முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லெஸ்பியன்களின் விவாகரத்துகள்

சுயபாலினத்தோர் திருமணம் செய்வது நெதர்லாந்தில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சுயபாலின ஆண் ஜோடிகளை விட லெஸ்பியன்களே அதிக அளவில் விவாகரத்து பண்ணுகிறார்கள் என ஒரு சேதி. (https://www.cbs.nl/en-gb/news/2016/13/lesbian-couples-likelier-to-break-up-than-male-couples)

 எனக்கு நான்கு காரணங்கள் தோன்றுகின்றன.

1) ஹார்மோன் மாற்றங்கள் - இந்த ஜோடிகள் கணிசமாய் நாற்பது வயதுக்கு மேலானவர்கள். இந்த பருவத்தில் பெண்ணுடலில் நேரும் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களை நிலையாக இருக்க விடாமல் பண்ணலாம் எனத் தோன்றுகிறது.
2) லெஸ்பியன்கள் இடையில் பத்து வருடத்துக்கு அதிகமாக வயது வித்தியாசம் இருப்பது - பெண் வயதுக்கும் அவர்களின் வாழ்க்கைப் பார்வைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. மனம் ஒன்று தான், ஆனால் வயது ஏற ஏற உடல் சிந்திப்பது மாறுகிறது. 
3) ஆண்களை விட பெண்களுக்கு சமூகரீதியான புறத்தொடர்புகள், அங்கீகாரம் முக்கியம். வழமையான திருமண ஜோடிகளுக்கு இருப்பது போன்ற சமூக அங்கீகாரம், கலாச்சார தளம் ஓரினச் சேர்க்கை தம்பதியினருக்கு இல்லாதது ஆண் ஜோடிகளை விட பெண் ஜோடிகளையே அதிகம் பாதிக்கும் என நம்புகிறேன். அப்போது அவர்கள் மனம் உடையும் தருணத்தில் விவாகரத்தை கோருவதில் ஆச்சரியமில்லை. நம் ஊரில் கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை, நகரமயமாக்கல் பரவலான பிறகு ஹெட்டெரோசெக்‌ஷுவல் தம்பதியினர் மத்தியில் விவாகரத்து அதிகமாகி வருவதைக் காண்கிறோமே. விவாகரத்துக் கொல்லி என ஒன்றைக் கூற முடியுமானால் அது கூட்டுக்குடும்ப, உறவுகள், சாதி சனத்தின் நெருக்கமான வலைப்பின்னல் தான். லெஸ்பியன்களுக்கு அது சுத்தமாக இருக்க முடியாது என்பதால் சதா நூல் மீது நடப்பது போன்றே இருக்கும்.

4) இறுதியாக, பாலியல் விசயத்தில் தொடர்ந்து புது இணைகளை ஆணும் பெண்ணும் நாடுவது இயல்பே. ஆனால் ஆண்கள் தம் சின்னச்சின்ன சபலங்களையும் கடந்து ஒரு ஜோடியுடன் நீண்ட காலம் வசிக்க விரும்புகிறார்கள் - நம்மூரில் கூட ஆண்களை விட பெண்களே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முந்துகிறார்கள். பெண்களின் மனவுலகம் மொழியாலும் உணர்வுகளாலும் கட்டமைக்கப்பட்டது. ஆண்களுடம் ஒப்பிடுகையில் தமக்குப் பிடிக்காதவரை அவர்களால் சுலபத்தில் சகித்துக் கொள்ள முடியாது; அதற்கு அவரைப் பிடிப்பதாக தம்மையே ஏமாற்றிக் கொள்வதே ஒரே வழி. வாய்ப்பிருந்தால் இந்த சுய-ஏமாற்றையும் அவர்கள் விட்டுவிட்டு முகமூடியின்றி இருக்க தலைப்படுவார்கள்.

மேலும் தன் உடல் உணர்வதும் மனம் உணர்வதும் வேறுவேறு என ஆனால் நினைக்க முடியும். பெண்ணால் முடியாது. பெண் மனத்துக்கு பிடிக்காத ஒன்று அவள் உடலுக்கும் பிடிக்காமல் போய் விடும். 

ஆக, லெஸ்பியன் தம்பதியினர் அதிகமாய் பிரிவதில் எனக்கு ஆச்சரியமில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...