எத்தனை ரன்கள், விக்கெட்டுகள் என ஊகித்து பணம் கட்டும் பாணியிலும் ஆட்டத்தின் முடிவை
கணிக்கும் முறையிலும் நடக்கிறது. ஸ்பாட் பிக்ஸிங்கை சுலபத்தில் கணிக்க முடியாது.
ஏனென்றால் டி 20யில் எந்த ஓவரிலும் யாரும் அடிபடலாம், விக்கெட் இழக்கலாம். உதாரணமாய், ஏழாவது ஓவரில் ஒரு நல்ல ஸ்பின்னர்
இரண்டு வெளிநாட்டு மட்டையாளர்களுக்கு வீசுகிறார், ஆடுதளமும் சற்றே சுமார், 6வது ஓவர் வரை 10 ரன்களுக்கு மேல் சராசரியாய் ஓவருக்கு
அடிக்கிறார்கள் என்றால், ஏழாவது ஓவரில் 8 ரன்களுக்குள் எடுப்பார்கள் என
கணிக்கலாம். இதில் ஒரு பவுலர் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தால் அதை யாரும்
சந்தேகிக்க முடியாது. ஆனால் ஆட்ட முடிவை நம்மால் சுலபத்தில் பெரும்பாலும் ஊகிக்க
முடியும். 3 ஓவர்களில் ஐம்பத்து சொச்சம் என்றால்
மட்டையாட்ட அணிக்கு வெற்றி வாய்ப்பு 3-10 தான். இது போன்ற
சந்தர்பங்களில் பவுலர்கள் சொதப்பி வெற்றியை தாரை வார்க்கும் போது நாம் இது
சூதாட்டமோ என கணித்திட முடியும். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் இடையே இன்று (11-04-19) நடந்த ஐ.பி.எல் ஆட்டம் அப்படியான ஒன்று.
19வது ஓவரில் சேம் கரன் வீசும் போது
மும்பையின் வெற்றி வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாய் இல்லை. இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் தேவை. சேம் கரன் இதற்கு முந்தைய
ஓவர்களில் நன்றாய் யார்க்கர்கள் வீசினார். இதற்கு முன்பான ஆட்டங்களில் அவர் மிக
நெருக்கடியான சந்தர்பங்களில் கூட அலுங்காமல் யார்க்கர் வீசுவார். ஆனால் இன்று
அவரது பந்து வீச்சு சந்தேகத்துக்குரிய விதத்தில் இருந்தது. முதல் பந்தை off sideக்கு வெளியே முழுநீளத்தில் போட்டார்.
இதை நான்குக்கு போக, அடுத்த பந்தையும்
அப்படியே வீசினார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளை இன்னும் கொஞ்சம்
பின்னால் லெங்தில் போட்டார். சிக்ஸர்களாய் விளாசினார் பொலார்ட். அடுத்தடுத்த
பந்துகளை கரன் கச்சிதமான யார்க்கர்களாய் போட்டார். இதில் எனக்கு ஆச்சரியம் அவர்
ஏன் முந்தைய பந்துகளில் யார்க்கர்களை முயலவில்லை என்பது. அவர் முய்னறு அப்பந்துகள்
தவறாய் விழுந்ததாய் தெரியவில்லை. அப்படியான பந்துகள் ஒன்று யார்க்கர் நீளத்துக்கு
அருகிலோ அல்லது புல் டாஸ்களாகவோ இருக்கும். இதற்கு முந்தின ஓவர் முடியும் வேளையில், பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கும் போது, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான
ப்ரீத்தி ஸிந்தா போனில் யாரிடமோ பேசுவதைக் காட்டினார்கள். எனக்கு அப்போதே ஐயம்
ஏற்பட்டது. சேம் கரன் ஓவரில் பஞ்சாப் அணி வீரர்களிடமோ ப்ரீத்தியின் முகத்திலோ
ஆச்சரியமோ கவலையோ இல்லை. ஒரு மொக்கை ஜோக்குக்கு சிரிக்க முடியாதவர்களைப் போல
முகத்தை வைத்திருந்தார்கள். நான் ஒருவேளை சூதாட்டத்தில் ஈடுபடுகிறேன் என்றால் சேம்
கரனின் ஓவர் தான் எல்லார் தலைவிதியையும் மாற்றக் கூடிய ஒன்றாய் இருக்கும்.
பஞ்சாபின் பேரில் பணத்தைக் கட்டியவன் என்றால் நாம் உண்மையில் தலையில் கை வைத்து
உட்கார்ந்து விடுவேன்.
சேம்கரனின் ஓவருக்குப் பிறகு இறுதி
ஓவரிலும் ஆட்டத்தின் போக்கு அலைபாய்ந்தது. தோற்கும் எனும் கட்டத்தில் வெற்றியை
நோக்கி சாய்ந்து கடைசியில் off sideஇல் வீச களத்தை
தயாரித்து விச்சு பவுலர் நேராக அதைப் போன்று இரு ரன்கள் கொடுத்து சொதப்பினார்.
பஞ்சாப் வென்றது. இந்த அலைபாயும் குழப்ப நிலையில் எத்தனை முறை சூதாட்ட
வாடிக்கையாளர்கள் எத்தனை முறை மாறி மாறி பணம் கட்டி இருப்பார்கள்; இதில் சூதாட்ட வியாபாரிகள் பெரிய அளவில்
பணம் அள்ளி இருக்கலாம்.
எல்லாம் ஊகம் தான், ஆனால் இது சற்றே ஊகிக்கத்தக்க ஊகம்.
அதனாலே நம்பத் தக்க ஊகம் என நினைக்கிறேன்.
கருத்துகள்