முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசோகமித்திரன் யாருக்கு ஆதர்சமாக இருக்க முடியும்?




அசோகமித்திரன் யாருக்கு ஆதர்சமாக இருக்க முடியும்?

பெப்பர்ஸ் டிவி யுடியூப் சேனலில் ஜெயமோகன்படித்ததில் பிடித்ததுஎனும் நேர்காணலில் பேசுவதைக் கேட்டேன். அதில் ஓரிடத்தில் தன் ஆசான் என அசோகமித்திரனையே குறிப்பிடுகிறார். அவரது படத்தை காந்தியின் படத்துடன் தன் வாசிப்பறையில் மாட்டி வைத்திருப்பதாயும் ஒவ்வொரு நாள் காலையும் அவரைப் பார்க்கும் போது தனக்கு பெரும் உத்வேகம் கிடைப்பதாயும் சொல்கிறார். அதற்கு அவர் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார்:
கடும் வறுமையிலும் அவமானங்கள் நடுவிலும் அசோகமித்திரன் தன்னை எழுத்துக்காக ஒப்புக்கொடுத்து போராடியது - அந்த துணிச்சல், அர்ப்பணிப்பு. ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்.
அடுத்து, தமிழர்கள் பொதுவாகவே எல்லாவற்றையும் மிகையாக உக்கிரமாகப் பேசியே பழக்கம் என்றிருக்க அசோகமித்திரன் சன்னமான குரலில் அடக்கமான தொனியில் சுருக்கமாய் எழுதியவர்.


ஆனால் உண்மையில் அசோகமித்திரன் தமிழ் பொதுப்போக்குக்கு மாறாக எழுதியவர் அல்ல, அவர் ஜெயமோகனுக்கு நேர் எதிரான பாதையில் பயணித்தவர்
ஜெயமோகன் எதையும் மிகையாக ஆவேசமாக பிரம்மாண்டமாக சித்தரிப்பவர்; அசோகமித்திரன் கைக்குழந்தையின் தலைமயிரைத் தடவி விடுவதைப் போல மொழியை கையாண்டவர்; மிகவும் உணர்ச்சிகரமான இடங்களைக் கூட அழுத்தி சொல்லாமல் கடந்து போகிறார்.
 ஜெயமோகன் நியோகிளாசிக்கல் ரொமாண்டிக் பாணி எழுத்தை கையாண்டார், அசோகமித்திரன் மினிமலிஸ்ட் (“வெண்முரசைஅசோகமித்திரன் எழுத முயன்றால் 350 பக்கத்துக்குள்ளாவது முடிக்க முயன்று கைவிட்டு விடுவார்). ஜெயமோகனின் ஐரோப்பிய முன்மாதிரிகளும் அசோகமித்திரனின் முன்மாதிரிகளும் வேறுவேறு. அசோகமித்திரனிடம் காமு, ரேமண்ட் காரர், ஹெமிங்வே போன்றோரின் தாக்கம் தூக்கலாகத் தெரியும். இந்திய வாழ்வின் எதிர்பாராமைகள், போதாமைகள் ஆகியவற்றின் நடுவே மத்திய வர்க்கம் / கீழ் மத்திய வர்க்கம் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து கடப்பதை அசோகமித்திரன் இருத்தலியல் பாணியில் எழுதினார் எனலாம். அவ்வாறு அவர் இருத்தலியத்தை இந்தியப்படுத்தினார் என சொல்லலாம்
ஆனால் ஜெயமோகன் இருத்தலியத்தை ஏற்காதவர்; இருத்தலிய எழுத்துக்கள் மீது அவருக்கு ஒரு பகடியான புறமொதுக்கல் உண்டு. அதற்குக் காரணம் அவர் இருத்தலியத்தை ஒற்றைத்தன்மையான பார்வை என கணிக்கிறார் என்பது. அதற்கு மாற்றாக அவர் பன்முக வாழ்க்கை நோக்குகள் சுழித்தோடும் ஒரு புனைவு வெளியை கட்டமைக்க நினைக்கிறார்; அவருக்கு வரலாற்றெழுத்தில் உள்ள பேரார்வமும் இதற்கு துணை போகிறது. ஆக வரலாற்றில் பல்வேறு போக்குகளுடன் மோதி தன்னை அழித்து இறுதியில் நிலைப்பட்டு ஆன்ம அமைதியை கண்டடைகிறவனே ஜெயமோகனின் நாயகன் ஆகிறான். அசோகமித்திரன் வரலாறு என்று அன்றாட வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் எடுக்க நேரும் சிக்கலான தேர்வுகள்; ஜெயமோகனின் வரலாறு பல ஊடுபாய்ச்சல்கள் கொண்ட அசலான காலம்; அந்த கால நீரோட்டத்தில் நீந்தும் மனிதர்கள் தனித்தனியாக தமக்கான தீவுகளைக் கண்டடைவதும் இந்த போராட்டமே வியர்த்தம், காலம் தான் நிஜமான நாயகன், காலம் தமக்கு மேலாக அனைத்தையும் கடந்து போகிறது என புரிதலைப் பெறுகிறார்கள். (ஜெயமோகனின் எல்லா நாவல்களையும் கிட்டத்தட்ட இந்த டெம்பிளேட்டில் பொருத்திட முடியும்). இப்படி வாழ்க்கையை பார்ப்பதற்கு அவரது மார்க்ஸிய பின்புலம் காரணம் எனலாம்
சுருக்கமாக சொல்வதானால் materialistic dialectics  (பொருள் முதல் ஏரணம்) ஜெயமோகனுக்கு முக்கியம். அசோகமித்திரன் தன் பாத்திரங்கள் இந்த பொருண்மையான முரணெதிர்வை (வறுமையை அவர் வரலாற்று, பொருளாதார காரணிகளால் ஏற்படுகிற ஒன்றாகப் பார்க்காமல் ஒரு அக-வறுமையாக மாற்றுகிறார்) எதிர்கொள்வதை விட கடந்து செல்வதில், அதை உணராமல் நிம்மதியாக வாழ்வதையே முக்கியமாகக் காட்டுகிறார்
காலத்தை எதிர்த்து நிற்பது ஜெயமோகனின் பாணி என்றால் காலத்தோடு அடித்து செல்லப்படுவதை புன்னகையுடன் உணர்த்துவது அசோகமித்திரனின் பாணி.


இப்படி நேரெதிரான போக்கைக் கொண்டவர் ஜெயமோகனுக்கு எப்படி ஆதர்சமாக இருக்கிறார் என்பது விசித்திரமே, அதேவேளை எனக்கும் இது நடந்துள்ளதை சொல்ல வேண்டும் - நான் நாவல் எழுதும் போது எனக்கு நேரெதிரான மொழியைக் கொண்டவர்களையே வாசிக்க விரும்புகிறேன். அப்போது கிடைக்கும் அகத்தூண்டுதல் ஈடற்றது. அதாவது நம் ஆதர்ச நாயகர்கள் நம்மைப் போன்றவர்களாக இருக்க அவசியம் இல்லை. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் (படைப்பூக்கம் கொண்டவர்களுக்கும்) பொருந்துமா எனத் தெரியவில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...