முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹெரால்ட் புளூம் எனும் எலும்புக்கூடு (1)


மேற்கத்திய, குறிப்பாக ஆங்கில அமெரிக்க இலக்கிய வரலாற்றின், தலைமைஜீயரானஹெரால்ட் புளூம் (ஜுலை 11, 1930--அக்டோபர் 14, 2019) மரணமடைந்தார் - 89 வது வயதில். யேல் பல்கலைக்கழக பேராசிரியராக நீண்ட காலம் செயலாற்றிய, The Western Cannon, Shakespeare: The Invention of the Human, Poetry and Repression, How to Read and Why ஆகிய பிரசித்தமான நூல்களை எழுதிய  புளூம் இலக்கிய விமர்சனத்தில் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் என்பன இரண்டு:
1) வாசிக்க எளிமையான இலக்கிய அறிமுகங்களை அவர் நிறைய எழுதி இருக்கிறார். இலக்கிய சாதனைகள், இலக்கிய மேதைகள் போன்ற வரிசையில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள். அதை விட அதிகமாக பல்வேறு விமர்சன தொகை நூல்கள். இலக்கியத்தை சுலபத்தில் ஜீரணிக்க விரும்பும் பிஞ்சுவயிறு கொண்ட வாசகர்களுக்கு ஏற்றவர் புளூம்.

 ஒவ்வொரு நல்ல பிரதியும் சுலபத்தில் விளக்க முடியாத படி பல்வேறு சிக்கல்களும் உள்முடிச்சுகளும் கொண்டது. புளூம் இப்பிரதிகளை எழுத்தாளனின் சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் விளக்குவார். இதற்காக அவர் எழுத்தாளனின் வாழ்வை எளிமைப்படுத்தப்பட்ட கருத்துக்களாக்கி, அவற்றை பிராயிடிய உளவியலின் அடிப்படையில் சுருக்கி புரிந்து கொண்டு, அவற்றைக் கொண்டு அவரது படைப்பை ரத்தபரிசோதனை முடிவைப் போல (“அட, உங்களுக்கு ஹெச்..வி பாஸிட்டிங் சார். சாவுங்க!”) எளிமைப்படுத்துவார். இதன் மீது அவர் தனது முரட்டு ரசனையை திணித்துஒழுங்க மரியாதையாக நான் சொல்றதை ஒதுக்கோ, இல்லாட்டி நீ ஒரு மடையன், முட்டாள், ரசனை கெட்டவன்என வாசகனை மிரட்டுவார். மனதளவில் பலவீனமான வாசகர்கள் உடனடியாக புளூமின் காலில் விழுந்து சரணடைவார்கள். அடுத்து அவர்கள், பயத்திலும் சுயவெறுப்பிலும் உள்சுருண்டு, புளூமின் பார்வையை சிரமேல் ஏற்று, ஆங்கில இலக்கியத்தை கொண்டாடி புளகாங்கிதம் கொள்வார்கள்.

2) தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தனி சாதனைகள் என நிறுவி அதன் வழி ஆங்கில நுண்ணுணர்வே, ஆங்கில படைப்புலகமே, கலாச்சாரமே மேம்பட்டது எனும் ஒரு நவகாலனிய ஆக்கிரமிப்பை உலகின் மீது நிகழ்த்தினார். ஷேக்ஸ்பியரை விட்டால் இந்த உலகில் வேறு பெரும் படைப்பாளியே கிடையாது என திரும்பத் திரும்பக் கூறி வெள்ளையனை விட்டால் இந்த உலகில் மேம்பட்ட மனிதனே இல்லை எனும் சித்திரத்தை அவர் உருவாக்கினார். இலக்கியத்தில் அரசியலுக்கு இடமில்லை எனும் கருத்தின் வழி அவர் மேற்சொன்ன விமர்சனத்தை உதாசீனித்து வேறு விடுவார். யார் தன்னை விமர்சித்தாலும் அவரது பதில்போடா அபிஷ்டுஎன்பதாக இருக்கும் (உருவகமாக சொல்கிறேன், அவருக்கு பிராமணத் தமிழெல்லாம் தெரியாது.)

ஹெரால்ட் புளூமை நீங்கள் தமிழில் இருவருடன் ஒப்பிடுவதானால் ஒருவர் .நா.சு மற்றவர் ஜெயமோகன். இந்த இருவரில் ஜெயமோகன் புளூமை விட மேலான விமர்சகர் தான் என்றாலும் இலக்கிய பிரதியை எழுத்தாளனின் வாழ்க்கையைக் கொண்டு விளக்கும் பாணியை வலுவாக நம்பினார். .தா., ஜெ.மோ மனுஷ்யபுத்திரனின் கவிதை / சமூக நோக்கை அவரதுஊனமானஉடல் நிலையைக் கொண்டு நிறுவுவதை பல வாசகர்கள் ஒருவித அதிர்ச்சியுடன் எதிர்கொண்டதைப் போன்றே மேற்கில் பலரும் புளூமின்வாழ்க்கைக்கதைவிமர்சனங்களையும் பீதியுடன் கண்டார்கள்.
.நா.சுவோ தனது வாசிப்பு நுண்ணுணர்வு மேலானது, அதனாலே தான் சிறந்தது என நம்பும் ஒன்று சந்தேகமின்றியே ஒரு சாதனைப் படைப்பு என நம்பினார். ஆகையால் அவர் தன் அபிப்ராயங்களை நிறுவ முயலவில்லை. மாறாக அப்படியே படைப்பில் இருந்து நீண்ட பத்திகளை மேற்கோள் காட்டி விட்டு நிறுத்திக் கொள்வார் (இன்று பேஸ்புக்கில் நாம் பதிவுகளைப் பகிர்வது போல). இந்த மேதாவி அணுகுமுறையும் புளூமுடையதே. புளூம் கூடுதலாக தன் கருத்தை சொல்லி அதையே கதாபாத்திரமும் உண்மையில் உத்தேசிப்பதாக சொல்வார் என்பது மற்றொரு கொடுமை.
 கடந்த 30-40 ஆண்டுகளில் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் புளூமை ஒரு ஆளுமையாகவே இதனாலே பொருட்படுத்தாமல் இருந்தனர். புளூமும் தன் பாட்டுக்குநானும் இந்த கோட்பாட்டுவாதிகளை பொருட்படுத்தவில்லை. சமூக கோபம் என்பது ஒருநாளும் விமர்சனம் ஆகாதுஎன தீர்ப்பெழுதினார். (பின்னமைப்பியல், கட்டுடைப்பு, பெண்ணியம், பின்னமைப்பியல் பெண்ணியம், மார்க்ஸியம் ஆகியவற்றை அவர் எப்படி வெறும் அரசியல் கோபம் என வகுத்துக் கொண்டார் என்பது ஒருவித விசித்திரமே.)


இதன் பொருள் புளூம் ஒரு நுண்ணுணர்வோ வாசிப்பு ஞானமோ அற்றவர் என்பதல்ல. அவர் மிக நுணுக்கமான புத்திசாலியான வாசகர் என்பதை அவரது விமர்சனங்களைப் படிக்கும் எவரும் உணர முடியும். ஆனால் இலக்கியத்தை ஒரு தனி விழுமியமாக கண்டு விமர்சனத்தை ஒழுக்கவியலாக அவர் முன்னெடுத்தார் என்பதே அவரது பிரதான பிரச்சனை. புத்தகங்களை அவர் கையில் சாட்டையுடன் தான் எடுப்பார். “ம்ஹும் இது சரியில்லைஎன்று தூக்கி எறிந்து விட்டு அந்த எழுத்தாளனை முதுகில் ஒருமுறை சாட்டையால் விளாசுவார். அல்லது பூமாலை இட்டு பாராட்டுவார்

கருத்துகள்

SivaKumar Viswanathan இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு மனப்பிறழ்வு ஆசாமி 'நூல்' தெறிக்க புலம்பியிருப்பதை படித்தீர்களா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...