முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்டமா சூதாட்டமா?



பொதுவாக, ஐ.பி.எல்லில் சூதாட்டம் என்றால் நடுவர்கள் கூட ஆச்சரியப்பட மாட்டார்கள். அது ஒரு பட்டவர்த்தமான ரகசியம். ஐ.பி.எல் என்றால் கொண்டாட்டம் - ரசிகர்களுக்கு, வீரர்களுக்கு, சூதாட்ட வாடிக்கையாளர்களுக்கு, சூதாட்ட வியாபாரிகளுக்கு, அனைவருக்கும். ஆகையால் அனைவரும் நுகரும் ஒரு வணிகப் பண்டத்தில் கொஞ்சம் சூதாட்ட நுகர்வும் இருந்து விட்டுப் போகட்டுமே என்பது வாரிய நிர்வாகிகளின் வெளியே சொல்ல முடியாத தீர்மானம்.

இந்த சூதாட்டம் ஸ்பாட் பிக்ஸிங் என சொல்லப்படுகிற குறிப்பிட்ட ஓவர்களில் எத்தனை ரன்கள், விக்கெட்டுகள் என ஊகித்து பணம் கட்டும் பாணியிலும் ஆட்டத்தின் முடிவை கணிக்கும் முறையிலும் நடக்கிறது. ஸ்பாட் பிக்ஸிங்கை சுலபத்தில் கணிக்க முடியாது. ஏனென்றால் டி 20யில் எந்த ஓவரிலும் யாரும் அடிபடலாம், விக்கெட் இழக்கலாம். உதாரணமாய், ஏழாவது ஓவரில் ஒரு நல்ல ஸ்பின்னர் இரண்டு வெளிநாட்டு மட்டையாளர்களுக்கு வீசுகிறார், ஆடுதளமும் சற்றே சுமார், 6வது ஓவர் வரை 10 ரன்களுக்கு மேல் சராசரியாய் ஓவருக்கு அடிக்கிறார்கள் என்றால், ஏழாவது ஓவரில் 8 ரன்களுக்குள் எடுப்பார்கள் என கணிக்கலாம். இதில் ஒரு பவுலர் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தால் அதை யாரும் சந்தேகிக்க முடியாது. ஆனால் ஆட்ட முடிவை நம்மால் சுலபத்தில் பெரும்பாலும் ஊகிக்க முடியும். 3 ஓவர்களில் ஐம்பத்து சொச்சம் என்றால் மட்டையாட்ட அணிக்கு வெற்றி வாய்ப்பு 3-10 தான். இது போன்ற சந்தர்பங்களில் பவுலர்கள் சொதப்பி வெற்றியை தாரை வார்க்கும் போது நாம் இது சூதாட்டமோ என கணித்திட முடியும். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் இடையே இன்று (11-04-19) நடந்த ஐ.பி.எல் ஆட்டம் அப்படியான ஒன்று.

19வது ஓவரில் சேம் கரன் வீசும் போது மும்பையின் வெற்றி வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாய் இல்லை. இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் தேவை. சேம் கரன் இதற்கு முந்தைய ஓவர்களில் நன்றாய் யார்க்கர்கள் வீசினார். இதற்கு முன்பான ஆட்டங்களில் அவர் மிக நெருக்கடியான சந்தர்பங்களில் கூட அலுங்காமல் யார்க்கர் வீசுவார். ஆனால் இன்று அவரது பந்து வீச்சு சந்தேகத்துக்குரிய விதத்தில் இருந்தது. முதல் பந்தை off sideக்கு வெளியே முழுநீளத்தில் போட்டார். இதை நான்குக்கு போக, அடுத்த பந்தையும் அப்படியே வீசினார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளை இன்னும் கொஞ்சம் பின்னால் லெங்தில் போட்டார். சிக்ஸர்களாய் விளாசினார் பொலார்ட். அடுத்தடுத்த பந்துகளை கரன் கச்சிதமான யார்க்கர்களாய் போட்டார். இதில் எனக்கு ஆச்சரியம் அவர் ஏன் முந்தைய பந்துகளில் யார்க்கர்களை முயலவில்லை என்பது. அவர் முய்னறு அப்பந்துகள் தவறாய் விழுந்ததாய் தெரியவில்லை. அப்படியான பந்துகள் ஒன்று யார்க்கர் நீளத்துக்கு அருகிலோ அல்லது புல் டாஸ்களாகவோ இருக்கும். இதற்கு முந்தின ஓவர் முடியும் வேளையில், பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கும் போது, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஸிந்தா போனில் யாரிடமோ பேசுவதைக் காட்டினார்கள். எனக்கு அப்போதே ஐயம் ஏற்பட்டது. சேம் கரன் ஓவரில் பஞ்சாப் அணி வீரர்களிடமோ ப்ரீத்தியின் முகத்திலோ ஆச்சரியமோ கவலையோ இல்லை. ஒரு மொக்கை ஜோக்குக்கு சிரிக்க முடியாதவர்களைப் போல முகத்தை வைத்திருந்தார்கள். நான் ஒருவேளை சூதாட்டத்தில் ஈடுபடுகிறேன் என்றால் சேம் கரனின் ஓவர் தான் எல்லார் தலைவிதியையும் மாற்றக் கூடிய ஒன்றாய் இருக்கும். பஞ்சாபின் பேரில் பணத்தைக் கட்டியவன் என்றால் நாம் உண்மையில் தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுவேன்.
சேம்கரனின் ஓவருக்குப் பிறகு இறுதி ஓவரிலும் ஆட்டத்தின் போக்கு அலைபாய்ந்தது. தோற்கும் எனும் கட்டத்தில் வெற்றியை நோக்கி சாய்ந்து கடைசியில் off sideஇல் வீச களத்தை தயாரித்து விச்சு பவுலர் நேராக அதைப் போன்று இரு ரன்கள் கொடுத்து சொதப்பினார். பஞ்சாப் வென்றது. இந்த அலைபாயும் குழப்ப நிலையில் எத்தனை முறை சூதாட்ட வாடிக்கையாளர்கள் எத்தனை முறை மாறி மாறி பணம் கட்டி இருப்பார்கள்; இதில் சூதாட்ட வியாபாரிகள் பெரிய அளவில் பணம் அள்ளி இருக்கலாம்.

எல்லாம் ஊகம் தான், ஆனால் இது சற்றே ஊகிக்கத்தக்க ஊகம். அதனாலே நம்பத் தக்க ஊகம் என நினைக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...