முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகதிகள் குடியுரிமை தான் கேட்கிறார்கள் என உங்களுக்கு எப்படித் தெரியும்?



அரசியல் தத்துவத்தில் புலமை கொண்ட ஒரு நண்பரிடம் இந்த மசோதா பற்றி விசாரித்தேன். அவரது பார்வை எனக்கு பெரிய மனத்திறப்பாக அமைந்தது. அவர் சொன்னதை சுருக்கமாகத் தருகிறேன்:
1) கேள்வி: இது போன்று மதத்தை வரையறையாக வைத்து ஒருவரை அகதியாக தீர்மானிப்பது முன்பு உலக நடைமுறையில் இருந்ததுண்டா?
பதில்: ஆம், ஆரம்பத்தில். சொல்லப் போனால் பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸில் கத்தோலிக்க மதம் ஆதிக்கம் செலுத்திய போது பிற மதத்தவர் கடுமையாக ஒடுக்கப்பட அவர்கள் அகதிகளாய் அடைக்கலம் நாடி புலம்பெயர்ந்து போனார்கள். இப்படி மதத்தின் அடிப்படையில் ஒருவரை அகதியாய் காணும் போது இருந்திருக்கிறது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லர் மதத்தின் பெயரால் யூதர்களை திட்டமிட்டு கொன்றொழித்த பிறகு மத அடிப்படையில் சிலரை மட்டும் அகதிகளாய் ஏற்பது, பிறரை நிராகரிப்பது எனும் போக்கு உலக அளவில் பின்னடைவு பெற்றது; அரசியல் காரணங்களுக்காய் ஒடுக்கப்படுவோரோ அகதிகள் எனும் வாதம் வலுப்பெற்றது. இப்போது மோடியின் ஆட்சியில் நாம் மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் போகிறோம் என்பதே வருத்தத்துக்குரியது.

2) கேள்வி: ஒருவருக்கு குடியுரிமை வழங்குவது ஒரு புறமிருக்க, அவர்கள் உடனடியாய் வாக்குரிமை பெறுவது நியாயமா? வாக்குரிமைத் தகுதிக்காக அவர்கள் சில வருடங்களாவது கூடுதலாக காத்திருக்காமல் உடனடியாய் வாக்களித்தால் அவர்களுக்கு அந்த உரிமையை அளித்த அரசு அவர்களை தேர்தல் கூலிகளாக பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தாதா? மேலும் அவர்கள் குடியுரிமை பெற்றாலும் மனதளவில் அவர்கள் இந்த மண்ணுடன் பிணைப்பு கொள்கிறார்கள், இங்குள்ள அரசியல் சூழலோடு இணக்கமும் அக்கறையும் அது குறித்து புரிதலும் கொள்கிறாரக்ள் என்பதற்கு என்ன உறுதி? தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது அவர்களின் இதயம் இந்தியாவில் தான் இருக்குமா?
பதில்: இரண்டு விசயங்களை இங்கே குறிப்பிட வேண்டும்: உடனடியாக குடியுரிமையுடன் வாக்குரிமையும் பெறுவார்கள் என்பது நிதர்சனம். ஆனால் சட்டத்தின் படி வாக்குரிமையை உடனடியாக அளிப்பது கட்டாயம் அல்ல. .தா. சிறையில் இருப்போருக்கு வாக்குரிமை இல்லை தானே; அதை ஒரு அடிப்படை உரிமையாக நம் அரசியலைமைப்பு காண்பதில்லை. ஆகையால் பத்து-இருபது வருடங்களுக்குப் பிறகு கூட வாக்குரிமையை அளிக்க முடியும். இதற்கு அரசு ஒரு தனிச்சட்டம் கூட கொண்டு வரலாம். சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை கூட இது தான்
இது ஒரு புறமிருக்க, மற்றொரு கேள்வி முக்கியமானது: அகதி உரிமை கோரி வரும் மக்கள் குடியுரிமையை கோருகிறார்கள் என இந்த மசோதா மறைமுகமாய் கோருகிறது. இது அபத்தம். அது எப்படி மத்திய அரசுக்கு உறுதியாகத் தெரியும்? அரசு இங்கே அகதிகளின் பக்கமிருந்து யோசிக்காமல் தன் அரசியல் வியூகத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது. அகதி நிலை என்பதே தற்காலிகமானது. ஒருவர் தன் நாட்டில் உயிர் வாழும் நிலை மோசமாக இருப்பதால், தான் ஒடுக்கப்படுவதால் அகதி உரிமை கோரி வேறு மண்ணுக்கு புலம் பெயர்கிறார் - அவர் தன் குடியுரிமையை மறுத்து புது நாட்டின் குடியுரிமையைக் கேட்டு இங்கு வரவில்லை. இரண்டும் வேறு வேறு. மத்திய அரசு இரண்டையும் குழப்பிக் கொள்கிறது. ஒரு பாகிஸ்தானியர் நாளை இங்கே குடியுரிமை பெற்று விட்ட பின் அவர் திரும்ப தன் நாட்டுக்கே செல்ல விரும்பலாம். அப்போது என்னவாகும்? அவர் இங்குள்ள குடியுரிமையை துறந்து அங்கு மீண்டும் குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க நேரும். பொதுவாக மக்கள் தம் சொந்த நாட்டுக்குத் திரும்புவதையே விரும்புவார்கள் - அவர்களுக்கு குடியுரிமை தருகிறேன் என ஆசை காட்டுவதே புண்ணை சொறிந்து விடுகிறது காரியம். புண்ணை ஆற அனுமதித்து ஆளை வீட்டுக்கு அனுப்புவதே ஒரு மருத்துவர் பண்ண வேண்டிய காரியம். மோடி-ஷா கூட்டணி நோயாளிகளை தன்னுடனே வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முயல்கிறது. அகதி நிலை என்றால் என்னவெனும் தெளிவே அவர்களுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Sir pls read jeyamohan sir old articles.now a days your points going to DMK supported

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...