இப்படி ஒரு செய்தி News18 இணையத்தில்.
//Police in Delhi used facial recognition software to screen crowds at a recent political rally — a first for India — raising concerns about privacy and mass surveillance amidst nationwide protests against a new citizenship law.//
போராடுகிறவர்கள், விமர்சகர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக வரையறுப்பதன் முதல் படி இது. முதலில் ஸ்னைப்பர்களால் சுட்டு மக்களை பயமுறுத்த எண்ணிய அரசு எடுத்திருக்கும் அடுத்த ஆயுதமே போராளிகளை படம்பிடித்து முகங்களை மென்பொருளில் பதிவேற்றுவது. இதன் மூலம் எதிர்க்குரல்களை ஊமையாக்க அரசு முயல்கிறது. இது சட்டவிரோதமானது, ஆனால் அரசே சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் போது அது இயல்பான சட்டபூர்வமான ஒன்றாகிறது.
என்னுடைய ஒரு அச்சம் நாளை இத்தகைய பதிவான நபர்களை அரசு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமோ என்பது! எது வேண்டுமெனிலும் நடக்கலாம்.
கருத்துகள்