முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ லவ் யூவை கட்டுடைத்தால் என்ன எஞ்சும்?



கோர்சராவில் கீர்க்கெகாட் பற்றி ஒரு ஆன்லைன் வகுப்பில் இணைந்திருக்கிறேன். அதன் பகுதியாக ஒரு வாரப் படிப்பு முடிந்ததும் விவாத அரங்கில் ஒரு கேள்வியை எழுப்பி விவாதங்களில் ஈடுபட வேண்டும். நான் எழுப்பிய கேள்வியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

தலைப்பு aporia. இதை தத்துவத்தில் ஒரு பதிலற்ற வியப்பு நிலை என்கிறார்கள். அதாவது, குழப்பமோ அறியாமையினால் விளையும் திகைப்பு அல்ல. மாறாக நாம் அறிகின்ற பதில்களை ஆழமாய் அலசும்போது அவை தர்க்கபூர்மாய் உறுதியற்று இருப்பதை உணர்வது, மாற்றுக்கோணங்களும் அப்படியே பலவீனமாய் இருப்பதை உணரும் போது நாம் பதில் தேடுவதன் நோக்கம் பதிலின்மையை அறிவதே என உணர்கிறோம்.
 சுருக்கமாய் சொல்வதானால் தெளிவான கருதுகோள்கள், நம்பிக்கைகளின் பின்னுள்ள முரண்களை, அபத்தத்தை அறிவது. இதை ஆதிகாலத்தில் பிரசித்தமாக்கியவர் கிரேக்க தத்துவ மேதை சாக்ரெடஸ். அவர் தனது நகைமுரண் எனும் உத்தி மூலம் இதை செய்தார். 
நான் இங்கு தெரிதாவின் கட்டுட்டைத்தலை அபோரியாவுடன் ஒப்பிட முடியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறேன். ஏனெனில் தெரிதாவும் ஒவ்வொரு கூற்றின் பின்னுள்ள உள்முரண்களை, ஒத்திசைவற்ற இருமைகளை அம்பலப்படுத்தி ஒரு திகைப்பு நிலைக்கு வாசகனை ஆட்படுத்தினார். உ.தா., ஐ லவ் யூ என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் உள்ள இருமை எது?
நான் + உன்னை
ஐ + யூ
ஒருவர் தன்னை, தான் யார் என உணர்த்தாமல் மற்றமையான ஒரு காதலன் / காதலியை நேசிப்பதை வெளிப்படுத்த முடியாது. ஆனால் நாம் இதை சொல்லும் போது நம் இதயம் முழுக்க நம் காதலரே நிறைந்திருப்பதாக, இந்த வாக்கியம் அவரைப் பற்றியது என நம்புகிறோம். உண்மையில் இது அவரை விட அதிகமாய் நம்மைப் பற்றி பேசுகிற ஒரு கூற்று. தனக்கு மனநலம் சரியில்லை என நினைக்கும் ஒருவர் ஐ லவ் யூ என சொல்ல முடியுமா? டெக்னிக்கலாக அவர் சொன்னால் அது எடுபடாது. 
நான்-மற்றமை எனும் இருமை ஐ லவ் யூ சொல்லி முடிக்கும் போது அழிந்து அங்கு நேசம் மட்டுமே தங்குகிறது என்பதொரு வினோதம். ஆனால் இந்த தானற்ற பரவச நிலையை நாம் அடைய 'நான்' எனும் உணர்வை முன்னிறுத்த வேண்டும். காதல் ஒரே நேரம் சுயநலத்தின் உச்சம் என்பதையும் அது சுயநலமற்ற நேசம் என்பதையும் ஐ லவ் யூவை கட்டுடைத்தால் நாம் காண்கிறோம். 
காதல் இப்படி ஒரு முரணுக்குள் சிக்கியிருப்பதால் அது என்னவென்றே யாரும் விளக்க முடியாதாகிறது. விளக்கத்துக்கு அப்பாலானது என்பதாலே அது பெரும் திகைப்பை, பரவசத்தை அளிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...